லீலாவதி

அவள் அதில் ஒரு கவிதையைப் போல் இப்படி எழுதி இருந்தாள். ‘ஹே, அழகிய கண்களையுடைய லீலாவதியே! நீ ஒரு சராசரிப் பெண்ணாய்த் திருமணம் கொண்டு, குழந்தை பெற்று, குடும்பம் சுமந்து மடியப் பிறந்தவள் இல்லை. நீ ஒரு சாதகப் பறவையைப் போன்றவள். சொர்க்கத்திலிருந்து நேரடியாய்க் கீழே இறங்கும் அமிர்தத் துளிகளை மட்டுமே அருந்தித் தாகம் தணிப்பவள்….”