புதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ – ஒரு வாசிப்பனுபவம்

செல்லம்மாளைச் சார்ந்து வாசிப்பது ஒரு பார்வை. அதோடு இந்தக் கதை குறுகிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் எதற்கு பிள்ளை நடையாய் நடப்பதையும், பழஞ் சோற்று மூட்டையையும், அவரின் பெருமூச்சையும் எழுத வேண்டும். இயங்களை மீறி மனிதநேயம் சார்ந்த வாசிப்புக்காக எழுதப்பட்ட கதையாக எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கசப்புகளைக் கிண்டல்களாக மாற்றியவர். அவர் நம்பிக்கைவாதியில்லை என்றெல்லாமில்லை அதைத்தாண்டி மனிதமனதை எதிர்திசையில் இருந்து நேயம் நோக்க அங்குசம் குத்தியவர்.