உலகளவில் 40% கயிற்றையும் 20% பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மிக அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ததினால் ஸ்ரீலங்காவில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. உயரத்திலிருந்து குதித்தும், சிலமருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டும் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களும் அதிகமாயுள்ளனர். உயரமான கட்டமைப்புகளைச் சுற்றிப் பெரியதடுப்புகளை அமைப்பதின் மூலம் இவ்வழி பயன்படுவதைக் குறைக்கலாம்.