சீர்பொருட்கள் வீட்டுக்குள் வரும்போதே பஞ்சவர்ணம், “எல்லாத்தையும் வெளியேயே வையுங்க. ஊரார் பார்க்கணும். அதுதான் எங்களுக்குப் பெருமை. அப்புறமா எங்களோட தோதுக்கு எதை எங்க வைக்கணுமோ அதை அங்க வச்சுக்குறோம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்.
Tag: முனைவர் ப.சரவணன்
நிறங்கள்
இன்றோடு பின்னக் கணக்கு முடிந்தது. இன்று அவர் கண்ணாடி வளையல்களை அணியவில்லை. கைகள் வெறுங்கைகளாகவே இருந்தன. ஆனாலும் பழைய பழக்கத்தில் அவர் எழுதுவதற்கு முன்னர் தன் வலது முன்கையைப் பிடித்து, அழுத்தி, பின்னுக்குத் தள்ளிக்கொண்டார்.
பலிபீடம்
என் கழுத்தைப் பற்றியிருந்த பாகற்கொடி, என்னிடம் பேசத் தொடங்கியது.
“எதைப் பலிகொடுக்க உள்ளாய்?” என்று கேட்டது.
“எதற்குப் பலிகொடுக்க வேண்டும்?” என்று கேட்டேன்.
“என்னை விதைத்தவரைப் பக்குவப்படுத்த வேண்டியது என் கடமை. நீதான் என்னை விதைத்தாய். நான் உன்னைப் பக்குவப்படுத்த வேண்டும். நீ பக்குவப்பட வேண்டும் என்றால், நீ உன்னில் இருக்கும் தீய குணத்தை இங்குப் பலியிட வேண்டும்” என்றது.
“என்னிடம் எந்தத் தீய குணமும் இல்லையே!” என்றேன்.
மரப்படிகள்
என்னுடைய கார் கிராமத்துக்குள் நுழைந்து, மணியக்காரரின் வீட்டுவாசல் நின்றது. நானும் அம்மாவும் இறங்கினோம். மணியக்காரர் சுவர்களைப் பிடித்துப் பிடித்து தள்ளாடியபடியே நடந்து வந்து, எங்களை வரவேற்றார். மணியக்காரரின் பேத்தி எங்களுக்கு மோர் கொடுத்தார். பருகினோம். அவர் அந்த அரண்மனை வீட்டின் சாவியை எடுத்து அம்மாவிடம் கொடுத்தார். சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த அந்த வெங்கலச் சாவியை அம்மா ஒரு குழந்தையை ஏந்துவதுபோல தன்னிரு கைகளிலும் வைத்துக்கொண்டார்.
ஓவியா
மாணாக்கர்களின் பெயர்ப் பட்டியலைப் படித்துப் பார்த்தேன். பெரும்பாலும் எந்தப் பெயரும் தூய தமிழ்ப்பெயராக இல்லை. ‘தமிழ்நாட்டில்தான் நான் வாழ்கிறேனா?’ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. பத்துப் பெயர்களைத் தாண்டியவுடன் என் கை நின்றது. என் பார்வை ஒரு பெயரின் மீது பதிந்தபடி இருந்தது. இமைகளைப் பலமுறை சிமிட்டிய பின்னர் மீண்டும் அந்தப் பெயரைப் படித்தேன். ‘ஓ வி யா’.
கற்றளி
“ஒரு பெரிய ஆளுமை எப்பவுமே தன்னை உலகறியச் செய்ய ஒரு புது உத்தியைக் கையாளும். உடனே, அடுத்த பெரிய ஆளுமையும் ‘தன்னைத்தான் இந்த உலகம் பெரியவனாக ஏத்துக்கிட்டுக் கொண்டாட வேண்டும்னு’ நினைக்கத் தொடங்கிடும். அங்கதான் பெரிய சிக்கலே தொடங்குது” என்றார்.
…“ஒரு பெரிய விஷயம் செஞ்சு முடிச்ச அந்தப் பெரிய ஆளுமையைவிட விஞ்சி நிற்குறதுக்காக அடுத்த ஆளுமை அந்தப் பெரிய விஷயத்தை அழிச்சுட்டு வேறு ஒன்றை அதைவிடப் பெரியதாகச் செய்ய நினைக்கும். அல்லது அந்தப் பெரிய விஷயத்தை அழிக்காமலேயே அதைவிடப் பல மடங்கு பெரிசா செய்யத் தொடங்கும். அதனால இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் இடையே ‘நீயா? நானா?’ போட்டி ஆரம்பமாகும்” என்றார் தாத்தா.
ஆசையின் சுவை
தயிர்ப்பச்சடி, உருளைக்கிழங்கு சிப்ஸ், காளான் பிரியாணி ஆகியன அந்த இலையில் குவிந்திருந்தன. மற்றொரு வாழை இலையினால், இந்த உணவு இலையை மூடினான். வெற்றுப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, கீழே வந்தான். அவற்றையும் கழுவினான். உரிய இடத்தில் வைத்தான்.