புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அடர்ந்த காட்டில்
எங்கோ ஒரு மூலையில்
அவன் தென்படுகிறான்
இப்பொழுது நகரத்தின்
ஒரு வீட்டிலிருக்கும்
அறையில் அவன் இருக்கிறான்

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அன்றிரவு அச்சிறுவயதில் 
வானத்திலே மகிழ்ச்சியுடன் 
குதிரை வண்டியிலே 
பயணம் செய்தேன்  
எனக்கு இருக்கும் 
பாதுகாப்பு அதற்கில்லாமல் 
குதிரை வண்டி 
பெரியதாக இருந்தது 
எல்லோரும் மாடியின் 
உச்சிக்குப் போவதுபோல் 

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

அது புதைக்கப்பட்டிருக்கிறது
யாருக்கோ தெரிந்திருக்கிறது
நீட்டி முழக்கி
எழுதப்பட்ட ஆவணத்திலும் 
அதன் பயங்கர பயணம் 
தெரிந்ததே ஒழிய 
விடை ஏதும் காணவில்லை 
ஓராயிரம் முறை ஆடினாலும் 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏப்ரல் கவிதைகள்

நான் சிறுவனாக இருந்த போது
நகரத்தில் இருக்கும் சாலைகளைப் போல்
எண்ணற்ற வாழ்க்கைப் பாதையிலிருந்து
ஒரு பயணத்தை நானாக
எதுவும் தொடங்கவில்லை
இன்றோ நான் அனாதியாய்
ஒன்றும் இல்லாதவனாய்
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்

எழுத்து, மனிதன், நாய்

நான் அந்த எழுத்துக்களின்
மீது அடர்த்தியான இலைகள்
கொண்ட ஒரு மரத்தை வைக்கிறேன்
பிறகு ஒரு தெருவை வைக்கிறேன்
….
இப்பொழுது அந்த தெருவில்
நடந்து சென்ற அந்த மனிதர்கள்
அந்த இரவிலும்
அதற்கு முன் அந்த இருளிலும்

திடீரென மழை வரவே
எல்லோரும் நனைந்தார்கள்
எழுதிய காகிதத்தில்
இருந்தவர்களும் நனைந்தார்கள்

மொழியின் ரகசியம் – கவிதைகள்

உலகத்தில் ஒருவனாக
நான் சுவாசிக்கும் காற்று
பிரபஞ்சம் எனக்களித்த உணவு
என் துயரம் என்னை
ஒரு மரம் போல்
ஆழமாக வேரூன்றச் செய்தது