இவர்கள் இல்லையேல் – என்னுரை

டோக்ரி மொழியை எட்டாம் பட்டியலில் இணைக்க, மற்ற டோக்ரி கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து போராடியதில், பத்மா பெரும் பங்காற்றினர். டோக்ரி மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கும், டோக்ரி மொழியை தன் படைப்புகளால் செழுமைப்படுத்துவதிலும், பத்மா ஆற்றிய பங்கு ஒப்பில்லாதது. அதனால்தான், ‘டோக்ரி மொழியின் தாய்’ என டோக்ரி மொழி பேசுபவர்களால் பத்மா பெரிதும் கொண்டாடப்படுகிறார்.

பிருஹன்னளை

பெரிய அக்கா (லதா மங்கேஷ்கர்)பெடர் ரோட்டில் குடியேறிய புதிதில், அவரிடமும் யாரோ ஒரு பிருஹன்னளையை வேலைக்கு அனுப்பி வைத்ததாகச் சொன்னது எனக்கு நினைவு வந்தது. ” பத்மா, அவன் மிகவும் விசுவாசமானவன். நான் ரெக்கார்டிங் முடிந்து வரும்வரை எனக்காக உறங்காமல் காத்திருப்பான். உடை மாற்றிக்கொள்ள துணிகளை தந்துவிட்டு, சாப்பாட்டை சூடு செய்து பரிமாறுவான். வேலையிலிருந்து திரும்பும் கணவனிடம், மனைவி, அந்த நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் பகிர்ந்து கொள்வதைப் போல, வீட்டில் நடந்த எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வான்.

இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11

ஒரு முறை, அவளுடைய தம்பி, ” நீ என் உண்மையான சகோதரியாக இருந்தால், எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி அனுப்பு. என் அக்கா எனக்கு சைக்கிள் வாங்கி தந்தி ருக்கிறாள் பாருங்கள் என்று நான் இங்கு எல்லோரிடமும் பெருமையடித்து க்கொள்ள முடியும்” என்று எழுதினான். மரியத்துக்கு இதைக்கேட்டு, சந்தோஷத்தில் சிரித்து மாளவில்லை. அவளுடைய பெற்றோரும் “உன் பெயரில் பசு வாங்குகிறோம். ஐநூறு ரூபாய் அனுப்பு”என்று கட்டளை இடுவார்கள். ..எத்தனையோ அக்காக்கள், தங்கைகள் மற்றும் அத்தைகள் தங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும், மருமகள்/ மருமகன் களுக்காகவும், உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறார்க.ள்ஆனால், பதிலுக்கு அவர்களுக்கு என்ன கிடைக்கிறது?

இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10

மாலையில், என் கணவர், ” ரவேல் சிங், அந்த பழைய மேஜையும் நாற்காலிகளும் என்னவாயின?” என்று கேட்டார். நொடியும் தாமதிக்காமல், ரவேல் சிங், அதுவா ஸாஹிப், அதை நான் வந்த வண்டியிலேயே என் வீட்டுக்கு அனுப்பி விட்டேன் இந்நேரம் போய் சேர்ந்திருக்கும். எதிர்வீட்டில் போன் செய்து என் மனைவியிடம் விசாரித்து சொல்கிறேன் என்றானே பார்க்கலாம்!

இவர்கள் இல்லையேல்

1984க்கு பிறகு தான் எனக்கு ஃபூலோவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அப்போதுதான் மும்பையிலிருந்து திரும்பி இருந்தோம். சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை வரலாறு அறியும். அந்த துயர நினைவுகளை நான் நினைத்துப் பார்த்து, காயங்களை புதிதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அந்நாட்களில் ஃபூலோ எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். “வேலைக்காரர்களிடம் சொல்லி, வீட்டு வாசலில் மாட்டியிருக்கும்ஸாஹிபின் பெயர் பலகையை கழற்றி விடுங்கள் பீஜி. சர்தார்களுக்கு இப்போது நேரம் சரியில்லை” என்பாள்.

மீண்டும் சீனா

என் மனம் முழுவதுமாக உடைந்து விட்டிருந்தது. பெண்ணின் பல பரிமாணங்களை நான் கண்டிருக்கிறேன். அவளுக்கு தன் வீடு தான் எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகத் தெரிகிறது. எந்த விலை கொடுத்தேனும், பெண், எப்போதும் தன் வீட்டை காப்பாற்றிக் கொள்ளவே நினைக்கிறாள். வீட்டைச் சிதற விடாமல் பிடித்து வைத்துக் கொள்ள படுகிற பாட்டில், அவள் எத்தனை எத்தனை முறை உடைந்து போகிறாள்! வெட்கமோ, மானமோ, குற்ற உணர்வோ,எதுவுமே அவளது இம்முயற்சியின் ஊடே, நுழைய முடிவதில்லை! அவளது தேவை ஒரு வீடு: தலையை மறைத்துக் கொள்ள ஒரு கூரை!

இவர்கள் இல்லையேல்

உடல் ஒத்துழைத்தவரை, அம்மா தன் கடைசி மகனை கூட்டிக்கொண்டு ராம்வன் சென்று, அங்கு சில நாட்கள் தங்கியிருந்துவிட்டுவருவார். திரும்பி வந்ததும் மிகவும் சந்தோஷமாக சொல்வார் – பாவம், இந்த பைத்தியக்காரனின் தலையெழுத்தில் நல்ல சாப்பாடு என்பது எழுதப்படவேயில்லை.