நசி தோசையைத் தின்னாமல் அதை துண்டுதுண்டாகப் பிய்த்து அழகு பார்த்தாள். ‘என்னை நான் கவனித்துக் கொள்வேன். என் எதிர்காலத்துக்காக இன்னொரு குழந்தையை வரவழைக்க வேண்டாம். அதற்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டால்… அஜீரணம் என்று மருத்துவரிடம் போக, அவர் வயிற்றில் கான்சர் என்று சொல்வதுபோல ஆகும்.’