சித்தப்பா ஒருநாள் காணாமல் போனார். எங்கெங்கெல்லாமோ தேடினார்கள். ஒரு பயனும் இல்லை. சித்தி துளி கூட கலங்கவில்லை. உறுதியாக இருந்தாள்.
‘’அவருக்கு எங்கயோ போகணும்னு தோணியிருக்கு. அதான் போயிருக்கார். நிச்சயம் திரும்ப வருவார்’’
Tag: பிரபு மயிலாடுதுறை
விடுதலை
குருநிலையை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களுக்கு குரு இரண்டு சீடர்களை கல்விப்பணிக்காகவும் மருத்துவப் பணிக்காகவும் அனுப்பி வைப்பார். யாரேனும் கற்றுக் கொடுக்க சொன்னால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். யாரேனும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் அவர்களுக்கு என்ன மருத்துவம் என்று சொல்வார்கள். மருத்துவம் என்றால் சிகிச்சை அல்ல. நோயாளியை எதிரில் அமர வைத்து சில நிமிடங்கள் எதிராளியின் கண்களை மட்டும் நோக்குவார்கள். ஐந்து நிமிடம் . அதிகபட்சமாக பத்து நிமிடம். உடல்நிலையில் என்ன கோளாறு என்பதை மட்டும் சொல்லி விட்டு அதற்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.
நீரில் எழுத்தாகும்
நடராஜனுக்கு வந்த கடிதத்துடன் மேலும் சிலருக்கு வந்த கடிதங்களையும் கொடுத்து விட்டு அனுமந்த ராவ் புறப்பட்டார். ராவ் குருஜியின் மானசீக சீடர். சென்னகிரி குன்றின் குகைகளில் வசிப்பவர்களுக்கு தனது சொந்த ஆர்வத்தால் கடிதங்களைக் கொண்டு வந்து தருகிறார். குருஜியின் பாதை யோகமும் மௌனமும். குருஜி ஹடயோகி. சென்னகிரிக்கு எப்போது வந்தார் எப்படி வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பல நாட்கள் சர்வ சாதாரணமாக உணவு இல்லாமல் அவரால் இருக்க முடியும். எளிய ஆசனங்களை நீண்ட நேரம் செய்வது அவரது வழிமுறை. மேய்ச்சலுக்கு வரும் இடையர்கள் அவர் நாளின் பெரும் பொழுது பயிற்சி செய்து கொண்டிருப்பதையும் மௌனத்தில் ஆழ்ந்திருப்பதையும் கண்டு ஊரில் சொன்னார்கள்
அனாயாசம்
அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம்.
காகம்
திவாகர் கூட்டையும் பொறியலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்மா அவர் இலையில் மேலும் ஒரு கரண்டி வைக்க முயன்றாள்.
வியாழன்
‘’கிளட்ச், கியர், பிரேக் எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணேன். பத்து தடவைக்கு மேலே கிளட்ச ரொம்ப ரொம்ப மெதுவா விட்டு வண்டி ஆஃப் ஆயிடுச்சு. கிளட்சை மெதுவா விடு. ஆக்சிலேட்டரை மெல்ல ரெய்ஸ் பண்ணுன்னு சொன்னேன். அவ சட்டுன்னு அதிகமா ஆக்சிலேட்டர் கொடுத்து வெடுக்குன்னு கிளட்சை விட்டுட்டா.’’
இருட்டு
அந்த அறைக்குள் நுழைந்ததும் முகத்தில் அறைந்த வாடை குமட்டலை ஏற்படுத்தியது. குமட்டினால் சந்தோஷுக்கு வலிக்கும். வருத்தப்படுவான். ரொம்ப கஷ்டப்படுகிறான். எல்லாம் எனக்காகத்தானா சந்தோஷ். ரசம் போன கண்ணாடி பெரிதாயிருந்த டிரஸ்ஸிங் டேபிள். அதன் ஸ்டூல் அத்தனை பழுப்பேறியிருந்தது. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என பார்வையிலேயே நினைக்க வைக்கும் பிசுபிசுப்பான “இருட்டு”
இருட்டு
உடம்பு சரியாக இல்லை.
அவ்வப்போது தீப்பற்றி எரிவது போலவும் உடலில் ஏதோ ஊர்வது போலவும் இருந்தது. வீடு பூட்டியிருக்கும் போதும் சில உருவங்கள் சுவரைத் தாண்டி உள்நுழைவது போல இருந்தது.
ஆகாஷின் கால்களை அவ்வப்போது பிடித்துக் கொண்டேன். அவன் பாதத்தின் கீழே தலையை வைத்துக் கொண்டேன்.
மாற்று
பால பருவத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கு அது வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. எங்கள் பாட்டனார் ஒருவர் நாங்கள் அடி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தபோது என்னடா மெனக்கெட்டு செய்றீங்க என்றார். சொந்தக்காரர்கள் வீட்டு தூரத்தை அளக்கிறோம் என்றோம். பூமியும் வானமும் நமக்கு சொந்தம்; அதை உங்களால முழுசா அளக்க முடியுமா என்று வேடிக்கையாகக் கேட்டார்.
பிரிவு
வெயில் நம்மள சுட்டெரிக்குது. நாம மெல்ல நடக்கிறோம். நம்ம வாழ்க்கையோட சாரம் இந்த ஷணத்துல நாம உணர்ர வெக்கையும் தாகமும் தானாங்கற கேள்வி நம்மள துக்கப்படுத்துது. அப்ப ஒரு பெரிய அரச மரத்தோட நிழலைப் பாக்கறோம். அதுக்கடியில ஒரு தண்ணீர்ப் பந்தல் இருக்கு. ஒரு பானை நிறைய தண்ணீரும் அதோட மூடிமேல ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் இருக்கு. நாம அந்த நிழல்ல நிக்கறோம். ரெண்டு டம்ளர் மூணு டம்ளர் தண்ணீர் குடிக்கறோம். அப்ப தீர்ரது நம்ம தாகம் மட்டும் இல்ல. நம்மோட துக்கமும்தான். அந்த மரத்தை நட்டவருக்கு இந்த நாள்ல இந்த நிமிஷத்துல நாம வரப் போறோம்னு தெரியாது.
திருப்பம்
“சபரி! உங்க ஒய்ஃப் உங்களுக்காக மெழுகா உருகறாங்க. பொதுவா மனோதத்துவ விஷயங்கள்ல ஒய்ஃப் சப்போர்ட் பண்றது அபூர்வம். உங்க கனவை உங்க பயங்கள உங்க ஒய்ஃப் கிட்ட சொல்லுங்க. அப்ப இந்த விஷயத்தை ரெண்டு மனசு ஹேண்டில் செய்யும். அவங்க மனசு இயங்கற விதத்தோட ஒரு பகுதி உங்களுக்குள்ள வந்தாலே நீங்க வெளியில வந்திடலாம். ஒரு பெரிய கதவை சாவி போட்டு திறக்கறாப் போல.’’
ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்
அவன் ஆரம்பங்கள் அனைத்துமே இப்படித்தான். நாள் நேரம் தேதி பொழுது அனைத்தும் துல்லியமாக இருக்கும். மனதில் அவை இன்னும் முழுமையான உயிர்ப்புடன் இருக்கின்றன. மறதி இன்னும் தீண்டவேயில்லை. அந்தக் கணங்கள் அந்த பொழுதுகள் அடர்த்தி குறைய வேண்டும். அவற்றின் இடத்தில் வேறேதாவது வந்து அமர வேண்டும். படைத்த தெய்வங்கள் கருணை வைத்தால்தான் உண்டு. கடவுள் சில விஷயங்களை ஒரு துளி மட்டுமே கொடுக்கச் செய்கிறான்.
நாகரிகம்
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். –திருக்குறள்.
நம்பிக்கை
ராத்திரி ரயிலுக்கு நேரம் இருக்குன்னா பக்கத்தில் இருக்கற குன்று மேல ஒரு சின்ன பீடம் இருக்கு. நூறு வருஷத்துக்கும் மேல அதில ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டிருக்கு. ஆடு மாடு மேய்க்கறவா தினமும் மேலே போய் எண்ணெய் விட்டுட்டு வறா. நான் மாசம் ஒரு தடவ போவன்.”
நூறு வருடமாக எரியும் தீபம். இங்கே வியப்புகளுக்கு குறைவே இருப்பதில்லை
காத்திருப்பு
ரயில் நிலையத்துக்கு ஃபோன் செய்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவசாயக் கல்லூரி மாணவிக்கு வீட்டுச்சாவி கிடைத்து விடும். ஆதலால் அவளது நண்பர்கள் திட்டமிட்டவாறு ரயிலில் பயணிக்கலாம். பயணத்தின் அடுத்தடுத்த நிலையங்களில் எங்காவது சாவியைத் தவற விட்டவர் சேர்ந்து கொள்வார் என்ற தகவலை அறிவிக்கச் சொன்னான். ஸ்டேஷன் மாஸ்டர் பயணியின் பெயர் சொல்ல வேண்டுமா என்றார். லக்ஷ்மி பெயர் சொல்ல வேண்டாம் என்றான்.
யானை பிழைத்த வேல் – பகுதி இரண்டு
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (783)
அந்நிகழ்வு அரிதானது என்பதால் அதன் எந்த ஒரு துளியையும் தவறவிட்டுவிடக் கூடாது என இமைக்காமல் அதனை நோக்கியிருந்தனர். அப்படியிருந்தும் இராமன் கையில் வில்லை எடுத்ததைப் பார்த்தனர். அது முறியும் சத்தத்தை கேட்டனர். இமைப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் இராமன் வில்லை முறித்தான்.
யானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று
இராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)
விழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.
இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோலுமே அல
முந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)
இராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.
இந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.