பத்து ரூபாய் மட்டும்

எப்போதும்போல நாள்கள் ஒடின. ஒரு வாரம் கழிந்தது. பிதுபாபு ஒருநாள் காலை மீண்டும் நிகில்பாபுவின் வரவேற்பறையில் தலைகாட்டினார். மூன்று மாதங்களுக்குமுன், பிதுபாபு பத்து ரூபாய் அவனுக்குக் கடன் கொடுத்தார், “நாளை பணத்தை திருப்பி தருகிறேன்” என்று அவன் வாக்குக் கொடுத்திருந்தார்.