போரையும் இனப்படுகொலையையும் பின்னணியாகக் கொண்டிருக்கும் புத்தகங்களை விமர்சிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. குருதி தோய்ந்த அதன் பக்கங்களை எப்போதுமே சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், என்ன அழகியல் நுணுக்கங்களைக் கொண்டு நொட்டுவது என்ற தார்மிகச் சிக்கல். இந்தத் தயக்கத்தையும் மீறி சில படைப்புகள் அவற்றின் கழிவிரக்கத்தைத் தவிர்த்து கொடூரங்கள் விரவியிருக்கும் சூழலையும் அதில் சிக்குண்டிருக்கும் சாமான்யர்களின் அவலத்தையும், நிரந்தரத் துக்கத்தையும், தோல்வி நிச்சயமென்றாலும் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தையும், அக்கட்டாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் அறச் சிக்கல்களையும் உடனடித் தன்மையுடன் கவித்துவத்துமாகக் கைப்பற்றும் விதத்தால் அவற்றின் அழகியலைப் பற்றியும் சிந்திக்க வைக்கின்றன. மாபெரும் தாய் கதைத் தொகுப்பு அம்மாதிரிப் படைப்புகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
Tag: நம்பி கிருஷ்ணன்
எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்
நண்பர் “காத்திருப்பு அறையில்” கவிதை தனக்குப் புரியவில்லை என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டிருந்ததை. அதன்பின் சிறிது நேரத்திற்கு அக்கவிதையைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளே / வெளியே குறித்து, சுயத்தை முதன்முதலில் அடையாளம் கண்டு கொள்ளும் தருணம், கவிதையின் தரவு முரண்பாடுகள், முதல் வாசிப்பைக் காட்டிலும் அதை சுவாரசியமாக்கிய பிஷப்பின் சில சரிதைத் தகவல்கள் என்றெல்லாம் பேசிவிட்டு
பாதாளத்தை வடிவமைத்தல்: பேயோவுல்ஃப், கிரெண்டல்
ஹெர்குலிஸ் அல்லது தீசியஸ் போல நாயகன் ராட்சதர்களைக் கொல்கிறான். ராட்சதன், அதன் அம்மா, டிராகன் இவையெல்லாம் அக்காலத்து மக்கள் இக்கதையில் எதிர்பார்த்த விஷயங்கள். இவை தீமையின் அவதாரங்கள், “பார்வையாளர்களால் உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்டவை,” எழுத்தாளன் இவ்வகைமையைத் தேர்ந்தெடுத்த பின்னால் இந்த அவசியக் கூறுகளைச் சேர்ப்பது தவிர்க்க இயலாமல் போகிறது. இரும்பால் பிணைக்கப்பட்ட, விதி சூழ்ந்த வீடு (ஹீராட் ஹால்), கிரெண்டல் மற்றும் அதன் உருவற்ற அன்னை பீடிக்கும் நீருக்கு அடியே அச்சமே உருவான ஓர் இடம், கடைசியாகப் பாறைகளாய் இறுகிய பாதைகளற்ற டிராகனின் குகை என்று அச்சத்தின் அடிப்படை உருவகைகள் மூன்றின் வழியே கதையைக் கொண்டு செல்லும்போது:
வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்
பாகம் 1 1. ஹாலோ-மென் எலியட்டின் சர்வதேசப் புகழும் The Waste Land கவிதையும் ஒன்றி இருப்பதால் “வாழ்க்கை குறித்த ஓர் தனிப்பட்ட முக்கியமற்ற பிலாக்கணத்திற்கான வடிகால்… வெறும் சந்தநயமான முணுமுணுப்பு” என்று அவர் அப்பெருங்கவிதையைப் பற்றிய பின்னோக்கிய மதிப்பீட்டொன்றில் கூறியது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். நவம்பர் 1922-லேயே அவர் “வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்”
பாழ்மையினூடே மகோன்னதத்திற்கு: எலியட்டின் பாழ் நிலம்
ஆனால் ஒரு விஷயத்தில் நாம் கவிதையோடு உடன்பட வேண்டும், அதன் நாயகன் நிச்சயமாக அவன் நிலங்களை ஒழுங்குபடுத்தி செப்பனிட வேண்டும் (set his lands in order). ஆனால் அன்பை, நிதர்சனத்தைக் காட்டிலும் ஆதர்சமானதொருநிலையில் உயிர்த்தெழுப்புவதற்காக, அதை இறக்க அனுமதிக்கும் மனநிலையைப் பராமரிப்பது கடினம். இதனால்தான் லண்டன் ப்ரிட்ஜ் வீழவிருக்கும் நிமித்தங்களுடன், வறண்ட சமவெளி பின்னே விரிந்துகிடக்கும் சூழலில் அவன் இன்னமும் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆயினும், வறண்ட எண்ணங்களைக் காட்டிலும் மேலான ஏதோவொன்று ஈட்டப்பட்டு, இடிபடுகளுக்கு எதிராக இங்கு கரைசேர்க்கப்பட்டிருக்கிறது.
மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள் – 2
அதன் விருப்புறுதியில்லாது தடுமாறும் நாயகன், மிகெலாஞ்சலோவைப் பற்றி கதைத்தபடியே வந்துபோகும் பெண்கள் சூழ்ந்திருக்கும் வரவேற்பறையைத் தவிர்ப்பதற்காகப் புறவுலகு தரிசனங்களை (மலிவான ஹோட்டல்கள், மரத்தூள் பரப்பப்பட்டிருக்கும் உணவகங்கள், நயவஞ்சகமான தெருக்கள், மஞ்சள் மூடுபனி / புகை போக்கிக் கரி படிந்திருக்கும் பூனை போன்றவற்றை) வலுக்கட்டாயமாக நினைத்துப் பார்க்கிறான். மேலும் அப் புறவுலகு ரொமாண்டிசிஸ்ட்களின் வழக்கமான, pathetic fallacy இல்லாது, அதாவது கவிஞரின் உணர்வுகள் கவிதையின் பொருட்களின் மீது திணிக்கப்படாமல் (Art thou pale for weariness… wandering companionless? என்று ஷெல்லியின் பிரசித்தி பெற்ற கவிதையொன்று நிலவைக் கேட்கிறது) நமக்கு அளிக்கப்படுகிறது
மகோன்னதத்திற்கான ஆயத்தம்
சார்பற்ற புறநிலைத் தன்மைக்கானதொரு பயிற்சியே இங்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால் வறண்ட இம்மூளைப் பயற்சியை உயர்பிப்பதற்குத் தேவையான உணர்வின் உத்வேகம் இல்லாததால் இக்ககவிதைகள் வாழ்க்கையை அணுகுவதற்கான ஓர் முறைமையாக மாறாது லாஃபோர்கேயை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையாக எஞ்சிவிடுகின்றன. ஏன் ஹியூமரெஸ்க்? என்றால் விண்டம் லூவிஸ்சின் தார் (Tarr) நாவலை எலியட் விமரிசிக்கையில் நகைச்சுவை என்பது “அழகை அகோரத்திலிருந்து பாதுக்காப்பதற்கும் தன்னையே முட்டாள்தனத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மனது மேற்கொள்ளும் ஓர் நுண்ணுணர்வுமிக்க இயல்பான உள்ளார்ந்த முயற்சி” என்று கூறியதே அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும். உன்னதத்திற்கான விழைவை நகைமுரண் முகமூடிகளைக் கொண்டு அடியறுக்கும் போக்கை நாம் கவிஞர் இசையின் கவிதைகளிலும் காண்கிறோம். உதாரணமாக…
எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும் படமும்
அதன் ஏழு மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவர்ந்திழுக்கக்கூடியது. என் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்தாலுங்கூட அது எனக்கு நிறைவையே அளிக்கும்” – என்று சூசன் சாண்டாக் எப்போதோ கூறியது காரணமேயின்றி தோன்றி, அந்த நேர்த்தியான படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
இரா. முருகனின் நளபாகம்
முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன.
மொழிபெயர்ப்புகளின் கூட்டு நடனம்
என் மொழிபெயர்ப்புகளில் நான் மூலத்தின் பொருளையும் அதன் வடிவத்தையும் எத்தனைக்கு மாற்றமில்லாமல் கொடுக்க முடியும் என்று பார்க்கிற அணுகல் கொண்டவன். இந்த அணுகல்தான் உயர்ந்தது என்றில்லை. அது எனக்குப் பிடித்த முறை என்பதைத் தாண்டி அதை முன்னிறுத்தத் தனி வாதம் ஏதும் இல்லை.நம்பி, தமிழ் வாசகருக்குக் கவிதை இடறலின்றி சரளமாக வாசிக்கக் கிட்ட வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிலைப்படுத்தி மொழி பெயர்ப்பவர். அதனால் மூலத்தின் பொருளை அவருடைய மொழிபெயர்ப்பு இழக்குமா என்றால், இல்லை என்பதுதான் பதில்.
ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ
கடல் காக்கும் ரகசியங்கள் முத்தும் பவழமும் அல்ல, அது கொண்ட உயிர்களும், சிலப்பதிகாரம், டெம்பெஸ்ட், மோபி டிக் என்று நம் இலக்கியங்கள் வரையும் பேரிழப்புகள், உடைந்த கனவுகளின் சித்திரங்களும்தான். கடல் ரகசியங்களின் நினைவுகளைக் கண்ணுறும் வகையில் புலப்படுத்தும் தன்மை கொண்ட விடியல் சாதாரண ஒன்றல்ல, அது சாலையின் (freeway) குறுக்கே விழுந்து கிடக்கிறது என்றால் அதன் பொருளும் அவ்வளவு மகிழ்ச்சிக்கு உரியது அல்ல- கடல் கொண்ட கப்பல்களின் கூடுகள் போல் துருவேறிய, வெறிச்சோடிய உலகில் ஒளி பாய்ச்சுகிறது இந்த விடியல்.
“பசுக்களும் காளைகளும்” : என். கல்யாண் ராமனின் வாடிவாசல் மொழிபெயர்ப்பு
Threw, grab, push, rear, stand, held, stumble, bend, slide…குறுநாவலின் இட நெருக்கடியில் அபரிமிதமான வினையாற்றல்கள் மிகுந்த கவனத்துடன் சிக்கனமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் பலம் அதன் உண்மையான மகோன்னதத்தில் இங்கு நமக்குக் காணக் கிடைகிறது. விவரங்களில் அது செலுத்தும் கவனம், மனிதனும் மிருகமும் ஒன்றை மற்றொன்று விஞ்ச முனையும் விளையாட்டில் முக்கியம் பெறும் அசைவுகளின் வரிசை முறையைத் தாளம்தப்பாமல், நிகழ்வை அது நிகழும் கணத்தில் விவரித்து வாசகருக்கு காட்சியும் ஒசையும் பிணையும் ஒரு காட்சி அனுபவமாகக் கடத்துவதில் வெற்றிபெரும் வியக்கத்தக்க அந்தக் கவனத்தை நம்மால் இங்கு இனங்காண முடிகிறது. நிதானித்து அந்த வரிசை முறையை அனுபவியுங்கள்…
“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”
ஆங்கிலம் நம்மீது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினால், மேலை இலக்கியத்தை ஆங்கிலப் படைப்புகளாகவே எதிர்கொள்வதற்கு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் ஆங்கிலப் படைப்புகள் அல்ல; நம்மை நெகிழ்த்திய, நாம் ஒருவருக்கொருவர் மேற்கோள் காட்டிக்கொண்டிருந்த வார்த்தைகள் ஆசிரியரின் வார்த்தைகளே அல்ல, அவர் ஆகிருதிக்குப் பின் மறைவாக நிற்கும் மொழிபெயர்ப்பாளருடையது. இக்கண்டுபிடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவை மூலவடிவங்கள் அல்ல என்ற பிரக்ஞையுடன் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
சுல்தானாவின் கனவு
டார்ஜீலிங்கில் இருந்தபோது சிஸ்டர் சாராவுடன்தான் நான் நடைப்பயிற்சி செய்வேன். தாவரவியல் தோட்டங்களில் கைகோத்துக்கொண்டு சிரித்துப் பேசியபடியே நடந்து செல்வோம். இப்போதுகூட அப்படிப்பட்ட தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அவரது அழைப்பை ஏற்று அவருடன் வெளியே சென்றேன்.
பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது
தோல்வியுறாத மனத்திடத்துடன் தனக்காக அமைத்துக் கொண்ட வாழ்வுப்பாதையில் அசையா நம்பிக்கையுடன் முன்னே செல்லும் ஒரு மனிதரையே எதிர்கொண்டேன். வீட்டிற்குச் செல்லும் வழியை வரைபடமாக அனுப்பிவைத்து, தெர்மோஸ் ஃபிளாஸ்கில் டீயை எனக்காகச் சூடாக வைத்திருந்த கனிவான ஒரு முதியவரையும். லாவோசில் சமீபத்தில் நிகழ்த்திய பட்டறையை நினைவுகூர்ந்து, எவ்வளாவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு துரிதமாக மீண்டும் களத்திலிறங்குவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அபாரமான நாடகத்துறையாளரையும். நகரவாழ்வைப் பற்றிய சர்காரின் விமர்சனங்களின் கூர்மை காலத்தால் இன்னமும் மழுங்கடிக்கப் படவில்லை.
இலக்கியமும் ரசகுல்லாக்களும்
ஆரோக்கியநிகேதனம் நவீனத்தின் தாக்கத்தை ஒப்புநோக்கில் மருத்துவம் என்ற குறுகிய வட்டத்தின் உள்நின்று ஆராய்கிறது. ஹன்சுலி வளைவின் கதை அதை மேலும் விரிவாக ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவின் உருமாற்றத்தை, காலனியம், போர், தொழில்மயமாக்கல் போன்ற விசைகளைக் கொண்டு ஆராய்கிறது. ஹன்சுலி என்பது நேபாள் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் குடிகள் அணியும் வளைந்திருக்கும் ஒரு திருகல்-கழுத்தணி.
“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”
மிகச் சிறிய இடத்தில் எழுத்தாளர் திலீப் குமாரும் ராமகிருஷ்ணனும் சிகரெட் புகைசூழ வேலை செய்துகொண்டிருப்பார்கள், நானும் என் மாமாவும் அடுத்த அறையில் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருப்போம். க்ரியா ஒரு கண் திறப்பு அனுபவமாய் இருந்தது. அங்குதான் நான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களையும் ஸ்ரீராமின் மொழியாக்கங்களையும் அறிந்துகொண்டேன். தார்கோவ்ஸ்கியின் Sculpting in Time என்ற புத்தகத்தின் தமிழாக்கமும் அங்கேதான் கிடைத்தது.
பாண்டி(த்ய)ஆட்டம்
எதை உன்னதம் என்போம்? அது மனதிற்கினிய உயர்ந்த பொருளா அல்லது எட்மண்ட் பர்க் சொல்வதுபோல் இருண்மையான, நிலையற்ற பயங்கரமா? அது ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வியலில் ‘உன்னதமயமாக்கம்’ என்று ஆகிவிட்டதா? இந்த கேள்விகளுடன் நம்பி கிருஷ்ணன் பாரதியை ‘பேயவள் காண் எங்கள் அன்னை’ என்று இணைக்கிறார். அப்படியாகப்பட்ட உன்னதம் ஸ்டீவென்ஸ்சுக்கு ஆத்மாவில் இறங்கி வருகிறது.
‘தன்னளவில் ஒன்றுமில்லாதவன், சொற்ப இலைகளின் ஓசையில் எந்தத் துயரையும் நினையாதொழிய, அங்கில்லாதது ஒன்றுமில்லை, உள்ளது இல்லாதது’. வாலஸ் ஸ்டீவென்ஸ் கட்டுரையில் பாரதி, ஷெல்லி, கீட்ஸ், விட்மன், குறுந்தொகை, ரிக் வேதம் அனைவரும் பொருத்தமாக இடம்பெறுகிறார்கள். விதியின் இயற்கைச் சுழற்சியைத் தலைகீழாக்கும் உன்னதம் காணக்கிடைக்கிறது.
ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்
வெவ்வேறு சட்டகக் கதையாடல்கள், கதைக்குள் கதைகள், அறச் சிக்கல்கள், வம்ச விருத்தி… இனி வருவதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்களை வழிகாட்டும் (அல்லது கட்டுப்படுத்தும்), கதையாடல் உத்திகள் நாவலின் துவக்கத்திலேயே, அதன் அரங்கேற்ற வேளையிலேயே, அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.
கைச்சிட்டா – 2
அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2
நான் உன்ன கேலி பண்றேன்னு நெனச்சுக்காதே. உடல்சார்ந்த விசயத்தில் உன் தைரியத்தின் மீது எனக்கு உண்மையிலேயே நிறைய மதிப்புண்டு. எனக்கோ அது சுத்தமா கிடையாது. உன் நண்பன் ஜெத்ரோ கூறினான், தேவதைக் கதையில் வர பையனப் போல பயத்தையோ கூச்சத்தையோ உன்னால உணரக்கூட முடியாதுன்னு. நான் அதுக்கு நெரெதிர். சில சமயத்துல, பார்க்கப்படுவதை, டார்லீனால் பார்க்கப்படுவதைக்கூட என்னால் சகிச்சிக்க முடியாது. இரண்டு இடது பாதங்கள், பத்து கட்டை விரல்களை வைத்துக் கொண்டு நாட்டியக்காரியாக ஆனது எனக்கு எப்படிப்பட்ட திருப்புமுனையாக இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாரு
ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1
“ஆனா அது நார்த் கரோலினா. இதுவோ நியூ யார்க். நகரத்துலேந்து ரெண்டு பஸ்சுங்கள நிரப்பற அளவுக்கு விமர்சகர்கள் வரப் போறாங்க. கொடியெரிப்பெல்லாம் அந்தக் கூட்டத்துக்கு ஒரு பிரச்சனையே அல்ல. இங்க லிபெரல்கள் அதிகம், அவங்களுக்கு இம்மாதிரியான அத்துமீறல்கள் வெல்லக்கட்டி போல. முதல் சட்டத் திருத்தமோ, இரண்டாவதோ இரண்டில் ஏதொவொன்று அளிக்கும் உரிமையை அமல்படுத்திக் கொள்வதாக அவங்க இத அர்த்தப்படுத்திக்குவாங்க. மேலும் மீள்-நிகழ்த்தல்களுக்கும் இவை பொருத்தமா இருக்கும். சொல்லப் போனால், பாம்புகளைக் காட்டிலும் பொருத்தமா இருக்கும். இந்தப் போரில் இந்தியர்களே ஜெயித்தார்கள்.
ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை
“நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல்” மிகப் பெரும் நோக்கு கொண்டது. ஓர் ஓவியத்தின் பார்வையில் உலகளாவிய ஏகாதிபத்திய வரலாற்றையும் வெவ்வேறு காலனிய தூரதேசங்களில் அதன் சமூக தாக்கங்களையும் சித்தரிக்கிறது. புத்தகத்தின் சிறந்த வாக்கியம் இந்தக் கதையில்தான் இருக்கிறது – “கண்கள் மட்டும் பக்கவாட்டில் துடுப்பு போட்டபடி இருந்தது”. சால் பெல்லோ எழுதியிருக்க வேண்டியது.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
ஆனால் காலம் போகப் போக, இலக்கிய வரலாற்றின் முரணியக்கத்தை உக்கிரமாக உணர்ந்து கொள்வதால், மற்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புத் தொகைக்கும் உங்களுக்குமான தொடர்பை சமாளிக்க உங்களுக்கு பல விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. இலக்கியத்திற்கும், ஆசிரிய மற்றும் எழுத்துப் பணிக்கும் இருக்கும் தொடர்பைப் பொருட்படுத்துவதற்கான விழைவிற்கும் மேலும் மேலும் அடிமையாகி விடுகிறீர்கள். அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலகட்டத்தில் சாத்தியப்பட்ட சில குறிப்பிட்ட விஷயங்கள் இனிமேலும் சாத்தியப்படுவதில்லை.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
இலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.
மாமாங் டாய்- மூன்று கவிதைகள்
நினைவில் நீங்காது எப்போதும்
கல்லிலும் புல்லிலும் குழந்தைகளின் துயிலிலும்
தெய்வங்கள் உய்த்திருப்பார்களென ஏன் நினைத்தோம்;
இப்போதோ, கண்மூடி
நம்பிக்கை துறக்கையில், தெய்வங்கள் மரிக்கின்றன.
ஸீபால்டை வாசித்தல் அல்லது தொடர்படுத்தல்களின் கிறுகிறுப்பு
“பெலிண்டாவின் உலகப் பயணம்” என்ற கதையில் சிறுமியொருவள் தன் பொம்மையைத் தொலைத்து விடுகிறாள். அது தன் பொம்மைத் தோழனால் உலகப் பயணம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருக்கிறது என்று அச்சிறுமியை அவள் குடும்ப நண்பரொருவர் (ஹெர் காஃப்கா) நம்ப வைக்கிறார். அதன்பின் உலகின் வெவ்வேறு இடங்களிலிருந்து அப்பொம்மை எழுதுவது போல் காஃப்கா சிறுமிக்குக் கடிதம் எழுதுகிறார். மீண்டும் இலக்கியச் செயல்பாடு ஒரு தனிநபர் நெருக்கடிக்கான தீர்வாக முன்வைக்கப் படுகிறது.
பிரதிபலிக்கும் வளையங்கள்-ஸீபால்டின் ‘The Rings of Saturn’ குறித்து சில எண்ணங்கள்
ஸீபால்டின் “பிரதி மேய்தல்கள்” இயல்பாகவே சற்று முரண்பாடானவை. ஒரு வகையில், அவை நிர்ணயிக்கப்பட்ட தொடக்கத்திலிருந்து முன்னதாகவே அறியப்பட்ட முடிவிற்கு நேர்க்கோட்டில் விரையும் வழமையான கதையாடலிலிருந்து மாறுபடுவதற்கான முயற்சிகள். ஆனால் இலக்கிய, வரலாற்று நாயகர்களின் நினைவுகள் மற்றும் கதைகளிலிருந்து காலம்காலமாக வரலாற்றிலும் இயற்கையிலும் “மீண்டும் மீண்டும்” பரவலாக நிகழும் அழிவின் “நிரந்தரத்தையே” இம்மேய்தல்களில் அகழ்ந்தெடுக்கிறார். அந்நிரந்தரமோ அவரது அக/புற உலகு மேய்தல்களை அர்த்தமற்றதாக்கி விடுகிறது.
வேடன்
கிறுக்குத்தனம் அடங்க மறுத்துத் தன் தலையை மீண்டும் மீண்டும் உயர்த்தும்போதெல்லாம் அக்கணமே அதை இரக்கமில்லாமல் அடக்குபவர்கள் ஸீபால்டின் பாத்திரங்கள். வாழ்வுடன் உறவு பூணுதல் என்ற விஷயத்தை அவர்கள் மிகவும் எச்சரிக்கையாய்த் தவிர்க்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒரு நோய்மையாய், ஒரு சுயவாதையாய், சோக உணர்வுடன் இணக்கம் பாராட்டுகிறார்கள், அது அவர்களை ஆட்கொள்வதற்கு எளிதில் இணங்கி விடுகிறார்கள். ஸீபால்டின் படைப்பில் தான்தோன்றித்தனமான கணப்பித்துக்கும் இருண்மையான யதார்த்தத்துக்கும் இடையில் ஓர் ஊசலாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது.
டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு
ஸீபால்ட் எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. “என் வேலை கடினமாகவும் என் விழிப்பு நேரம் அனைத்தையும் கோருவதாகவும் அமைந்திருந்ததால் எழுதுவதற்கான நேரம் எனக்கு கிடைக்கவே இல்லை.” ஒரு கருப்பொருளிலிருந்து மற்றொன்றிற்கு ஒழுங்குமுறையின்றி தாவுவது போல் தோற்றம் தரும் அவர் படைப்புகளின் அனிச்சையான தொடர்புபடுத்தல்கள் மனநலச் சிகிச்சையின் வழிமுறைகளை நினைவுறுத்தியதால் அவர் அம்மாதிரியான சிகிச்சைகளை எப்போதாவது முயற்சித்ததுண்டா என்று கேட்டேன். “அதிலெல்லாம் ஈடுபடுவதற்கான நேரம் அமையவில்லை. மற்றவர்களின் மனநலச் சிகிச்சை வரலாறுகளைப் படிப்பதுதான் எனக்கு சிகிச்சையாக இருந்திருக்கிறது.”
கசாப்புக்கடையில் குறும்பாட்டுக்குட்டி
மேரி மலோனி கணவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்காக காத்திருந்தாள். அவ்வப்போது, கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள், ஆனால், பதற்றமேதுமின்றி, கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் கணவனின் வீட்டு வருகையை இன்னமும் நெருங்கச் செய்தது என்ற திருப்தியுடன். அவளையும், அவள் செய்து கொண்ட அனைத்துக் காரியங்களைச் சுற்றியும் ஒருவிதமான மந்தகாசச் சூழல் நிலவியது. தைத்துக் கொண்டிருக்கையில் அவள் தலையை கீழே சாய்த்த விதம் அசாதாரண அமைதியுடன் காட்சியளித்தது– கருத்தரித்து ஆறு மாதமாகியிருந்த அவளது சருமம் அற்புதமான ஒளியூடுருவும் தன்மையைப் பெற்றிருந்தது. மென்மையான உதடுகள், புதிதாய் கிட்டிய மெல்லமைதியால் முன்னதை விட பெரிதாகவும் மேலும் கருமையாகவும் காட்சியளித்த விழிகளுடன் அவள் காணப்பட்டாள். கடிகாரம் ஐந்து மணி ஆவதற்கு இன்னமும் பத்து நிமிடங்களே இருக்கிறது என்று காட்டிய உடனேயே அவள் செவிமடுக்கத் தொடங்கினாள்.
லொரான் பினேவின் ‘தி செவன்த் ஃபங்க்சன் ஆஃப் லாங்க்வேஜ்’ அல்லது ஷெர்லாக் ஹோம்ஸ் போல் துப்பறிகிறார் பார்த்.
ருஷ்ய மொழியியலாளர் ரொமன் யேகப்ஸன் ஏற்கனவே விவரித்துள்ள ஆறு செயற்பாடுகள் போக இரகசியமான ஏழாவது மொழிச் ‘செயற்பாடு’ குறித்து அந்த ஆவணம் விவரிப்பதாக நம்பப்படுகிறது. எவரொருவர் அதில் மேதமை பெறுகிறாரோ, அவருக்கு ‘வலியுறுத்தல்’ ஆற்றல்களை அளிக்கவல்ல செயற்பாடு அது என்பதால் பல சிந்தனையாளர்களும் பிரெஞ்சு அரசியல் வட்டத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களும் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, எண்பதுகளில் நிலவிய பிரெஞ்சு இலக்கியச் சூழலிற்குள் விளையாட்டுத்தனம் கலந்த அரைத் தீவிர பயணம் துவங்குகிறது (பார்த், ஃபூக்கோ, சொலேர்ஸ், ஜூலியா கிரெய்சிஸ்தெவா, தெரீதா, லகான் என்று பிரெஞ்சு விமரிசன மரபின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த நாவலின் பாத்திரங்களாய் இடம் பெறுகின்றனர்).
காயப்படுத்துவோரும் காயமுற்றோரும் – வி.எஸ். நைபாலின் சாம்ராஜ்யம்
இந்திய சமூகவியல் கோட்பாட்டாளரான அஷீஸ் நந்தி கிப்லிங்கிற்கு இரண்டு குரல்களிருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஸாக்சோஃபோன் குரல், ஓபோ குரல் என்று அவர் வகைப்படுத்தியதாக நினைவு. முதலாவதானது கடுமையான, இராணுவத் தொனி கொண்ட ஏகாதிபத்திய எழுத்தாளருடையது. இரண்டாவது, துணைகண்டத்தின் கலாச்சாரங்களை வியக்கும் இந்தியத்தனம் ஊடுருவும் கிப்லிங்கின் குரல். நைபாலிற்கும் ஒரு ஸாக்சோஃபோனும் ஒரு ஓபோவும் இருக்கிறது: ஒரு கடுங்குரலும், ஒரு மென்குரலும். இவற்றை நாம் காயப்படுத்துபவர் மற்றும் காயமுற்றவரின் குரல்கள் என்றும் அழைக்கலாம். காயப்படுத்துபவரின் குரல் நாம் நன்கறிந்ததே – பின்காலனித்துவ ஆய்வுகளையும் இலக்கியவுலகையும் வசீகரிக்கும் வெறுப்பின் மூலம்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்
தன்னை தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை தீக்கங்கு விரல்களாய் அவரைத் தீண்டுவது நிற்கவில்லை, அவரது சுடர்மிகு அறிவு, “தன் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவது,” அதுவொன்று மட்டுமே அவருள்ளத்தில் தன்னைச் சூழ்ந்திருந்த வேடிக்கை மனிதர்களிடமிருந்து அவரைப் பிரித்துக் காட்டியது. நம் இளைஞன் ஒரு துயர் தன் இதயத்தில் கவிவதை உணர்கிறான், ஆயினும் அலையொன்று அவனைச் சாடி நனைக்கிறது, ஏதோ ஒரு உன்னதம் தன்னைத் தொட்டாற்போல் இருக்கிறது. நைபாலின் பிஸ்வாஸ் போல், அவரும், மார்க்குஸ் அவுரேலியஸின் மெடிடேஷன்களை ஸ்லம்பர்கிங் மெத்தையில் படுத்திருந்தபடி வாசித்து ஓய்வெடுக்கலாம், என்று அவன் ஆறுதல் சொல்ல விரும்புகிறான், உறவினர் விஷயத்தில் அந்தப் புத்தகம் ஃபைன்மேனின் ‘லெக்சர்ஸ் ஆன் பிசிக்ஸ்’ ஆக இருக்கக்கூடும். ஆனால் இது அத்தனையிலும் தன்னிரக்கத்தின் நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்து, “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் ‘பெண்ட் இன் தி ரிவர்’ நாவலில் வருவது, “ஒன்றுமில்லாதவர்கள், தாம் ஒன்றுமில்லாமல் ஆக அனுமதித்தவர்கள், அவர்களுக்கு அங்கு இடமில்லை,” என்ற சொற்கள் என்பதை நினைவுகூர்கிறான். அதையொட்டியே அவனும் தன் உறவினரிடம், “கனவு காண்பது போதாது, செயல் புரிய வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறான்
மரிலின் ராபின்சனின் 'ஹவுஸ்கீப்பிங்' அல்லது வீடு பேறடைதல்
அம்மாவின் தற்கொலை ரூத் மற்றும் அவளது சகோதரி லூசில்லில் அக மையத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. நாவல் அடுத்தடுத்த கட்டங்களை அடையும்போது இவர்கள் இருவரும் தம் உள்ளத்தின் வெறுமையை இட்டு நிரப்பிக் கொள்ள தமக்கேற்ற வெவ்வேறு உத்திகளை மேற்கொள்கின்றனர். ஒரு வகையில், இழப்பின் மீதான தியானமாய் ‘ஹவுஸ்கீப்பிங்’கை நினைத்துக் கொள்ளலாம், அதிலும் குறிப்பாய், அம்மாவின் இழப்பு மீதான தியானம், என்று. மேற்குலக இலக்கிய மரபு அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிளவை (‘கிங் லியர்’), மகனுக்கு அம்மாவுக்கும் இடையிலான பேதத்தை (‘ஹாம்லட்’/ ‘ஈடிபஸ்’) மகத்தான துன்பியல் நாடகங்களாகத் தொகுத்துக் கொண்டிருக்கின்றது என்றாலும், “அம்மா-மகள் நேசம் மற்றும் ஆனந்தத்துக்கு, நிலையான அங்கீகாரம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை”, என்று (அட்ரியன் ரிச் சொற்களில்) சொல்லலாம் என்பதால் ‘ஹவுஸ்கீப்பிங்’கின் இந்தக் கூறு விமரிசகர்களால் முன்னோடியான ஒன்றாய் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஏழைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்
மர உலோக வேலிகள்:
கம்பளிச் சட்டையும் மிருதுவான தொப்பியும்
அணிந்திருக்கும் கிழவனொருவன்
காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 3
வெள்ளம் – தண்டனை – அதன் பின்னே, பறவைகள் கூட மறந்துவிட்ட, புழுதி மற்றும் வெப்பத்தின் விடாப்பிடியான தாக்குதல்களால் மூச்சுவிடவே அரிதாக இருக்கும் ஒரு மகோண்டோவை விட்டுச் செல்கிறது. அங்கு எஞ்சியிருப்பவர்கள் யார் ? சிவப்பெறும்புகளின் சத்தத்தால் தூங்குவதற்கே முடியாத ஓர் வீட்டில் தனிமையாலும் காதலாலும் (காதலின் தனிமையாலும்) ஒளிந்திருக்கும் மீந்தோர்களான ஆரேலியானோவும் அமரான்டா உர்சுலாவும் (Aureliano & Amaranta Ursula). இதன் பிறகு புத்தகத்தின் மூன்றாம் வெளி திறக்கிறது. இதுவே அதன் தொன்ம வெளி – அதன் உடன் நிகழ்வான, புதுப்பிக்கப்படக்கூடிய இயல்பை இறுதிப் பத்திகளுக்கு முன் புரிந்துகொள்ள முடியாது.
துண்டிக்கப்பட்ட தலையின் கதைகள்
எப்போதுமே அந்த மரத்தை நோக்கி செல்வது பெண் தானா?
மாதுளம்பழம் கூட எனக்கு போதுமானதாய் இருந்திருக்கும்.
உன் தொண்டையைக் கிழித்த அந்த ஆப்பிளாக இருந்தேனென்ற
குற்றவுணர்வுகளும் எனக்கு இருந்திருக்காது.
ஏனெனில்
உன் உதடுகளிலிருந்து நான் பிறக்கவில்லை
உன் நெஞ்சிலிருந்து நான் பிறக்கவில்லை
கவிதையின் நேரம்
உழைப்பென்று நான் குறிப்பிடுவது கவிதை எழுதுவதற்குத் தேவையான உழைப்பையல்ல. எழுதப்பட்ட கவிதையின் உழைப்பைப் பற்றியே பேசுகிறேன். ஒவ்வொரு உண்மையான கவிதையும் கவிதை என்ற கலைவடிவத்தின் உழைப்பிற்குப் பங்களிக்கிறது. வாழ்க்கை பிரித்து வைத்ததையும் வன்முறை கிழித்தெறிந்ததையும் உடனிணைப்பதே இவ்வோயாத உழைப்பின் பணியாகும். உடல் சார்ந்த வலியை அனேகமாகச் செயலால் குறைக்கவோ நிறுத்திவிடவோ முடியும். ஆனால் மற்ற மானுட வலிகளனைத்திற்கும் பிரிவின் ஏதோவொரு ரூபமே காரணமாக இருக்கிறது. இவ்வகை வலிகளை நேரடியாக மட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைவு. கவிதை எந்த இழப்பையும் ஈடு செய்துவிடுவதில்லை என்றாலும் பிரிக்கும் இடைவெளியை எதிர்க்கிறது :சிதறடிக்கப்பட்டதை மீண்டும் ஒருங்கிணைக்கும் தனது இடையறாத உழைப்பின் மூலம்.
காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 2
நடைமுறைப் போக்கை அனுசரிக்கும் ஜெனோவாவைச் சேர்ந்த கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸே தங்கமும் , நறுமணப்பொருட்களும் (Spices) இல்லாத ஓரிடத்தில் அவற்றின் இருப்பை புனைந்து தன்னை பெரும் செலவில் வழியனுப்பிய மகாராணியை முட்டாளாக்கிவிட முடியுமென்று நினைக்கிறார். இறுதியில் ஹேய்டியில் தங்கத்தை கண்டுபிடித்தபின் அத்தீவிற்கு “லா எஸ்பானியோலா” (La Espanola) என்ற பெயரிட்டு அங்கு காஸ்டில்லில் இருப்பதைப் போல் எல்லாம் இருக்கிறதென்றும் , காஸ்டில்லை விட சிறப்பாகவே இருக்கிறதென்றும் கூறுகிறார். இறுதியாக, தங்கமிருப்பதால், பொன்மணிகள் மொச்சைக்கொட்டை அளவு பெரிதாய், இரவுகளின் அழகு அண்டாலூசியாவின் இரவுகளுக்கு நிகரானதாய், பெண்கள் ஸ்பெயினின் பெண்களை விட வெண்ணிறமாகவும், பாலியல் உறவுகள் அதைவிட பரிசுத்தமாகவும் (மகாராணி ஒழுக்க நெறி பேணுபவர் என்பதாலும், வருங்கால நிதிஒதுக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதை தவிர்ப்பதற்காகவும்)….
காப்ரியெல் கார்ஸியா மார்க்கெஸ்ஸும் அமெரிக்கப் புனைதலும் – 1
மேலே தரப்பட்டுள்ள மேற்கோள்களில் முதலாவது காப்ரியல் கார்சியா மார்கேஸின் நூற்றாண்டு காலத் தனிமை என்ற நாவலின் பிரசித்தி பெற்ற ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில், உறக்கமின்மை என்ற கொள்ளை நோயால் தாக்கப்பட்ட பின் மக்கோண்டோ என்ற ஊரே ஞாபக மறதியால் பாதிக்கப்படுகிறது. இந்த நோய்மையிலிருந்து மீள ஆரேலியானோ புவெந்தியா என்பவர் வலுவானதொரு சூத்திரத்தை உருவாக்குகிறார்: ஊரிலுள்ள அனைத்துப் பொருட்கள் மீதும் அவற்றின் பெயர்களை குறியிடுகிறார் – மேஜை, நாற்காலி, கடிகாரம், சுவர், கட்டில், பசு, ஆடு, பன்றி, கோழி. சதுப்பிற்குள் செல்லும் சாலையின் தொடக்கத்தில் மக்கோண்டோ என்ற குறிப்பலகையையும் , அதை விடப் பெரிதாக, பிரதான சாலையில், கடவுள் இருக்கிறார் என்று அறிவிக்கும் மற்றொரு பலகையும் எழுப்பினார்கள்.
வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்ற ஸாக்ஸிஃப்ரேஜ் மலர்
இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஆங்கில மொழியின் இலக்கியங்களில் நிகழ்ந்த ஒரு மாற்றம் கவிதையையும் உரை நடையையும், சொற்றொடர் இலக்கணத்தையும் நுண்மையையும் (sensibility), கவிதையியலையும் கற்பனையையும் ஒருங்கே பாதித்தது. ஐரோப்பா மற்றும் லதீன் அமெரிக்கா பகுதிகளில் அதே சமயம் நிகழ்ந்த மாற்றங்களை ஒத்த இம்மாற்றம் முதன்முதலில் ஒரு சில, அனேகமாக அமெரிக்க, கவிஞர்களாலேயே உருவாக்கப் பட்டது. இந்த ஆரம்ப கர்த்தாக்களிலான குழுவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு தனித்துவமிக்க மைய இடத்தை வகிக்கிறார் : பவுண்டையும் எலியட்டையும் போல வேரோடு லண்டனிற்கோ பாரிஸிற்கோ புலம் பெயராமல், நியூயார்க்கிற்கு புறத்தேயுள்ள சிறு நகரமொன்றில் தன்னை ஆழ்த்திக் கொள்வதையே அவர் விரும்பினார்…
மொழிபெயர்ப்பு கவிதைகள்
எனினும் சிலசமயம் அது வருகிறது
கருப்புக் கோழியாக
உருண்ட சிகப்புக் கண்ணுடன்
ஒவ்வொரு நாளும் நீ விளையாடுகிறாய்
வெய்யில்தோய்ந்த உன் முத்துச்சிற்பி உடலை வெகு காலம் நேசித்திருக்கிறேன்.
பிரபஞ்சமே உனக்கு சொந்தமென்று கூறும் அளவிற்கும் நான் செல்வேன்,
நான் உனக்கு மலையிலிருந்து கொண்டு வருவேன் மகிழ்சியான பூக்களை, நீலமணிகளை,
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
ஒவ்வொரு மாலையும்
என் வருகையை எதிர்பார்த்து
கலைந்த கூந்தலும், சமையலறையின்
பிசங்கற் சீலையுமாய்
என் மனைவி
வாசலில் காத்திருக்க,
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
இளைப்பாறுவது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் பயணம் விலக விலக
மேலும் மேலும் மெதுவாக. என் தலை சுற்றுகிறது.
இப்போதே சிகரெட்டை குடிக்க வேண்டும் என்றெனக்குத் தோன்றவில்லை.
அதெற்கெல்லாம் நேரமிருக்கிறது. முதலில் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்
நூறாவது முறையாக, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று.
கவிதைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்
கசங்கிய
காவி நிறத்த
கிட்டத்தட்ட ஒரு ஆளின்
நீளமும் பருமனையும்
உடைய காகிதமொன்று
சாலையில்
பூனை
காலையில் எஞ்சியிருந்த நேரத்தில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது, சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத் தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல் படுக்கை மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள்.