பெருக்கு

” மாராப்ப நல்லா இழுத்து வுட்டுக்கிட்டு பாலக்குடு. இப்படி தொறந்து போட்டா பாக்குறவங்களுக்கு பக்குன்னு இருக்கும்,” ரம்யாவை அதட்டிக் கொண்டேயிருந்தாள். பால் சுரக்கும் மார்பகங்கள் கையில் கரண்டியோடு நிற்கும் அன்னபூரணிகள். அதிலும் இவளது அமுதசுரபி. சுரந்து கொண்டேயிருந்தது. சாமியறையில் ஒரு சிறு பித்தளைத் தாம்பாளத்தில் அம்மா அன்னபூரணியை அமர்த்தியிருந்தாள். பித்தளை அன்னபூரணி. தீபச்சுடருக்கு தங்கம் போல ஜொலித்து கையில் கரண்டியோடு புன்னகைத்தபடி அமர்ந்திருக்கும் அன்னபூரணி.
எதிரே ஒரு சின்னஞ்சிறு வெள்ளிப்படியில் அரிசி. அமுதிடுவதே அவள் வேலை.

கருவாய் உயிராய்

என்னைப் பயமுறுத்த வேண்டாம் என்று ஒரு சிற்றுந்தில் என் கணவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார். நாங்கள் இறங்கும் நேரம் ஐந்து தாதிகள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என் தலையைத் தடவி அணைத்த அவர்கள் யாரும் தமிழ் பேசுபவர்கள் அல்லர். அரசு மருத்துமனை பற்றிய என் பிம்பம் முற்றிலும் உடைந்தது.

தீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்

சுமார் பத்து ஆண்டுகள் முன்பு இந்தியாவில் சற்றேறக்குறைய 32,000 பெண்கள் மகப்பேற்றின்போது ஓர் ஆண்டில் இறந்தார்கள். முதன்மை தாய் சேய் நல மருத்துவமனையும் 2018-ல் அரசாங்கம் கொண்டுவந்த 18 மாத மருத்துவச்சிப் பயிற்சியும் இந்த நிலையைச் சற்று மாற்றி இறப்பைக் குறைத்தன. இருந்தும் போக வேண்டியதென்னவோ வெகு தூரம்.