உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்

தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி

1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம்.  என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”

மொழியும் மௌனமும் வாழ்க்கையும்

குறிப்பான்கள், குறிக்கப்படுபவை என எத்தனையோ விரிவான தளங்களில் மொழி பற்றியும் மொழியியல் பற்றியும் ஆராய்ச்சிகளும், நூல்களும் உள்ளன. ஆனால் அன்று மனத்தில் தோன்றியது எல்லாவற்றையும் விட முக்கியமானது மொழி என்பது தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒரே ஒரு நபரையாவது அது எட்ட வேண்டும். அப்படியானால் நமக்கான மொழியை, நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் மொழியை எவ்வாறு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா? மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா? அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா? மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா? அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா? இதுபோன்ற கேள்விகளுக்குக் கொண்டுபோய்விட்டது அந்த மொட்டைமாடி உலாத்தல்.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்