நேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்றத்தில் சறுக்கி, தேவையான அளவு மென்மையை சேர்த்து கடைசியில் முறையிடலாக முடித்தார். அவசரப்படுத்தலின் மூலம் காரியம் வெற்றி பெறவைத்துவிடமுடியும் என்கிற நினைப்பு இருப்பதுபோலத் தோன்றியது. அன்றைய தினவியாபார வெற்றிக்கும், மற்றொரு நாளுக்காக சின்னமீனாலான தூண்டிலைப் போலவும் அந்தக் கூவல் இருந்தது. ஆனால் அசராமல் கூவியபின், அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக, ஒருநாளும் தோன்றியதில்லை. மூன்று முறை சாவதானமாகக் கூவிவிட்டார் அந்த அக்கா. ’எலுமிச்ச வேணுங்களா…