ஒரு குழந்தை அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு பித்தன் அறிந்ததை
நான் அறியவில்லை
ஒரு மூடன் அறிந்ததை
நான் அறியவில்லை
அறிந்தவை எல்லாம்
அற்ப ஆயுளில் அழிந்துபோக
எனக்கு முன்னும் பின்னுமாய்
இருக்கும் வாழ்க்கையில்
நான் எங்கு இருக்கிறேன்
Tag: புஷ்பால ஜெயக்குமார்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அவன் ஒன்றை
எழுத எத்தனித்தான் .
தனிமையிலிருந்தான்,
தேவை இருந்தது.
அவனை அடைய அதுவே வழி.
இப்பொழுது மொழி மட்டுமே அவன்.
அவன் சொல்தான் அவனது காலம்.
முன்பு இருந்ததும்
தற்போது எழுதப்போவதும்
ஒன்றல்ல என்று
நிரூபணம் செய்ய முற்பட்டான்.
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அடர்ந்த காட்டில்
எங்கோ ஒரு மூலையில்
அவன் தென்படுகிறான்
இப்பொழுது நகரத்தின்
ஒரு வீட்டிலிருக்கும்
அறையில் அவன் இருக்கிறான்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அன்றிரவு அச்சிறுவயதில்
வானத்திலே மகிழ்ச்சியுடன்
குதிரை வண்டியிலே
பயணம் செய்தேன்
எனக்கு இருக்கும்
பாதுகாப்பு அதற்கில்லாமல்
குதிரை வண்டி
பெரியதாக இருந்தது
எல்லோரும் மாடியின்
உச்சிக்குப் போவதுபோல்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
செய்தித்தாள் போடும் பையன்
நாளின் தொடக்கத்தை
சைக்கிள் மணி அடித்து
விழிக்கச் செய்தான்
இரவில் குளித்த காலை
இன்னும் ஈரமாக இருந்தது
அப்படியே இருக்கப் போவதில்லை எதுவும்
அடுத்த நாள்
அதே போல் தான் என்றாலும்
அது ஒரு புதிய நாள்
இன்னும் விடியவில்லை
பொக்கிஷமான ஒன்று
முழுதாக மறையப் போகிறது
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அது புதைக்கப்பட்டிருக்கிறது
யாருக்கோ தெரிந்திருக்கிறது
நீட்டி முழக்கி
எழுதப்பட்ட ஆவணத்திலும்
அதன் பயங்கர பயணம்
தெரிந்ததே ஒழிய
விடை ஏதும் காணவில்லை
ஓராயிரம் முறை ஆடினாலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏப்ரல் கவிதைகள்
நான் சிறுவனாக இருந்த போது
நகரத்தில் இருக்கும் சாலைகளைப் போல்
எண்ணற்ற வாழ்க்கைப் பாதையிலிருந்து
ஒரு பயணத்தை நானாக
எதுவும் தொடங்கவில்லை
இன்றோ நான் அனாதியாய்
ஒன்றும் இல்லாதவனாய்
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்
மனிதன்
விழிக்க வேண்டி
மாற்றத்தை நோக்கி வெட்கமில்லாமல்
என் விருப்பத்தின்
சாவியைத் தேடுகிறேன்
முழு இருளில்
எனக்குக் கிடைக்கும்
அர்த்தம் தான் வெளிச்சம்
நகரம், அவன் & கவிதை
இத்தனை மனிதர்கள்
நகரங்களில் அல்லாடுவதைப்
பொருளாதாரத்தின் கணக்குப்பிள்ளை
கூட்டிக் கழித்து
கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான்
நித்தியமானவன் – கவிதைகள்
நான் இதுகாறும் பெற்ற அனைத்தையும்
தொலைத்து விட்டு பிச்சைக்காரனாய்
அந்த வானத்தின் கீழ் நின்றேன்
அன்று பூத்த மலரை
என் பழுதடைந்த கண்களால்
நெருக்கமாகப் பார்த்தேன்
கனவுகளை இறைத்த தோட்டத்தில்
நான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
எனது நிலையற்ற
நியாயத்தின் உண்மை
நிரூபிக்கப்பட்ட போது
அப்பொழுதுக்கு அப்பொழுதென
சாத்தியத்தில் என் மனம்
வழியை விட
நான் காத்திருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
என் மனம் கரைவதை
நான் பார்த்தேன்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
சாலையில் நடந்த மக்கள்
ஈஷர் ஓவியம் போல்
இங்கும் அங்கும் என
நடந்துகொண்டிருந்தார்கள்
அது எது
எனக்குக் கேட்காத ஒன்று
யாரோ ஒருவர் தனித்து
கேட்டுக்கொண்டிருக்கிறார்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பறந்து வந்த பறவை
அமர்ந்த கிளைக்கு
கணத்தில் உயிர் வந்து போனது
இலைகளுக்கும் முட்களுக்கும்
நடுவில் பூத்த ரோஜா
அதனை சமன் செய்தது
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
அந்த அறையில் இருந்தவனை
புத்தகத்தின் வழியே
வெளி உலகிற்கு
அழைத்துச் சென்ற அது
அவனை மீண்டும்
அவ்வறைக்கே அழைத்து வந்து
எழுதச் சொல்லியது
கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்
எதுவும் அப்படியே இருப்பதில்லை
காலை மாலை இரவென
விரட்டிய போது
அதில் நான்
சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இப்படியாயின்
ஒரு வயோதிகனின்
அந்தரங்கத்தின் ஆசை
மேலே மிதந்து வந்தது
இடம், தபால்காரன் & மனதின் பாதை
ஒரு நினைவில் தப்பிய மனிதனாகிய நான்
வீணாய் எனது உடலின் சுமையைச் சுமப்பவன்
வழுவாத சலிக்கும் பாதையில் நடப்பவன்
பேசி தீர்த்துக் கொள்வதற்கு
மொழி இல்லாதவன்
நான் எல்லோரையும்
சமாதானம் செய்து கொள்கிறேன்
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
எத்தனை பேசினாலும்
புரிந்தது போக
மிச்சம் நிறைய இருந்தது
சொல்லில் பொருள்
கொண்ட காலம்
கடந்துபோன நிலையில்
ஆதி மனிதனின்
கவலை இங்கே எடுபடவில்லை
ஒன்றை இருவர் பேசினால் இரண்டாகிறது
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
மீண்டும் உயிர் வாழ்வது
பிணம் பிழைத்த கதை தான்
நாளடைவில் அது அடையாளமாக
தோல்வியுற்ற நான்
ஆடும் ஆட்டத்திலிருந்து
தள்ளி நின்றேன்
இடைவெளி என்பது மரணம்
புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்
தொடர்ச்சியாக வரும் இவர்கள் யார்
என்றால் அவர்கள் இல்லாமல் வேறு யார்
மனிதர்களுக்குள்ளே மனிதர்கள்
ஓடுவது உறவுகள் என்றால்
படியில் விழும் பந்தை எடுக்கத்
தலைமுறைகள் தேவைப்படுகிறது
புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்
எழுதப்படுவதும் எல்லாமும் ஒன்றொன்றாக
மீதி என் கேள்விகள் தேவைகள் விருப்பங்களென
நான் தேடுகிறேன் குப்பைகள் பறக்கும் என் மனதில்
காத்திருக்கிறேன் காரியம் கைகூடுமென
வரிந்து கட்டிக்கொண்டு ஆழ்மனத்திலிருந்து
வந்து விழுகிறது நம்பிக்கை தரும் கனமான சொல்லொன்று
அதுவே இதுகாறும் பிறப்பித்த விதையின் விருட்சம்
புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்
நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்
எனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே
மிகைகொள்ளாது நிலைபெற்ற வழியில் வெடித்தபோது
வெளியே நடமாடுகிறேன் நான்