தீண்டா நதி

மனிதர்களில் தான் எத்தனை வகை! அதிலும் ஒரு சமோசாவை மனித மனம் எப்படியெல்லாம் வித்தியாசமாக சாப்பிட நினைக்கிறது! என் அருகில் இருந்தவர் சமோசாவின் தோல்பகுதிகளை தனியே எடுத்துவிட்டு மசாலாவை மட்டும் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர். அதன் பொருட்டு தோலுக்கும் மசாலாவுக்குமான பிரிவினைவாத முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வழிப்போக்கர் ஒருவர் “ஜெயிந்திபுரம் எப்படி போறது” என்று அவரிடம் கேட்டபடி வந்தார். கிரைம் பிராஞ்ச் பக்கம் கைகாட்டி, “இப்படியே நேரா போங்க ஒரு சாக்கடை வரும் அதை ஒட்டின தண்டவாளத்தை தாண்டி லெப்ட்ல போனா வந்துரும்” என்றார். அவர் எதை சாக்கடை என்று சொன்னார் என்று அறிந்த நான் கொதித்தெழ வேண்டும்தான்.

லூர்து நாயனார்

பழைய கதைகளைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கதைகளைப் படிக்க சில “வெப் சைட்”களை அறிமுகம் செய்துவைத்தேன். வாட்ஸ் அப்பில் சில சந்தேகங்களைக் கேட்டார். சொல்லிக்கொடுத்தேன். ‘வீபூதிப் பிள்ளையாருக்கு எதித்தாப்பல இங்க ஒரு கிளிக்கூண்டு இருந்ததே, எடுத்துட்டாங்களா?’ என்றேன். ‘அடேயப்பா, அதாச்சு கொள்ள வருஷம். அம்மன் கைல நின்னாலும் நின்னுச்சு, ஒரு பத்து பதினஞ்சு கிளியைப் பிடிச்சு கூண்டுல போட்டுட்டாய்ங்க, நல்ல வேளையா புது ‘தக்கார்’ எல்லாத்தையும் வெளில விட்டுட்டாரு. . . ‘ என்றார் படியேறிக்கொண்டே. “சார், நீங்க மதுரைல கிளி பாத்துருக்கீங்களா, நான் ஒண்ணே ஒண்ணு கூட பாத்ததில்லை. நான் படிச்சதெல்லாம் பக்கத்தில கிராமங்களிலேதான். அங்க கூட” என்றேன்.

எம்.எல்- இறுதி அத்தியாயங்கள் – 22-23

ஜீப் அவனை ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு எங்கோ வெளியே சென்றது. ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது. பொழுது மங்கலாக விடிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எந்த ஊர், எந்த இடம் என்று நிதானிக்க முயன்றான்.  “போயி அவனுகளோட உக்காரு…” என்று கையை நீட்டிச் சொன்னார்.  அவர் கையை நீட்டிய இடத்தில் நாலைந்து பேர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது.. “வா.. சோமு..” என்ற துரைப்பாண்டியின் குரல் கேட்டது. ஒரு வித ஆச்சரியத்துடன் அவர்கள் இருந்த பக்கம் போனான். ஸ்டடி சர்க்கிளுக்கு வருகிறவர்களெல்லாம் இருந்தனர். எல்லாருமே வெறும் ஜட்டி, அண்டர்வேருடன் இருந்தார்கள். “நீயும் உன் வேட்டிய அவுருடா..” என்றார் போலீஸ்காரர். சோமு அவமானத்தால் கூனிக் குறுகினான். வேட்டியை அவிழ்க்காமல் தயங்கினான். அவரே அவன் இடுப்பிலிருந்த வேட்டியை உருவினார். சோமுவுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டான். துரைப் பாண்டியும் இன்னும் இரண்டு பேரும் “சாரு மஜும்தார் வாழ்க… மாவோ வாழ்க…” என்று கத்தினார்கள். போலீஸ்காரர் அவர்களைக் காலால் உதைத்தார்.