உள்ளும் வெளியும் பாகம் -2

எல்லாம் உடம்புகளைப் பற்றியவை, உன் கதகதப்பான, மென்மையான உடல், என்றன அவை, உடல் என்ற சொல்லுக்கு தடிப்பான ஒலி இருந்தது, பிறகு ‘காதல்’, வேறென்னவிருக்க முடியும், அதே போன்ற தொண்டையின் ஆழத்திலிருந்து வரும் ஒலிப்போடு, ‘ஐ லஹ்ஹ்வ் யெர் பஹ்ர்டி’, அதனால் கடைசியில் அவள் அதை அணைத்தாள். லவ் எனும்போது அவர்கள் பாலுறவைச் சொன்னார்கள் என்றால் சரிதான், போகட்டும், ஆனால் காதல் என்றால் என்ன என்று யாருக்குமே ஏதும் தெரிவதில்லை. ஆனால் நாம் காதலிக்கும் ஒன்றுக்கான சொல், ஒரு சவத்தை வருணிக்கும் அதே சொல்லாக இருக்கையில், நாம் காதலிப்பது ஒரு சவம் என்பது போல ஒலிக்கிறது

உள்ளும் வெளியும்

கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்

பிரசவ வரிகள்

படுக்கையருகே உள்ள சிறு மேஜைமீது உலர்ந்த கண்ணாடிக் கோப்பை இருந்தது, இரண்டு வறண்ட ரொட்டித் துண்டுகள் இருந்தன. அவள் தன் உதடுகளை உறிஞ்சினாள் – தடித்து, வெடித்திருக்கும் கீழ் உதடு முதலில், பிறகு மேல் உதடு – தன் கோரைப்பற்களால் அவற்றைப் பிடித்து மெலிதான உலர்ந்த தோலை உரிக்கிறாள். அவள் நாறிக் கொண்டிருக்கிறாள் – வேறெப்படி இருக்கும், அவளுடைய இரவாடைகளின் கீழேயிருந்து உடல் மாமிசத்தின் வாடை மேலெழுந்து வருகிறது, பாதங்களில் அழுக்கு படலமாக ஒட்டியிருக்கிறது. படுக்கையின் மேல் விரிப்புக்குக் கீழே, அரிப்பெடுக்கிற ஒரு குதிகாலை இன்னொரு காலின் நுனிவிரல்களால் சொரிகிறாள், அழுக்கு அவள் கால் நகங்களின் அடியில் சுருள்கிறது.

முது மது (நாட்படு தேறல்)

சாண்ட்ரா விழுங்குவதற்குச் சில கணங்கள் எடுத்துக் கொண்டாள். “இல்லைதான், உங்களிடம் இருப்பது ஜனங்களே பிரச்சினைகளாக இருந்தாலும்,  அவர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிப் போக வழி செய்வது.”..டாக்டர் கோல் அசைவின்றி அமர்ந்திருந்தார், … “ஆமாம், அது ஒரு பெரும் பங்கு இதிலெல்லாம். நாம் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்காமல் அவற்றிலிருந்து பறந்து போய் விட முடியாது. கடிகாரத்தைத் திரும்பி வைத்து, நிஜ வாழ்வில் ஏற்பட்ட சேதங்களை மற்ற மனிதர்கள் மீது சுமத்த முடியாது. நீ இதைச் சரியாகப் பிடித்து விட்டாய்.”

யார் ஐரிஷ்காரர் ?

இப்போதெல்லாம் என்னோட அழகான பொண்ணு அத்தனை களைச்சுப் போய் வரா, அவ அந்த நாற்காலியில உட்கார்ந்ததுமே தூங்கிப் போயிடறா. ஜானுக்கு மறுபடியும் வேலை போயிடுத்து, ஆனா அவங்க என் உதவியைக் கேட்கறத்தை விட்டுட்டு, இன்னொரு ஆயாவை குழந்தையைப் பாத்துக்கற வேலைக்கு அமர்த்தி இருக்காங்க, அவங்களுக்கு அது கட்டுப்படி ஆகாதுன்னு இருந்தாலும் பரவாயில்லையாம். வேற எப்படி இருக்கும், அந்தப் புது ஆயா ரொம்ப வாலிபம்தான், குழந்தையோட ஓடி ஆடித் திரிய முடியறது.

நாடு கடத்தப்பட்ட லூலூ

அவள் எதிர்காலம் இங்கே (அமெரிக்காவில்) இருக்கிறது: இயற்கை நூலாடைகளுக்குப் புகலிடமான நாட்டில் அகதியாக இருக்க வேண்டி வந்திருக்கிறது. சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பின் ஹாங்காங் நல்லபடியாகத்தான் இருக்கும் என்று சில ஜனங்கள் நம்பினார்கள், ஆனால் ஷுஷுகுடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை. நீங்க பார்த்துகிட்டே இருங்க, நாம எல்லாரும் அருமையான அமெரிக்கப் புறநகர் ஒன்றில் போய் நிற்கப் போகிறோம், என்று அவர்கள் கணித்தார்கள் – லூலுவையும் அந்த ‘நாம எல்லாரும்’ என்பதில் சேர்த்துத்தான் சொன்னார்கள், அதெப்படி இருந்தாலும் ஆர்னி மற்றும் டங்கனின் அம்மாவுக்கு என்னவோ, லூலு நல்ல மனைவியாக அமைவாளா என்பதில் ஐயம் இருந்தது.

மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?

எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன்.

தொள்ளாயிரம் பாட்டிகள்

ஆர். ஏ. லாஃபெர்ட்டி, இந்த எளிய, சுவையான கனியை, அண்ட வெளிக் கொள்ளைக்காரரும், அத்தனை எளிமையானவரல்லாதவருமான மையப்பாத்திரத்தின் முன்னால் தொங்க விடுகிறார். பாத்திரத்தின் பெயர், சேரன் ஸ்வைஸ்குட். சேரன் என்னவோ தான் ஒரு ‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்” ஆள் என்று நினைக்கிறார். அதாவது மேன்ப்ரேக்கர் (மனிதரை உடைப்பவன்) என்றோ பாரல்ஹௌஸ் (பீப்பாய் வீடு) என்று முரட்டுத் தனமான பெயர்களைக் கொண்ட தன் சகபாடிகளைப் போல அல்லாது, தான் பண்பட்டவன் என்றும் நினைக்கிறார். அவர்களோ அத்தகைய பெயர்கள், அடித்துப் பிடுங்கவோ, கொள்ளை அடிக்கவோ உதவுகின்றன என்று நினைக்கிறார்கள். ‘சேரன் ஸ்வைஸ்குட்’ என்ற பெயரோ, அதிசயமான…. கிடைப்பதற்கரிய பொருட்களைத் தேடிப் பிடிப்பவரான ஒருவருக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.

மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு

“லாஃபெர்ட்டி” கதை ஒன்றை முதல் முறையாகப் படித்த தருணத்தை நினைத்துப் பாருங்கள். அது “லாண்ட் ஆஃப் த க்ரேட் ஹார்ஸஸ்” ஆக இருக்கலாம், அது ஜிப்ஸிகளின் வேர் மூலத்தை விளக்குகிறது, புதுப் பாதை ஒன்றை வகுத்துக் கொடுத்ததும், ஹார்லன் எல்லிஸனால் பதிப்பிக்கப்பட்டதுமான ‘டேஞ்சரஸ் விஷன்ஸ்’ புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒருகால் நெபுலா பரிசை வென்ற கதைகளின் தொகுப்பு ஒன்றில்“யுரேமாஸ் டாம்” கதையை நீங்கள் படித்திருக்கலாம். அல்லது வீணான நிலையில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில், இஃப் பத்திரிகையின் பழைய பிரதி ஒன்றை அகழ்ந்தெடுத்து, அதில் பிரசுரமான “பூமர் ஃப்ளாட்ஸ்” கதையைக் கண்டிருக்கலாம். அந்தக் கதையில் பிரபலமான மூன்று அறிவியலாளர்கள், டெக்ஸஸ் மாநிலத்தின் வளர்ச்சி பெற்றிராத ஒரு மூலைக்குப் பயணம் போகிறார்கள்,

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள்

மறுபடியும் இசை மாறியது. ஏதோ முற்றிலும் புதியதாக – எளிமையானதாகவும், களிப்பூட்டுவதாகவும்- உருமாறியது. அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதைப் பார்த்து ஸோர்கின் குதூகலித்ததாகத் தெரிந்தது. “பிகாஸ் த வோர்ல்ட் ஈஸ் ரௌண்ட், இட் டர்ன்ஸ் மீ ஆன்,” என்று பாடினார், ஆனால் அவர் பாடியது மோசமாக இருந்தது. “பிகாஸ் த விண்ட் ஈஸ் ஹை, இட் ப்ளோஸ் மை மைண்ட்.”….“இது பீட்டில்ஸ்! யோகோ ஓனோ ஒரு நாள் ‘மூன்லைட் ஸோனாட்டா’வை வாசித்துக் கொண்டிருந்தார், ஜான் லென்னன் சொல்கிறார்: எனக்கு அந்தச் சுர வரிசையைத் தலைகீழாக் கொடு!”

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2

“நீண்ட இழை மேபிள் (மரம்),” என்றார் ஸோர்கின், சுட்டியபடி. “பழைய ஸிட்கா ஸ்ப்ரூஸ் (மரம்). வார்ப்பு இரும்பு. நிக்கல். பதினெட்டு அடுக்குகள் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கின்றன, பார். அது யூரியா ரெஸின் ஒட்டுப் பசை. இதற்கு முன்னால் ஒரு காலத்தில் இதுவே மிருகத் தோல்களிலிருந்து காய்ச்சிய ஊன்பசையாக இருந்தது.”
அவர் கம்பிகளின் மேல் தன் கையைத் தடவினார். “எஃகிரும்பு. கூடவே செப்புக் கம்பியில் சுற்றிய எஃகிரும்பு.”
“இப்ப இங்கே பார்,” என்றார் அவர். “இது அத்தனை சிறப்பு. காஷ்மீர் (கம்பளம்).” அவனுடைய வியப்பைப் பார்த்து அவர் சிரித்தார். “ஆமாம், காஷ்மீர். திருப்பு முனைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.”

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1

காய்கறிகளை வெட்ட உதவும் ஒரு சிறு பலகையையும், சீவுவதற்குப் பயன்படும் கத்தி ஒன்றையும் வெளியே எடுத்தார். சாக்லெட்டின் மீது கத்தியால அழுத்தி வெட்டுமுன்னர், கத்தியை இப்படியும் அப்படியும் நகர்த்தி அலைத்தார், பிறகு ஓரிடத்தில் இலேசாகப் பொருத்தினார். எதனுள்ளும் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதைத் தன் வாய்க்குள் போடுவது அவருக்கு ஏற்காது. கத்தி இறங்கி, சாக்லேட்டுக்குள் காரமெல் இருப்பதைக் காட்டியது. ஒரு பாதித் துண்டை எடுத்து அதைத் தின்றார். அதைத் தின்னும்போதே, சிலர் அந்த சாக்லேட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலே அந்த சாக்லேட் முழுவதையும் குருட்டுத்தனமாக வாயிலிட்டுத் தின்று விடுவார்கள் என்று நினைக்கவும் அவர் உடலில் நடுக்கம் பரவியது. 

கயோட்டீ கதைகள்

“வெறும் கதைகள். நீ, நான், எல்லாரும், நாமெல்லாம் கதைகளின் ஒரு கூட்டம், அந்தக் கதைகள் என்னவாக இருக்கின்றனவோ அதெல்லாம்தான் நாமாக இருக்கிறோம். பழங்குடிகளைப் போலவேதான் வெள்ளையருக்கும். ஒரு பழங்குடிச் சமூகத்துக்கும், நகரத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்குமே இதேதான் பொது. இந்தக் கதைகள் எல்லாமாகச் சேர்ந்து, எப்படிப் பின்னிச் சேர்கின்றனவோ அதெல்லாம்தான் நாம் யார், என்ன, எங்கே எப்படி இருக்கிறோம்னு சொல்லுதுங்க.”

“மறக்கிறத விட்டுட்டு நினைவுபடுத்திக்க ஆரம்பிக்கணும் நாமெல்லாம். இது வேணும், அது வேணுமின்னு கேட்கறதை நிறுத்தணும், நமக்கு வேணுமுன்னு நாம நினைக்கிறதை ஜனங்க நமக்குக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கறதை நிறுத்தணும். நமக்குத் தேவையானதெல்லாம் கதைங்கதான்.

தந்திரக்கை – பாகம் 3

This entry is part 3 of 3 in the series தந்திரக் கை

அவள் கல்லூரியில் படிக்கப் போய், திருமணம் செய்து, ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் -அல்லது கட்டுப்பாடுகளுக்கு எந்த விருப்பமும் இல்லாமலும், அதன் பெரும் பகுதியில் ஒரு கட்டுப்பாடும் இல்லாமலும்,  குடும்பவாழ்வில் அமிழ்ந்து போன, அந்த நகரின் முதல் எல்லைப்புற புற நகர்களைக் கடந்தபோது விடிகாலை ஆகி இருந்தது. நகரம் அசைவற்று முன்னே கிடக்கும் நகைகளைப் போல இருந்தது, எப்போதோ ஒரு சமயம் பொலீஸ் சைரன் ஒலியும், தீயணைப்பு வண்டிகளின் ஆரவாரமும், நாய்களை ஓலமிடச் செய்தன. அவள் தன் வீட்டு நிறுத்துமிடத்தில் ப்யூயிக்கை நிறுத்தினாள், வீடு அப்படிக் கைவிடப்பட்டதான, அவாந்தரமான தோற்றம் அளித்ததைக் கண்டு துணுக்குற்றாள். நீ காணாமல் போனபோது, உன்னைத் தொடர்பு கொள்ள ஒரு வழியும் வைக்காதபோது, என்ன ஆகுமென்று நினைத்தாய்?  அவள் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை, ஆனால் அங்கேயே சிறிது நேரம் நின்றாள்

தந்திரக் கை – 2

This entry is part 2 of 3 in the series தந்திரக் கை

ஆனால் சிங்கங்களும் சரி, மிருகக் காட்சி சாலையும் சரி, அவளுக்குக் காண முடியவில்லை. அவள் தொலையவில்லை, இல்லவே இல்லை, ஒரு நிமிஷம் கூட இல்லை. அவள் சூரியஒளியில் சிரித்தபடி, வழியில் அவளை நோக்கிக் குதித்து வந்த நாய்களைக் கொஞ்சியபடி, நடந்து போய்க் கொண்டு மகிழ்வாக இருந்தாள். நாய்களின் சொந்தக்காரர்கள் அவளுடைய பெற்றோர் எங்கே என்று கேட்டால், அவள் போகிற திக்கில் உறுதியாகச் சுட்டி, ‘அதோ, அங்கேதான்,’ என்று சொல்லி விட்டு, அவர்கள் அதைப் பற்றி ஏதும் யோசிக்கு முன்னர், சிரித்தபடி மேலே நடந்து போனாள். ஒவ்வொரு கிளை பிரியும் சாலையிலும், அவள் நின்று கவனமாகக் கேட்பாள், என்ன ஒலி கேட்டாலும் அது சிங்கங்களெழுப்பும் ஓசை என்று எடுத்துக் கொண்டு போனாள். ஆனால் சிங்கங்கள் இருக்குமிடம் கிட்டே வரும்பாடாக இல்லை. அது கடைசியில் மிக எரிச்சலூட்டுவதாக ஆயிற்று.

தந்திரக் கை – 1

This entry is part 1 of 3 in the series தந்திரக் கை

சவ அடக்க நிகழ்ச்சி இருந்தது- அவள் இருந்தாள், ஆனால் அங்கே இல்லை- மேலும் பொலீஸ்காரர்கள், பிறகு ஒரு வழக்கறிஞர்; ஆலனின் சகோதரி எல்லாவற்றையும் நிர்வகித்திருந்தாள், எப்போதும் போல, தலையிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த அந்தக் கடங்காரிக்கு இந்த ஒரு முறை அவள் உண்மையில் நன்றியுணர்வு கொண்டாள். அதெல்லாம் இப்போது மிகத் தொலைவாகி இருந்தன, நன்றியுணர்வும், பழைய வெறுப்புணர்வும் எல்லாம், ஒரு கணம் கட்டுப்பாடு இழந்து மூடிக் கொண்ட, அந்தப் பையனின் கண்ணிமைகளால் ஒன்றுமில்லாதவையாக ஆகிப் போயின.

எரியும் காடுகள் – 4

This entry is part 4 of 4 in the series எரியும் காடுகள்

எரியும் காட்டுக்குள் ஆழப் போனேன். என்னைச் சுற்றி எங்கும் மஞ்சள்- ஆரஞ்சு நிறமாக ஆகும்வரை, தீய்ப்பதாக இருந்தது. நான் அப்போது காட்டின் தரையில் அமர்ந்தேன், ஜ்வலிக்கும் கங்குகள் கருத்த ஆகாயத்திலிருந்து புரண்டு விழுவதைப் பார்த்திருந்தேன்.
துப்பாக்கி ரவை நம் மூளைக்குள் குடைந்து போவது போகும்போது எப்படி உணர்வோமோ அப்படித்தான் எரியும் மரங்களும் தெரிந்தன. மரங்களில் வலியை உணரும் திசுக்கள் இல்லை அதனால் நெருப்பு அந்த மாதிரி வலியாகக் கொணராது. அது தூலமானதல்ல. அது எல்லாவற்றின் இறுதியிலும் இருக்கும் நியாயத்தின் நெருப்பு. நிரந்தரமான, மாற்ற முடியாத தவறுகளையெல்லாம் எரிப்பது, உலகின் விளிம்பிலிருந்து பறந்து போவதைப் போன்றது. அது கடைசி ஒலியின் தாக்கும் எதிரொலி….

எரியும் காடுகள் – 2

This entry is part 2 of 4 in the series எரியும் காடுகள்

துடுப்பு என் மடியில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டேன், மிச்சமிருந்த சாண்ட்விச்சை வெளியே எடுத்தேன். ஒரு துண்டு விடாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டேன், பின்னர் அதைச் சுற்றி வந்த மேல் காகிதத்தைப் பயன்படுத்தி, பனித் துகளைச் சேகரித்து அதை வாய்க்குள் திணித்துக் கொண்டு சாப்பிட்டேன். நான் ஏற்கனவே நிறைய வியர்த்திருந்தேன், பசியை விட உடலில் நீரிழப்பு என்பது மோசமாகப் பாதிக்கும், நான் இருக்கும் இடத்தை உத்தேசித்தால் அப்படி நடப்பது அங்கதச் சுவை கொண்டதாகத்தான் இருக்கும். ஏரித்தண்ணீர் குடிக்கக் கூடியதாக இருந்திருக்கும், ஆனால் நான் ஏற்கனவே வேண்டுகிற அளவு ஆபத்தை மேற்கொண்டிருந்தேன்.

எரியும் காடுகள் – 1

This entry is part 1 of 4 in the series எரியும் காடுகள்

நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது.

தீர யோசித்தல் – இறுதிப் பாகம்

This entry is part 3 of 3 in the series தீர யோசித்தல்

ஆய்ந்தறிவோர் போலப் பேசுவது மட்டுமே ஒருவரை அப்படிச் சிந்திப்பவராக்கி விடாது. தனக்கே தெளிவில்லாத தன் துவக்க நிலைப்பாடுகளைப் பற்றி ஒருவர் தொண தொணக்கலாம், அல்லது தன் முன் நிலைப்பாடுகளைத் தான் மறு வார்ப்பு செய்வதாகப் பேசலாம், ஆனால் நிஜத்தில் அவர் சாதாரணமான, நன்கு வார்ப்பாக்கப்பட்ட கருத்துகளையே கொண்டவராக இருக்கக் கூடும். இப்படி ஒரு போலி உருவை நம்மிடம் காட்டுவதை அவர் போன்றவர்களுக்கு கூகிள் எளிதாக்கி விடுகிறது. ஒரு பல்கலை ஆய்வுத்துறையில் தனியொரு பிரிவில் ஆழப் படித்துத் தேர்ந்து விட்டதான, ஒரே வாரத்தில் ஒரு முனைவர் பட்டத்தைப் பெற்று விட்டதான பிரமையைப் பிறருக்கும், தனக்குமே கூட அவர் கட்டியெழுப்பிக் கொள்ள கூகிள் உதவுகிறது.

சாவைப் படைத்த எழுத்தாளன்

‘என்னால வர முடியும்னு தோணலைப்பா!’ அவர் சன்னமாகச் சொன்னார், சிறுமையைத் தரித்தவராகத் தெரிந்தார். ‘அந்த ஜன்னல் வழியே நான் பார்த்தால், எனக்குத் தெரியறதெல்லாம் இரண்டு பரிமாணத்தில்தான் இருக்கிறது.’
நாங்கள் திரும்பி, இருவருமாக அங்கே பார்த்தோம். வெளியே ஒளி மங்கிக் கொண்டிருந்தது. ‘அது கூட அத்தனை கிடையாது,’ என்றார் அவர். ‘எனக்கு ரெண்டே வாக்கியங்கள் தான் கிடைக்கிறது. “வெளியே குளிராக, சாம்பல் நிறமாக, தட்டையாகத் தெரிந்தது.” அடுத்து, “சில இலைகள் ஆடி அசைந்து அந்த மரத்திலிருந்து மெதுவாகக் கீழே அந்த நடைபாதை மீது விழுந்தன, அவை பழுப்பாகவும், தங்க நிறமாகவும், செத்துப் போனதாகவும் இருந்தன.” அவ்வளவுதான்.’

சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்

This entry is part 2 of 3 in the series தீர யோசித்தல்

“ஆய்ந்தறிந்து பேசுதல்” என்ற பாட்காஸ்ட்டை நடத்துபவரும், செயல்முறை ஆய்வறிவுக்கான லாபநோக்கில்லாத மையம் ஒன்றை பெர்க்லியில் நிறுவத் துணை நின்றவருமான கேலெஃப், இந்தக் கருது பொருளைப் பற்றி எழுதிய புத்தகத்தில் ‘ஆய்தறிதல்” என்ற சொல்லை மிக அரிதாகவே பயன்படுத்துகிறார். மாறாக அவர், “சாரணர் மனோபாவம்” ஒன்றை விவரிக்கிறார். அது நமக்கு “சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்”

தீர யோசித்தல்

This entry is part 1 of 3 in the series தீர யோசித்தல்

இதற்கிடையில், அமெரிக்கர்களில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்; பலர் சதித்திட்டங்கள் பற்றியும், போலி அறிவியல் முடிவுகளையும் நம்புகிறார்கள். நாம் சிந்திப்பதில்லை என்று சொல்ல முடியாது- நாம் தொடர்ந்து படிக்கிறோம், கருத்து சொல்கிறோம், விவாதிக்கிறோம் – ஆனால் நாம் செய்வதை ஓட்டமாய் ஓடியபடி, நம் செல்ஃபோன்களில் வம்புவதந்தி பரப்பித் தொல்லை செய்யும் புன்மதியாளர்களைப் பார்வையைக் குறுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தடக் குறிப்புகள் – 4

This entry is part 4 of 4 in the series தடக் குறிப்புகள்

“எங்களுடைய பாரம்பரிய முறைகள்தான் எங்களைக் காப்பாற்றப் போகின்றன- ஸ்வீட்க்ராஸ், புகைபிடிக்கும் குழாய், நீராவிக் குளியலறை, அவைதான் எங்களைக் காப்பாற்ற முடியும். போதைப் பழக்கமும், போதை மருந்துகளும், வறுமையும் எங்கள் வாழ்க்கை முறையாகிவிட்டன, பண்பாடாகவே ஆகி விட்டன என்கிறார்கள் எங்கள் முதியோர்கள், ஆனால் நாங்கள் அதை மாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.” அவர் உற்சாகமாகப் பேசினார். “நாங்கள் எங்கள் பாரம்பரிய முறைகளைக் கொண்டு இதையெல்லாம் மாற்ற வேண்டும். அதற்குத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.”

சொல்வனம் வழங்கும்… கிண்டில் புத்தக வெளியீடு

சொல்வனம் வெளியீடாக “வீடும் வெளியும்” நூல் கிடைக்கிறது. இது அமேசான் கிண்டில் மூலமாகக் கிடைக்கும் சொல்வனம்.காம்-இன் மூன்றாவது புத்தகம். முந்தைய இரண்டும் சிறப்பிதழ்கள் என்றால், இந்தப் பதிப்பு எங்கள் ஆசிரியர் குழுவில் ஒருவரான ச. அனுகிரஹாவின் படைப்புத் தொகுப்பு.

தடக் குறிப்புகள்

This entry is part 3 of 4 in the series தடக் குறிப்புகள்

இது ரொம்பவே மோசம், தாங்க முடியாத சோகம்.
அவனுடைய இறுதிச் சடங்கில் நான் பேசப் போறேன், எனக்குச் சொல்லவேண்டியதெல்லாம் தலைக்குள்ளே முழுசாக இருக்கு, ஆனால் அவன் போய்ட்டதாலெ எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னு தெரியாத மாதிரி இருக்கு, வக்காளி, எனக்கு உன்னைத் தேடறதுடா, நான் உன்னை எத்தனை விரும்பினேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கக் கூடாதான்னு என் மனசு எப்படி ஏங்கறதுன்னு சொல்றதைத் தவிர வேறென்ன சொல்ல.

தடக் குறிப்புகள் -2

This entry is part 2 of 4 in the series தடக் குறிப்புகள்

“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”
நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.
“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”
இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.

பையப் பையப் பயின்ற நடை

சொல்வனம் பத்திரிகையின் 250 ஆம் இதழைப் பற்றிச் சில எண்ணங்கள்.   சில பத்திரிகைகள்- மேலும் இதர பண்பாட்டு வெளிப்பாடுகள்- எடுத்த எடுப்பிலேயே உசைன் போல்ட் தடகளத்தைக் காற்று வேகத்தில் கடப்பது போல, அசாதாரண லாகவத்துடன், துரிதத்துடன் செயல்படத் துவங்கி விடுகின்றன.  சொல்வனம் துவக்கத்திலிருந்து மதலை போல நடை பழகத் “பையப் பையப் பயின்ற நடை”

தடக் குறிப்புகள்

This entry is part 1 of 4 in the series தடக் குறிப்புகள்

“சாதாரண மக்களை” பேட்டி எடுத்து, அவற்றை ஒரு டேப் ரிகார்டரில் பதிவு செய்வது நோக்கம். அதன் மூலம் நாட்டின் மாநகர்கள், சிறு நகரங்கள், மற்றும் தொலை தூரங்களில் கிடக்கும் இடங்களின் “பின்னலிணைப்பை”ப் புரிந்து கொள்வது மேம்படும். அமெரிக்கா என்பது என்ன? நம்மை அமெரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்வதன் அர்த்தம்தான் என்ன? மானியத் தொகையை என் வாழ்வின் அடுத்த ஓரிரு வருடங்களை அமெரிக்காவுக்கான “தேடலில்” செலவிடப் போகிறேன் என்று நான் சொன்னபோது, அந்த மேஜையின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த ஒருவர் (ஏளனமாக) தன் கண்களை மேல்நோக்கிச் சுழற்றியதை நான் பார்த்தேன். இன்னொருவர் சிரிக்கவும் செய்தார்.

வரைபடத்தில் இருக்கும் இருண்ட வெளிகள்

ஆனால் நீங்கள் அவரைப் பற்றி ஏதும் எதிர்மாறாகச் சொல்லப் போவதில்லை, ஏனெனில் அப்படிச் சொல்லும்படி துலக்கமாக ஏதும் இல்லை. உங்களுக்குத் தெரிகிற வரை அவர் யாருக்கும் ஏதும் கெட்டது செய்யவில்லை.

தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

அண்டவெளியின் பெரும்பரப்பில் ரேடியோ அலைகள் வெகு வேகமாக க்ஷீணிக்கின்றன, அவள் விளக்கினாள். தொலைதூர நட்சத்திரங்களின் சுற்றுப் பகுதியில் உள்ள கோள்களிலிருந்து அண்டவெளியின் பாழில் யாராவது தொடர்புக்கான செய்திகளை விநியோகித்துக் கொண்டிருந்தால், அவர்களுடைய அண்மையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தாய்மொழிகள்

உன் இதயம் ஒரு துடிப்பை இழந்து மறுபடி செயல்படுகிறது. அது லிலியனின் கல்லூரிச் செலவு மொத்தத்தையும் சமாளிக்கும், அதற்கு மேலும் கொஞ்சம் மிஞ்சும்- அது ஒரு கவர்ச்சிகரமான தொகை.

தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

இரண்டு ஈஸோப்ட்ரான்கள் சந்திக்கும்போது, அவர்கள் ஒன்றாக இணையலாம், அவர்களின் ஜவ்வுகளிடையே ஒரு சுரங்கப் பாதை போல உருவாகும். இந்த முத்தமிடும் இணைப்பு மணிக்கணக்காகவோ, பல நாட்களாகவோ, வருடங்களாகவோ நீடிக்கக் கூடும்.

வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக்

நகுல சகதேவர்களுக்கும், ஆக்டேவியா பட்லருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இவரும் ஓரளவு நாடுகடத்தப்பட்டு, அகதி போல வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த ஆஃப்ரிக்க இனப் பெண்மணி என்பது ஒரு ஒற்றுமைக் குணமாக இருக்குமோ?
ஆனால் தான் பட்ட துன்பங்களின் சாரத்தை யோசிக்கும் ஆக்டேவியா பட்லருக்கு, மனிதரில் ஒரு சாராருக்குப் பிறரின் துன்பத்தைச் சிறிதும் உணர்ந்து பார்க்கும் திறன் இல்லை என்பது நன்கு புரிந்திருக்க வேண்டும். அதற்கு எதிராக சிலருக்கு சுற்றிலும் இருப்பவர்களின் எல்லா மனத் துயரங்களும் (சந்தோஷங்களும்தான்) உடனே புரிவதோடு அவற்றைத் தம்முடைய உணர்வுகளே போலப் புரிந்து கொள்ளும், உணரும் திறன் கிட்டினால் என்ன ஆகும் என்பதுதான் அவர் கற்பனை.

புத்தெழுச்சி இயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் -2

இந்த விசாலமான வங்காளத்தின் விவசாயிகளின் குடிசைகளில், அந்த அன்னையின் ஆற்றுப் படிக்கட்டிகளில், நெல் வயல்களில், ஆலமரத்தடி நிழல்களில், அவளுடைய நகரங்களின் மையத்தில், பத்மா ஆற்றின் மணல் கரைகலில், மேக்னா ஆற்றின் அலை உச்சிகளில்- நான் இந்த தேசத்துடைய, மேலும் அதன் மக்களுடைய ஒரு குறிப்பிட்ட வடிவைக் கண்டேன், அதை நான் ஆழமாக நேசித்தேன்… இந்தப் பேரன்பு தந்த ஊக்கம்தான் என்னை இந்தப் புத்தகத்தை எழுதச் செய்தது. .. எனக்கு இன்றைய வரலாறைப் போலவே, பண்டை வரலாறும் உண்மையாகவும், உயிருள்ளதாகவும் இருக்கிறது. அந்த உயிருள்ளதும், உண்மையானதுமான கடந்த காலத்தைத்தான், உயிரற்ற எலும்புக் கூட்டை அல்ல, நான் இந்தப் புத்தகத்தில் கைப்பற்ற முயன்றிருக்கிறேன்.”

வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்

This entry is part 4 of 13 in the series வங்கம்

வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.

சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு

This entry is part 5 of 13 in the series வங்கம்

இந்தப் படத்தில் ஒப்பு மின்சாரத்தை முதல் முறையாக எதிர்கொள்கிறான். (கல்கத்தாவில் அவனுடைய அறையில் ஒரு மின்சார பல்பு பொருத்தப்பட்டிருக்கிறது, அதை அவன் தன் அம்மாவுக்கு மகிழ்ச்சியோடு எழுதுகிறான்.) முதல் படத்தில் எதிர்காலத்திலிருந்து வந்த மாயாஜாலப் போக்குவரத்து சாதனங்களாகத் தெரிந்த ரயில் வண்டிகள் இப்போது ஒப்புவின் அன்றாட வாழ்வில் பகுதியாகி விட்டிருக்கின்றன.

நார்டிக் மர்ம இலக்கியத்தைக் கொன்றது யார்?

விற்பனை என்று பார்த்தால் லார்ஷொன் விதிவிலக்கான ஆனால் பிரும்மாண்டமான ஓர் அளவை அடைந்திருந்தார், அவருடைய (லிஸ்பெத்) ஸாலாண்டெர் வரிசைப் புத்தகங்கள் உலகெங்கும் 10 கோடி (1000 லட்சம்) பிரதிகள் போல விற்றிருக்கின்றன. ஒப்பீட்டில் யோ நெஸ்போ, இந்த வகை இலக்கியத்தின் எழுத்தாளர்களில் உயிரோடிருப்பவர்களில், மிக்க வெற்றி பெற்ற ஒருவர், அவர் தன் ஒரு டஜன் நாவல்களின் மூலம் 400 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறார்- மாங்கெல்லோடு ஒப்பிடத் தக்க அளவு விற்பனை இவருடையது…

கத்திகளின் மொழி

உடலின் சுத்தம் மிகவும் முக்கியமானது. ஒரு சிறு கண்ணீர்ச் சொட்டு அந்தப் படையலைக் கெடுக்கக்கூடும். ஒற்றை முடிகூட கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்படும் அந்த ஆத்மாவைக் குலைக்கக்கூடும்.…

அமிழ்தல்

அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

மற்றவர்கள் வாழ்வுகள்- 2

ஜான் ஹாவர்ட் க்ரிஃபின் என்பாரைச் சற்று கவனியுங்கள், 1950களில் இவர் தன் தோலைக் கருப்பாக்கிக் கொண்டார், அவருடைய வார்த்தைகளில், “நீக்ரோவாக” தீர்மானித்தாராம். ஜிம் க்ரோ நிலவிய அமெரிக்கத் தென் பகுதிகளில் தான் பயணித்தபோது கிட்டிய அனுபவங்களை அவர் ஒரு புத்தகமாக எழுதினார், “ப்ளாக் லைக் மீ” என்ற அந்த நூல் ஏராளமாக விற்பனை ஆனது. ….
அந்த எழுத்தாளருக்கு, தெற்குப் பகுதிகளில் பயணம் செய்யும் ஒரு கருப்பின ஆணுக்கு எப்படி இருக்கும் என்பதை, தன் அனுபவமாகத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்திருக்கிறது போலத் தெரிகிறது. எவ்வளவு நல்ல எண்ணத்தோடு செய்திருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுவதற்கு அவர் தவறான நபர் என்று வாதிட இடமுண்டு.

மற்றவர்களின் வாழ்வுகள்

எழுதுவதற்குத் தேவை விவரச் சேமிப்பும், அதில் கிட்டும் அறிவும்தான் என்றால் கலைஞர்களின் எல்லாச் சங்கடங்களும் மேன்மேலும் ஆராய்வு செய்தால் தீர்ந்துவிடும்; கற்பனை என்பது கணக்கிலேயே வராது. எழுதுவதற்கு ஒரு எழுத்தாளரை உந்துவது எது என்றால், அது தன் விவர ஞானம் குறித்த அவரது தன்னம்பிக்கை இல்லை. மாறாக, அவர் தனக்கும் பாத்திரங்களாகப் போகிற நபருக்கும் (அல்லது நபர்களுக்கும்) இடையே சக்தி வாய்ந்த ஒரு பிணைப்பை உணர்கிறார், அந்தப் பிணைப்பு இடர்கள் நிறைந்த அந்தப் பயணம் மேற்கொள்வதைப் பயனுள்ளதாக்குகிறது.

மர்மமான அந்தச் சிலெ நாட்டான்

அந்த இரு புத்தகங்களும் கருக்கு இழந்திருப்பதைப் பார்த்த பிறகு, “நீங்கள் இவற்றைப் படிக்கிறீர்களா,” என்று அதிர்ஷ்டமில்லாத செர்க்காஸ் வியப்புடன் கேட்கிறார்….
“பின்னெ, இல்லையா?” பொலான்யோ பதிலளிக்கிறார். “நான் எல்லாவற்றையும் படிக்கிறேன். தெருவில் காற்றில் அடித்துப் போகும் துண்டுக் காகிதங்களைக் கூட.” அவர் அந்த நாவல்களைப் பாராட்டுகிறார்,

குற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி

ஓர் இளைஞனாக சல்வாடிகோ இருக்கையில், பல விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார், அவற்றில் சில, வாயைக் கட்டி நடத்தும் அடக்கு முறை கிருஸ்தவ மதத்தின் விசாரணையை மறுபடி கொணர்தல், பொதுவில் சவுக்கு/ தடியடித் தண்டனை, …பலதார மணம், ஆர்ஜண்டீனிய இனம் இனிமேலும் மாசுபடாமல் இருக்க பழங்குடி அமெரிக்கர்களை கொன்றழிப்பது, யூத ரத்தம் உள்ள எந்தக் குடிமக்களுடைய உரிமைகளையும் கட்டுப்படுத்துவது, ஒழுக்கக் குலைவு காரணமாக நாட்டின் பழங்குடி மக்களோடு கலவி புரிந்து கருமை கூடிப்போன நாட்டு மக்களின் தோல் நிறத்தை படிப்படியாக வெளுப்பாக்குவதற்காக ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்து ஏராளமான குடியேறிகளைக் கொணர்ந்து குடியமர்த்துவது….

சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி

அது, “எச்.டியின் படைப்பு வேலையைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்த ஓர் அன்பான குடும்பம்,” என்று (உ)வேட் எழுதுகிறார். எச்.டி எழுத ஆரம்பிக்கும்போது, ப்ரெய்ஹர் எப்படித் தன்னை அந்த படிப்பறையின் வாயிலிலிருந்து தூக்கி எடுத்துப் போய் விடுவார் என்று பெர்டிடா நினைவு கூர்கிறார்; தன் அம்மா வேலை செய்யும்போது அவரைத் தொல்லை செய்யக் கூடாதென்று மிகச் சிறு வயதிலிருந்தே அந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. (சமகாலப் பெண் எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு அப்படி ஒரு சுதந்திரம் அனுபவிக்கக் கிட்டி இருக்கும்?)

க்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]

சூஸன் சாண்டாக், பதினைந்தாம் நூற்றாண்டில் மேக நோயைக் (ஸிபிலிஸ்) குறிக்கவிருந்த பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார்- இங்கிலிஷ்காரர்கள் அதை “ஃப்ரெஞ்சு அம்மை,” என்று சொல்கையில், ”பாரி நகரத்தார்களுக்கு (பாரிஸ்) அது “மார்பஸ் ஜெர்மானிகஸ்”, நேபிள்ஸ் நகரத்தில் அது ஃப்லாரெண்டைனியர்களின் நோய், ஜப்பானியர்களுக்கு அது சீன நோய்.” என்று எழுதினார். நாம் எல்லாரும் கொள்ளை நோய்கள் வெகு தொலைவிலிருந்து நமக்கு (அழையா) விருந்தாளியாக வருகின்றன, அவை நம்முடைய வியாதிகள் இல்லை, ஒரு போதும் நம்முடைய பிழையால் வந்தவையும் இல்லை, என்று நினைக்க விரும்புகிறோம்.

டெம்பிள் க்ராண்டின்: பேட்டி

சிலருக்கு, அவர்கள் படிக்க முயல்கையில், அச்செழுத்துகள் பக்கங்களில் குலுங்குவது போல உணர்வார்கள். அவர்கள் பெரும்பாலும் ‘எழுத்துக் கோர்வைக் குழப்பம்’ (டிஸ்லெக்ஸிக்) உள்ளவர்களாக தரம் பிரிக்கப்பட்டு விடுவார்கள். இதில் விஷயம் என்னவென்றால், இந்த அச்செழுத்து குலுங்கும் பிரமையை, சில சமயம் அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நிறத்தை மாற்றினால் போதும், நீக்கி விடலாம். வேறு வெளிர் நிறக் காகிதங்களில், உதாரணமாக, வெளிர் லாவெண்டர், வெளிர் சாம்பல், வெளிர் நீலம் என்று பலவகை வெளிர் நிறக் காகிதங்களில் அச்சடித்தால் இந்தக் குறை ஏற்படுவதில்லை. இது ஏன் வேலை செய்கிறது என்பதை நான் அறியேன்.

நண்பனா, வாதையா?

தேய்வழக்காகப் போயிருக்க வேண்டிய ஒரு கதையை இப்படித் தடம் மாற்றி, ஆனால் இதே போன்ற கதைகளின் பல அம்சங்களைக் கைவிடாமல் கதையில் நுழைத்து, சாமர்த்தியமாக நயாகரா மீது கட்டிய கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் ஸிக்ரிட் நூன்யெஸ். நாய் என்பது கயிற்றில் நடப்பவருக்கு மிக உதவியாக இருக்கும் விரித்த குடை, அல்லது கையில் நிலைப்பைக் கொடுக்க வைத்திருக்கும் நீண்ட கம்பு. சோகத்தில் இவர் மூழ்காமல் இருக்க உதவும் மிதவை அந்த நாய். நாவலின் விசித்திரம் என்னவென்றால் ஒரு சாவின் சோகத்திலிருந்து மீள்பவர் சாகத் தயாராகும் இன்னொரு ஜீவனால் தேறி வருவதுதான்.

முறைப்படியான ஒரு பதில்: பாகம்-2

கான்லன், நாங்கள் எல்லாரும் ரகசியமாக சான் ஃப்ரான்ஸிஸ்கோவுக்குப் போய் விடலாம், அவர் மட்டும் தனியே அந்த ஊரில் இருந்து விமானச் செலவுக்குப் பணத்துக்குத் திண்டாடி எப்படியாவது வரட்டும் என்று யோசனை சொன்னார். அப்படி ஏதும் எங்களால் செய்ய முடியவில்லை. அவர் செத்துப் போயிருந்தால் கூட, அவருடைய சாம்பலை நாங்கள் திரும்ப எடுத்து வர வேண்டி இருந்திருக்கும்; ஏனெனில் அவர் அமெரிக்காவில் பின்னே தங்கினால் அவர் அமெரிக்காவிற்குத் தாவி விட்டார் [3] என்று சீன அரசு கருதும், அவருடைய உள்நோக்கங்களைக் கணிக்காததற்கும், அவருக்கு இந்தப் பயணம் இப்படித் தாவ வாய்ப்பளிக்கும் என்பதை அறியாததற்கும் எங்களைக் கண்டிக்கும்.

நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி

மாற்று வேலைகள் கிட்ட வாய்ப்பில்லாத நிலையில் ஏராளமான அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்தில் கிட்டும் உதவித் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வரிசையில் நிற்கிறார்கள். மிகச் சமீபத்துக் குத்து மதிப்பில் 1 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதாவது அமெரிக்கத் தொழிலாளர்களில் சுமார் 13% பேர்கள் வேலையில்லாமல் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது.