எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?

இத்தொடரில் நம் சங்க இலக்கியங்களைப் போலவே புவியியல் தகவல்களைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் இன்னொரு அகப்பாடல். தற்போதைய ஓசகா மாகாணத்தின் நாம்பா எனும் பகுதிதான் இங்கு நானிவா விரிகுடாவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் நாணல்கள் வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும். மூங்கில் போன்று இருக்கும் அந்த நாணல்களின் இரு கணுக்களை இணைக்கும் பகுதி சற்றுத் தடிமனாகவும் சிறியதாகவும் இருக்கும்.