இச்சா, இனியா, காயா, பழமா- இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி

தனது1924ம் வருட நூலான ‘பணச் சீர்திருத்தத்தில்’(Tract on Monetary Reforms) வணிகத்தின் சுழற்சியில் சாதாரண மனிதன் சிக்கிக் கொண்டு தவிக்காமல் அவனைக் காப்பாற்றும் பொறுப்பு, அரசைச் சேர்ந்தது என அவர் எழுதினார். பொருளாதார வீக்கம் மற்றும் மந்த நிலை தானாகவே சரி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தின் போதாமைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்

தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்

இச்சா, இனியா, காயா, பழமா?

உளவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு, ஆய்வகங்களில் அறிவியல் நிரூபணங்களின் மூலம் இதை உறுதி செய்ய முடியும் என நம்பியது. உளவியல் பகுப்பாய்வாளர்கள் போலவே, பரிசோதனை உளவியலாளர்கள், மனிதரின் அக அனுபவத் துல்லியத்தை, அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும் என்றார்கள். அளக்கக்கூடிய புற நிலை உடல் செயற்பாடுகள், அகநிலையின் வெளிப்பாடுகளே என்ற அவர்களது கொள்கையால் அவர்கள் உளப்பகுப்பாய்வாளர்களிலிருந்து மாறுபட்டனர். ஜான் வாட்சனின் ‘நடத்தை விதிகள்’ மூலம், மிகப் பிடிவாதமாக, தனியான அகநிலை என்ற கருத்தை கிட்டத்தட்ட மறுத்து, ‘உணர்வு’ என்பது பிரதிபலிப்புகளின் கூட்டமைப்பு என்ற முடிவிற்கு வந்தார்கள்.

இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்

உங்கள் மருத்துவர் வருங்காலங்களில் தரப்போகும் மருந்துச் சீட்டு ஒரு மருத்துவப் பயன்பாட்டுச் செயலியாக இருக்கலாம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அல்லது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பல நூறு செயலிகள், உடல் நலம், மன நலம் மற்றும் நோயினைத் தானாகக் கண்டறிந்து, அதைக் கண்காணிப்பதோ, மருந்துகளைப் பரிந்துரைப்பதோ செய்யும் வண்ணம் உருப்பெற்று வருகின்றன.