தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 10 in the series தெய்வநல்லூர் கதைகள்

ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.

உங்க வீட்ல தங்க விளைய..

போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா,   அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது  முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு   கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”

அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 22 in the series அதிரியன் நினைவுகள்

வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…

மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு

நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும். கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்

அணங்கு கொல்?

அதில் அந்த பெண் கொஞ்சம் பெரியவளாக இருபதுகளின் இறுதியில் இருப்பவள் போல இருந்தாள். அவளும் மராத்திக்கட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.கூட இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக குழந்தைகள்.” வாம்மா! வாங்கோடா கண்களா!” குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆயி கேட்டாள் “என்னடி பார்வதி! உங்க மடிசார் கட்டிக்காமல் நம்ம கட்டு கட்டிண்டு இருக்கே ”

குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்

அந்த குறுக்குத்தெருவுல மழ பெஞ்சு ஓஞ்சிருந்துச்சு. அங்கங்க தண்ணி. அதுசேரி, மழத்தண்ணிக்கு இன்னா ஒட்டா ஒறவா? எங்கல்லாம் பள்ளம் இருந்துச்சோ அங்கல்லாம் மழத்தண்ணி தேங்கிகெடந்துச்சு. எந்த வூட்டு சன்னல்லருந்தோ ஏதோ ஒன்னு தொப்புன்னு ஒரு பள்ளத்துல விழுந்து தவமணி மேல சகதி தெறிச்சுச்சு. அத்த தொடச்சிக்கிட்டே தவமணி வானத்த அன்னாந்து பாத்தா , அந்த குறுக்குத் தெருவுக்குள்ளாருந்து பாத்தா வானங்கூட குறுகலாதான் தெரிஞ்சுச்சு. வேகமா நடந்து அந்த தெருவோட மொனைக்கு வந்தா. கொஞ்சம் தயங்கி அந்த பக்கமும் இந்த பக்கமும் நடந்தா. எங்குட்டு திரும்புனாலும் அங்க ரோடு குறுகலாத்தான் இருந்துச்சு.

இயற்கைப் பரிமாற்றம்

அவளுடைய பிரத்தியேகமான படுக்கையறை கதவுக் குமிழில் தொங்கிக்கொண்டிருந்த தோள் பையில், அவள் அன்றைய காலை வேட்டையில் கண்டெடுத்த பொருட்களை வைத்தாள். தோள் பையில் அவளது மகன் நீல் கண்டெடுத்த பொருட்களின் கணிசமான ஒரு பகுதியும் இருந்தன. மற்றவை அவளுடைய பெட்டிகளில் இருந்தன. அவளும் மிஷலும் பிரிவதற்கு முன்பு, அந்தப் பை அவர்களுடைய படுக்கை அறையின் கதவுக்குமிழில் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் கனத்தில், ஒருநாள், கதவுக்குமிழ் உடைந்து கையோடு வந்துவிடப் போகிறது என்று மிஷல் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பான. ஆனால் அப்பையை அங்கிருந்து அகற்றும்படி அவளிடம் ஒருபோதும் சொன்னதில்லை.

கொழும்பு டீ

மலர் இப்படித்தான், எந்த நேரம் என்று இல்லாமல் அலைபேசியில் அழைப்பது, இன்னும் சற்று நேரத்தில் திருப்ப அழைக்காவிட்டால் அவ்ளோ பிஸி ஆவா இருக்க என்று வீட்டுக்கே கிளம்பி வந்து கோவித்துக்கொள்வது, அவனது அணைத்து அலுப்புகளையும் என் காதுகளுக்கு மடை மாற்றி விடுவது, நான் கோவப்பட்டால் ” நீ தான் என் பஞ்சிங் பேக்” என்று என் மூக்கை செல்லமாக திருகுவது என்று என்னால் வெறுக்க முடியாத ஓரு சித்திரம்.

அனாயாசம்

அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம்.

உச்சி

” இந்தா பாரும்மா, உனக்கு அந்த certificate கிடைக்காது. வீணா அலையாதே. கேட்டியா?” என்றார் பாஸ்கரன்.
தலையாரியின் கண்கள் கலங்கின.
வேதி எப்போதும் அது கிடைக்கும் என் நம்பியதில்லை. தலையாரி வலிந்து உதவியதால் மட்டுமே விண்ணப்பித்திருந்தாள். வேதி வெறித்த கண்களுடன் அலுவலரை பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.
தலையாரி “ஐயா இது மகா பாவமுங்க” என்றார்.
பாஸ்கரன் “எனக்கு பாவ புண்ணியம் லாம் கணக்கில்ல பாத்துக்க?, என் கையெழுத்து இல்லாம ஒன்னும் முடியாது” என்றார்.

முகத்துவார நதி

கடலோர நிலத்துக்காரனான அவன் காகேசம் கிராமத்தை நோக்கி பயணம் புறப்பட்டிருந்தான்.  அது அவனுடைய படுவூர் கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தொலைவிலிருந்தது. கடற்காற்று லேசாக மணலை கிளப்பிக் கொண்டு வீசியதில் கண்களை சுருக்கிக் கொண்டு நடந்தான். அணிந்திருந்த மேல்சட்டையில் காற்று புகுந்துக் கொண்டு உடலை உப்பலாக்கி காட்டியது. காய்ந்த “முகத்துவார நதி”

பவளமல்லி

கண்மணி சித்தி மகன் ரமேஷ் அண்ணா புதிதாக வாங்கிய பைக்கில் துளசி சித்தியை வைத்து எங்கள் வீட்டுக்கு ஓட்டி வந்தபோதுதானா வள்ளி அத்தை இங்கு இருக்க வேண்டும். “பரவால்ல இனி துளசி வண்டியிலேயே சுத்திக்கலாம்” என்றபோது வெளிப்பட்ட குரூரத்தின் சூடு தாங்காமல் துளசி சித்தி வாடிப்போனாள். இத்தனைக்கும் ரமேஷ் அண்ணாவுக்கும் துளசி சித்தி, சித்தி முறைதான்.

வெண்ணெய்த் தாழி

யமுனாவுக்கு குடைராட்டினம்தான் பிடிக்கும். சிங்கம் குதிரை அன்னபட்சி னு எல்லோரும் போட்டி போட்டாலும் இரட்டை நாற்காலிலதான் ஏறுவாள்.. கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுத்தவுடன் காற்றில் ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கும்.

அமுதம்

வீட்டின் பின்னால் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பார்வதி அரவம் கேட்டு ஓடிவந்து, “டேய்…உன்னப்பெத்தவடா நானு. நாரத்தண்ணியகுடிச்சா பெத்தவக்கூட பொம்பளையா மட்டுந்தான் தெரிவாளா…அவதான் என்னிய வயல்ல கொண்டு போய் போட்டுருங்கன்னா. அதுக்கு உங்கப்பன ஏண்டா அடிச்ச…அவரு எங்கூட இருக்காம உங்களுக்கே பண்ணையாளு வேல செஞ்சுக்கிட்டு வயல்லயே கிடக்கனுமா…” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.

முன்னுணர்தல்

என் முதுகில் அவர் பார்வை முள்போல உறுத்துவதாய் உணர்ந்தேன். இல்லை, முள் இல்லை. துரப்பணம். என் உடம்பில் துளைபோட்டு மறுபுறம் பாயத் துடிக்கிறது அது. வலி இல்லையே தவிர, குடைந்து நகரும் எஃகுக் கம்பியை என்னால் உணர முடிகிறது. பின்னாட்களில் அதற்கும்கூடப் பழகிவிட்டேன். என்றாலும், முதல் தடவை ஏனோ அச்சமும் குடைந்தது….ராவுடைய இரண்டு கண்களையும் பற்றிச் சொன்னேனல்லவா, இரண்டு கைக ளையும் சொல்ல வேண்டும். இடது கைச் சுட்டுவிரல், வாசிக்கும் வரிகளைத் தடவிய வாறு மெல்ல நகர்ந்தது – விரலால் வாசிக்கிற மாதிரி. கடந்துசெல்லும்போது புத்தகத்தின் விரித்த பக்கங்கள் பார்வையில் பட்டன. தொட்டால் ஒடிந்துவிடும்போலப் பழமையின் மஞ்சளேறிய தாள்கள்.

இதினிக்கோ

‘யு மஸ்ட் பி ஜோக்கிங்! ராஜப்பா வாத்தியார் சொல்லிக்கொடுத்து கணக்கு புரிஞ்சிண்டவா யாராவது இருக்காளா? ஆனால் அந்தக் கூத்தும் நடந்தது. ஆரம்பித்துக் கொஞ்ச நாளிலேயே டியூஷன் கடை மூடியாகிவிட்டது. வகுப்பறை சகிப்புத்தன்மை என்பது நம் தலைமுறையோடு முடிந்துவிட்ட விஷயம் என்று தோன்றுகிறது, முகுந்த். பட் எ குட் ட்ரெண்ட், வாட் டூ யு ஸே?’

மீச்சிறு துளி

சம்பத், எப்போதுமே அவன் செய்யும் வேலைகளை ஈடுபாட்டோடு ரசித்து செய்பவன். ஆனால் தொழில் வெற்றிகரமாக தொடர்வதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நேரம் என்று பொதுவாகச் சொன்னாலும் காலம்தான் இவன் தொழிலை நலிவடையச் செய்தது. சைக்கிளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து தானியங்கி வாகனமாக மாறியது காலத்தின் மாற்றம்தானே. இவனும் காற்றடிப்பது, பஞ்சர் போடுவது என அவற்றின் வேலைகளையும் பார்த்தாலும் பழுது பார்த்தல் இவனால் இயலாததாகிவிட்டது.

மின்னல் சங்கேதம் – 1

This entry is part 1 of 12 in the series மின்னல் சங்கேதம்

டினு டியோர் ஏழெட்டு மீனைப் பிடிச்சான். பிராமண தானமா எனக்கும் ஒண்ணு கொடுத்தான். நல்ல பெரிசு இல்ல? ஓய் பொட்லா, நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்க? காலங்காத்தால வீட்டுப்பாடம், படிப்பு எதுவும் இல்லையா?”

படகோட்டி தரிணி

தரிணி சொன்னது சரிதான். மயூராக்ஷி தனது வேகமான நீரோட்டத்திற்குப் பெயர் போனவள். ஓர் ஆண்டில் ஏழு ,எட்டு மாதங்கள் அந்த ஆறு ஒரு பாலைவனம்தான்— ஒன்று ஒன்றரை மைல் வரை கரைக்குக் கரை மண் பரவிக் கிடக்கும். ஆனால் மழை வந்துவிட்டால் அவள் அசுர பலம் பெற்று நான்கு, ஐந்து மைல் வரை விரிந்து, ஆழமான சாம்பல் நிற நீரால் எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுவாள்.

வான்பார்த்தல்

அவள் ஐந்தாம் வகுப்பு படித்தாள். ‘அவளைவிட எனக்கு அறிவு மிகுதி’ என்று உணர்ந்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு அழகு மிகுதி’ என்று நினைத்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு வலிமை மிகுதி’ என்று உறுதியாக நம்பியிருந்தேன்.  ஆனால், அஞ்சனா தன்னுடைய அறிவையும் அழகையும் வலிமையையும் மறைத்து வைத்திருந்தாள். இந்த விஷயம் எனக்கு அவளுடன் பழக பழகத்தான் சிறுக சிறுகத் தெரிய வந்தது. ‘பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்’ என்பது, எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புரிந்தது.

அப்பயி ஏமாற்றினாள்

தீடிரென நினைவு வந்தாற்போல எழுந்து கொல்லைப்புறம் சென்று வந்தான். அவசரமாக கைலியை உதறிவிட்டு பேண்ட் மாட்டிக் கொண்டான். பித்தான்கள் மாற்றி பூட்டப்பட்ட சட்டை மேலும் கீழுமாக இருந்ததை அவன் அறிந்தானில்லை. பையில் அப்பயி மூன்றாக மடித்து சுருட்டி தந்த ஒரு புது இருபது ரூபா தாளும், கசங்கிய பத்து ரூபா தாளும் இருந்தது.

ம்ருத்யோ மா

“க்ளிங்” – சற்றே வேகமாக மதுக் கோப்பைகள் இடித்துக்கொண்டது போலத்தான் சத்தம் கேட்டது. வரிசையின் முன்னே எட்டிப்பார்த்தேன். பெர்லின் செல்லும் இந்த விமான கேட்டின்முன் உருவாகியிருக்கும் வரிசையில் இரண்டாவதாக நின்றுகொண்டிருந்த தாத்தாவின் கையிலிருந்த டியுடி ஃப்ரி ஷாப் பையிலியிருந்து தரையெங்கும் இரத்தச்சிவப்பு உற்சாகமாக எல்லா திசைகளிலும் பரவியது. அவர் “ம்ருத்யோ மா”

சிந்திய ரத்தத்தில் ஒரு ஓவியம்

உற்று பார்த்து உச்சரித்தான் a….v…. o…. n. புதிதாக இருந்தது அதன் பெயர். அது அவன் கேள்விக்கும் அப்பால் இருந்தது. பள்ளிக்கூட ஸ்டாண்டில் நிற்கும் எல்லா சைக்கிள்களின் பெயர்களை தெரிந்திருந்தான். அவைகளில் ஒன்று கூட Avon என்ற பெயரில் படித்த நினைவில் இல்லை.

மத்தளம் கொட்ட

மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும் போதும் அவரின் பக்கம் தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததை கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்?

குப்பை

எப்படி வேண்டுமானாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்திக்கொள்ளலாம். எப்பி வயதில் சிறியவன். எங்களுக்குப் பிறகு தொழிலுக்கு வந்தவன். இன்னும் சொல்லப்போனால், அவனது துவக்க காலத்தில், தொழில் ரீதியிலான நுணுக்கங்கள் சிலவற்றை நாங்களும் கற்றுத்தந்திருக்கிறோம். நாங்கள் தெரிந்துகொண்டவைகளையே மிகவும் இளம் வயதில் தெரிந்துகொண்டவன், நாங்கள் கண்டுகொள்ளாத எதையோ கண்டுபிடித்துவிட்டான்.

கைச்சிட்டா – 8

This entry is part 8 of 8 in the series கைச்சிட்டா

இசை பாம்பே நகரத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் ஹிந்துஸ்தானி இசை எவ்வாறு உருமாறியது என்பதைத் தேஜஸ்வினி நிரஞ்சனா, “மும்பையில் மியுசிகோஃபிலியா” நூலில் தடம் பின்பற்றிப் பதிந்திருக்கிறார். 1950கள் வரைக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்கீழ் இருந்தபோதும்; அதன்பின் சுதந்திர, பின்-காலனித்துவ பெருநகரமாக உருமாறியபோதும் – இந்துஸ்தானி இசை குறித்த “கைச்சிட்டா – 8”

கைச்சிட்டா – 7

This entry is part 7 of 8 in the series கைச்சிட்டா

கதையில் வரும் அத்தைகளும் மாமாக்களும் அமெரிக்க முதலியத்தில் திளைந்துக் கொழிக்கும் சித்தப்பா / பெரியப்பாகளும் இஸ்லாம் மீண்டும் தலைதூக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அக்தரின் பெற்றோர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

அனாதை

”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.

கைச்சிட்டா – 5

This entry is part 5 of 8 in the series கைச்சிட்டா

“பிரபு காளிதாசின் வாழ்வில் நடந்த வெவ்வேறு சம்பவங்களைத் தொகுத்து இருக்கிறார். இதற்குள் குறைந்தது நூறு கதாபாத்திரங்கள் ஆவது உலாவுகின்றன. அவர்களின் மன வெளிப்பாடுகளும் நூறு தருணங்களும் அதற்கு ஃபேஸ்புக் பதிவரின் எண்ண பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் வரக்கூடிய சம்பவங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்துமே முகத்தில் அறைவதுபோல் இருக்கிறது…

‘கொஞ்சம் சிறுசா’

பழுவேட்டையருக்கு உள்ளம் பொங்கியது. அடுத்தடுத்து வெறிகொண்டவர் போல் Savage Detectives வாசித்து முடித்து, 2666-ம் வாசித்துக்கொண்டிருந்தார். “எம்புட்டு பெரிய வீரன்டா.. நீ எழுத்தாளன் டா..” என்று வாய்விட்டுக் கூறினார். நெஞ்சு விம்மி அடைத்தது. …
நிஜத்தில், தாம் எவரையும் கொல்லவில்லை என்றால் தமது கதைகளில் இப்படி யாரை எல்லாம் அறச்சீற்றம் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறோம் என யோசிக்கத் தொடங்கினார். .

தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு

ஓசையற்ற வாக்கியங்களை நினைவுகள் சன்னமாக ஒலிக்கிறது-பொலான்யோ குத்தெதிர் கோணங்கள் இது புத்தகம் வெளியான போது வந்த அறிமுக விமர்சனம்: “பொலான்யோவின் எல்லாவிதமான கிறுக்கல்களும் அச்சாகிறது. எனவே, ஜிகினா தோரணம் போன்ற இந்த 56 ஒட்டுகளை, ஒன்றாகக் கோர்த்து “வெளிறிய நீலம்” என்னும் தலைப்பில் பிரதியாக்கி இருக்கிறார்கள். 1980களின் பார்சிலோனாவில் “தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு”

நட்சத்திரங்கள் பொழிந்துகொண்டிருக்கின்றன

மாதுளைப்பழங்களை அணில்கள் கடித்த பிறகே நாம் சாப்பிடலாம் என்று அம்மா சொல்வார். நான் நட்சத்திரங்களை மாதுளைப்பழங்கள் என்று நினைத்துத்தான் பறித்துத் தின்றேன். ஆனால் அணில்களோடு பகிரவில்லை.
முதன்முறை தெரியாத்தனமாகத்தான் தின்றேன். அப்போது பதினைந்து வயதிருக்கும். ஒருநாள் தூக்கம் வரவில்லை. மொட்டைமாடிக்குச் சென்றேன். அன்றிரவு அந்த நட்சத்திரம் மாதுளைப்பழத்தைப்போல் வீங்கி இருட்டில் சிவப்பு ஒளி வீச பழுத்துத் தொங்கியது. அணில் வந்துவிடப்போகிறதே என்ற பயத்தில் யோசிக்காமல் அவசரமாக எம்பிப் பறித்துவிட்டேன்