அன்னப்பறவை

கல்யாணம் முடிந்த அடுத்த எட்டாவது மாதம், ஆச்சியின் பெரிய மனுஷியான சடங்கு ஊரே அமர்களப்பட நடந்து முடிந்தது. அடுத்த ஆறு வருடங்களுக்கு, மாதமாதம் அடி வாங்கும் சுழற்சியாக நகர்ந்து கொண்டிருந்தது ஆச்சிக்கு. தான் அப்பா ஆக முடியவில்லை என்ற மொத்த வெறுப்பையும் கோபத்தையும் அடிகளும் உதைகளுமாக ஆச்சி மீது இறக்கி கொண்டிருந்தார் தாத்தா. ஏதோ விரக்தியை எப்படியே தீர்த்துக் கொள்கிறேனென்று சொத்து பத்திகளை அழித்து மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தார். ஆச்சி எல்லா வெறுப்பிற்கும் பதிலாக அன்பை தவிர வேறெதையும் தரவில்லை. ஆறு வருட முடிவில் வேலப்பன் ஆச்சியின் வயிற்றைக் குளிர வைத்து, அவளை ஆசுவாச மூச்சுவிட அனுமதித்தான்.

இரவின் மடியில்

‘இனி கிளம்பி எங்க போறது. மணி அஞ்சாகப் போகுது. இனி கிளம்பி போய்ட்டு வரதுக்குள்ள ரொம்ப லேட் ஆயிரும். அதுவும் இந்த சென்னை டிராபிக்கில, இப்ப கிளம்புன விடிஞ்சிரும். இப்ப தாண்டி பையனா பொறந்திருக்கணும் தோணுது. இந்த டைம் லிமிட்டே இருந்திருக்காது.’

நட்சத்திரம்

‘எப்படியாச்சு நல்லபடியா ஒரு வேலையோட வந்திரு தாயி. பொம்பள பிள்ளைக்கு என்ன நாடு வந்தாலும் ஊன்றி பிடிக்க வேலைன்னு ஒன்னு இருந்தா, நாலு எட்டு கூடுதலா விரசா வைக்கலாம்’ கல்லூரி விடுதியில் என்னை விட்டுவிட்டு திரும்பும் போது என் கையை பிடித்து வைத்துக் கொண்டு அம்மா சொன்னது. அது கேட்காமல் கேட்ட ஒரு சத்தியம் போல் இருந்தது.

மனிதர்களின் தரிசனம்

அம்மா நிறைய நேரங்களில் அப்படி தான் பேசுவாள். முகத்தை பார்க்கமாட்டாள். பொதுவாக முன்வெளியை பார்த்தபடி பேசுவாள். ஒரு வரியை வெளியே சொல்லிவிட்டு, தொடர்ச்சி வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொள்வாள்.

அந்த நாள்

ஜோரான மழை பெய்து கொண்டிருந்தது. பத்து நிமிடத்திற்கு முன்னால் வரையில் வானம் மழைக்காக தயாராகியிருந்த எந்த அறிகுறியையும் காட்டவில்லை. “இப்போ எங்கயிருந்து இப்படி ஊத்து ஊத்துனு ஊத்திது” தனக்கு தானே பேசிக்கொண்டு சிங்கில் கிடந்த பாத்திரத்தை தேய்த்துக் கொண்டிருந்தாள் பத்மினி. சரவணன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் இரவில் சரியாக “அந்த நாள்”