விதிச்சத மாத்தணும்… ஆம்பளைங்க போல பொம்மனாட்டிகளும் எல்லா வேலையும் செய்யணும்… – உள்ளுக்குள் ஊறிய ஆளுமை உணர்வோடு கிசுகிசுத்தாள் செண்பகத்தம்மா.
ஆம்பளைங்க செய்யுற வேலையெல்லாம் செய்யுறது பொறவும்மா… மொதல்ல இப்ப ஆம்பிளைங்க போனது மாதிரி, வெட்ட வெளியில பொம்பளைங்களால ஒண்ணுக்கு போக முடியலையே… முடிஞ்சா அதுக்கு ஏதாவது பண்ணுங்க … – உடல் அனுபவிக்கும் துயரம் என் வாயின் வழி வார்த்தைகளாய் வெளியேறியது.