உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்

தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.

பருவம் – சகாப்தத்தின் குரல்கள்

This entry is part 1 of 48 in the series நூறு நூல்கள்

மகாபாரதம் என்ற இதிகாசத்தின் பாதிப்பு இல்லாத இந்திய எழுத்தாளர் இல்லை. இன்றும் கதை கூறும் முறையில் மாகாபாரதமும், இராமாயணமும் முக்கியப் பங்கை வகிக்கின்றன என்றாலும் மகாபாரதம் இலக்கியங்களில் அதிகமாக இடம் பெறும் ஒன்று. தமிழில் பாரதியார் துவங்கி ஜெயமோகன் வரையில் அதை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். பருவம் என்பதை பல “பருவம் – சகாப்தத்தின் குரல்கள்”

இனிய நினைவு

இயற்கையிலேயே மகாபாரதக் கதையின் மீது எனக்கிருந்த ஆர்வமே பர்வ நாவலை மொழிபெயர்த்ததற்கான முதல் காரணம். பைரப்பாவின் கதைப்பின்னல் எப்போதும் உணர்ச்சிகரமானதும் வேகமும் கொண்டது. அதன் மீது எனக்கு எப்போதும் விருப்பமுண்டு. எங்கோ நடைபெற்ற கதையாக அன்று, நம் கண் முன்னால் நடைபெறுகிற ஒரு கதையாக நம்பகத் தன்மையுடன் அவர் படைப்புகளைப் படிக்கலாம்.

யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றி

தனது படைப்புக்களில் பகுத்தறிவு சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திய அனந்தமூர்த்தி மக்களின் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பற்றிய விஷயத்தில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். ஷிமோகா மாவட்டம் சந்திரகுத்தி என்னும் கிராமத்திலுள்ள ரேணுகாம்பா தேவியை வழிபடுபவர்கள் (எல்லா வயதிலுமுள்ள ஆண்களும் பெண்களும்) வருடா வருடம் மார்ச் மாதம் நடக்கும் திருவிழாவில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நிர்வாண வழிபாடு செய்வார்கள். ….பகுத்தறிவாளர்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் பிறகு அரசாங்கம் இதைத் தடைசெய்தது. அப்போது மூடநம்பிக்கை, ஆன்மீகம், பகுத்தறிவு பற்றிய பெரும் விவாதம் எழுந்தது. இந்த நிர்வாண வழிபாட்டை அனந்தமூர்த்தி ஆதரித்தார். ஆழ்ந்த இறையுணர்வில் ஒரு மறைபொருள் அனுபவத்தைத் தரும் நம்பிக்கை சார்ந்த இந்தப் பழக்கம் தனிப்பட்டவரின் உரிமை சார்ந்தது. இதில் பகுத்தறிவுக்கு இடமில்லை என்றார்.