தானியங்கி வாகனங்கள் செயல்படும் முறை

ஒளியை கொண்டு சூழலை உணரும் கருவி. மனித கண்களுக்கு புலப்படாத புறஊதா (Ultraviolet) மற்றும் அகச்சிவப்பு (Infrared) அலைகளை சுற்றிலும் தெறித்து பரப்பி, சூழலில் உள்ள பொருளின் மீது படித்து பிரதிபலித்து (Reflection) திருப்பி பெறுவதே இதன் வேலை. பிரதிபலிக்கும் அலைகளை கொண்டு வாகனத்தை சுற்றி ஒரு முப்பரிமாணம் வரைபடத்தை (3D map) செயற்கை நுண்ணறிவின் செயலாக்க கருவி (Processing Unit) உருவாக்கும்.

உதா – முப்பரிமாணத்தை கொண்டு தொலைவில் இருப்பது மனிதனா, மரமா, வாகனமா என்பதை செயற்கை நுண்ணறிவு முடிவெடுக்க உதவும். இதன் மாபெரும் குறை என்பது மழை, பனி போன்ற சூழலில், காற்றில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை சிதறடிப்பதால் (Scatter) முடிவுகள் துல்லியமாக கிடைக்கப்பெறாது.

செயற்கை நுண்ணறிவு – சில கற்பனைகள்!

இதில் மனித செயலாண்மையின் (Human Agency) இடையீடு இல்லாமல் எல்லாவித மனிதத் தேவைகளும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ற மிகச்சரியானவற்றை, AI துணைக்கொண்டு மனிதர்கள் செய்யமுடியும் என்பதிலிருந்து, அதிகாரத்திற்காக சமூகத்தை மிக எளிதாக ‘ஹைஜாக்’ செய்யமுடியும் என்றும், எதிர்காலத்தில் தற்போதைய ராணுவங்கள் இருக்காது – எதிரி நாட்டை அடக்குவதை, அந்த நாட்டின் சமூகத்தை AI-ன் துணைக்கொண்டு மூளைச்சலவை செய்து அடையலாம் என்றும், மனித உடல்நலம் சார்ந்த அணுகுமுறையில் உருவாக்க சாத்தியமுள்ள நல்ல/தீய விளைவுகள் என்றும், இன்னும் இதைப்போன்றவையும் இந்த உரையாடலின் களமாக இருந்தது.