நெப்போலியனின் சரிதம் எழுதுவதற்கு இவர் எடுத்த முயற்சிகள், ஆவணக்காப்பகங்களில் செலவிட்ட நேரங்கள் நல்ல பலனைக் கொடுத்தன. McClure இதழ் விற்பனை ஏறியது. இவருடைய அடுத்த தொடர் லிங்கனைப் பற்றியது. நான்கு வருடங்கள் ஆராய்ந்து 20 பகுதிகளாக இவர் வெளியிட்ட அந்தத் தொடர் அமோக வரவேற்பைப் பெற்றது. போட்டிப் பத்திரிகையாளர்களின் காதில் புகை வந்தது; ‘பெண் எழுதும் வரலாறாம்’ என்ற கேலி வேறு. ஆனால், இவருக்குத் தடைகள் என்பது செயலூக்கிகள் என்பது, பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை. இவர் தலைநகரின் பெருந்தலைகளைச் சார்ந்து லிங்கன் சரிதத்தை எழுதவில்லை. லிங்கனின் பிறப்பிடமான கென்டக்கிக்குச் சென்றார். அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஊராரிடம் கேட்டறிந்தார்;ஆவணக் காப்பகங்களுக்குச் சென்றார்.
Tag: ந.பானுமதி
குளக்கரை
சோஷலிஸ்ட்ஸ் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட சிலவற்றைப் பாதுகாக்க விழைகிறார்கள்.அரசியலும், பண்பாடும் களேபரமாகக் கலந்த இந்த நிலையில் லெனின் காப்பாற்ற விழைந்த அந்த ஜாரிஸ்ட் ரெயில்வே போல(!),புத்தகங்களும், சினிமாக்களும், புரட்சிக்கு முன் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே காப்பாற்றப்படவேண்டும்.அரசியல் செய்ய வேண்டிய வேலை வருமானத்தை சரிசமமாக்குவது,மாணவர்களின் கடனை நீக்குதல் போன்றவையாகும்.கலாச்சாரம் என்பது அரசியலிலிருந்து பிரிந்துதான் செயல்படவேண்டும்.