“அது வளரும் யானதண்டிக்கு. இதொண்ண மட்டும் உங்க தாத்த வெட்ட விடல. மத்தத எல்லாம் வெட்டி வெட்டி செரியான ஒசரத்துல வச்சிருப்போம் பொதரு மாதிரி. இதொண்ணு மட்டும் அம்பது அடிக்கு வளந்து நிக்குது. கெளம்பி போக நேரத்துல அத இந்த மேட்டுலருந்து நிண்ணு கண்ணடைக்காம அவரு பாக்கத நான் பாத்துருக்கேன். கடைசியா உனக்க அப்பாக்கிட்ட எஸ்டேட்ட கொடுத்துட்டு போகும்போ அத மட்டும் எதும் செய்யக்கூடாதுண்ணு சத்தம் போட்டாரு….