பிரதி ஜெராக்ஸ்

“கடவுளே எங்க கடைக்கு நேர்ல வந்து ஒரு வரம் கொடுத்திருக்காரு!” என ஏதோ ஒரு பெரிய ரகசியத்தை சொல்துபோல அவனிடம் அவள்மேல் ஆணையாக யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிவிட்டு கண்களை அகல விரித்துக்கொண்டு ஆச்சரியமாக அதை சொன்னாள்.