சோறிடும் போது அவள் விரல்களை கவனிப்பான். அவை சின்ன சின்னதாக அழகாக இருக்கும். அவளின் விரல்களை காண நேர்கையில் அவன் எண்ணங்கள் எங்கோ போய்விட்டு மீளும். அவசரமாக தலையை வேகமாக உதறிக்கொள்வான். சாப்பாடும் வைக்கும் போது அவள் காட்டும் நேர்த்தியும், பதறியபடி இவனின் ‘ம்….ம்’ என்ற முனகலுக்கு வார்ப்பதை நிறுத்தும் நரிவிசும் அவனுக்கு பிடித்திருந்தது.
Tag: தமிழ்க் கதைகள்
அணங்கு கொல்?
அதில் அந்த பெண் கொஞ்சம் பெரியவளாக இருபதுகளின் இறுதியில் இருப்பவள் போல இருந்தாள். அவளும் மராத்திக்கட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.கூட இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக குழந்தைகள்.” வாம்மா! வாங்கோடா கண்களா!” குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆயி கேட்டாள் “என்னடி பார்வதி! உங்க மடிசார் கட்டிக்காமல் நம்ம கட்டு கட்டிண்டு இருக்கே ”
நான்கு சுவர்கள்
நான் ஸ்கூல் படிக்கும்போது அவுங்கதான் எனக்கு ஆறு வருஷம் தமிழ் டீச்சர். அவங்கள புடிக்காத ஸ்டூடன்சே அப்ப எங்க ஸ்கூல்ல கெடயாது. அம்மா பெரிய அறிவாளியெல்லாம் இல்ல. ஆனா அவுங்க தமிழ் கிளாஸ் இன்ட்ரஸ்டின்ங்கா இருக்கும். இன்னிக்கும் நான் தமிழ் நாவல்ஸ்லாம் படிக்க அவுங்க தான் இன்ஸ்பிரேஷன். அம்மா நல்ல ஒயரம். அந்த பவளக்கல்லு மூக்குத்தி அவுங்க நீளமான மூக்க கிள்ளிக்கோன்னு இன்னும் எடுத்துக்காமிக்கும். அவுங்க காட்டன் பொடவ கட்டி அதுக்கு மேட்சிங்கா ஆக்சசரீஸ் போட்டு ஸ்கூலுக்கு வருவாங்க. அத பாக்கறதுக்குன்னே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனா என்னவிட அம்மா கொஞ்சம் கலர் கம்மிதான். நான் அப்பா மாதிரி கொஞ்சம் வெள்ள கலர்.
ஆர்கலி
அவன் அந்தத் தகட்டுக்கதவை ஓங்கி அடித்துக்கொண்டிருந்ததில் ஊரே சற்று நேரத்திற்குக் குழுமியிருந்தது. சதகத்தும்மா ஒரு ஓரமாக அத்திவாரத்திட்டில் குந்தியிருந்தாள். கண்ணிலிருந்து நீர்வரத்து நின்றிருந்த பிசுபிசுப்புக்குத் தாடைய ஒட்டவைத்துப் பார்த்தபடியிருந்தாள். கால்களைச் சுற்றி பூனைக்குட்டிகள் ஒன்றன் மீதொன்று வாகாய்ப் படுத்திருந்தன. அத்தனை அவமானத்திலும் பூனைகள் கால்களைக் கவ்வி உரசும் வால்சுரணை கொஞ்ச நேரத்திற்கு இருக்கலாமென்றிருந்தது. கிணற்றைச் சுற்றி குளிக்கக் கட்டிய சீமெந்துக் கட்டின் கீழ் மணல் சாந்தோடு அரித்துப்போனதில் சாய்ந்திருந்தது.
உச்சி
” இந்தா பாரும்மா, உனக்கு அந்த certificate கிடைக்காது. வீணா அலையாதே. கேட்டியா?” என்றார் பாஸ்கரன்.
தலையாரியின் கண்கள் கலங்கின.
வேதி எப்போதும் அது கிடைக்கும் என் நம்பியதில்லை. தலையாரி வலிந்து உதவியதால் மட்டுமே விண்ணப்பித்திருந்தாள். வேதி வெறித்த கண்களுடன் அலுவலரை பார்த்துக்கொண்டிருந்தாள். எதுவும் பேசவில்லை.
தலையாரி “ஐயா இது மகா பாவமுங்க” என்றார்.
பாஸ்கரன் “எனக்கு பாவ புண்ணியம் லாம் கணக்கில்ல பாத்துக்க?, என் கையெழுத்து இல்லாம ஒன்னும் முடியாது” என்றார்.
தோண்டிக்கு செல்லும் பெருந்து
எனக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. அதனால்தானோ என்னவோ நான் எப்பொழுதும் கொம்புகளாலும் கால்களாலும் தமிழை துவைத்துவிடுவேன். என் புலமை கே.ஜி. வகுப்பில் என்னை சேர்த்தபோதே துவங்கிவிட்டது. விஜயதசமியன்று பள்ளியில் சேர்த்து ஒன்றரை மாதத்தில் அரையாண்டுத் தேர்வு. தமிழ் எழுத்துகள் டிக்டேஷனில் அனைத்து எழுத்துகளுக்கும் o o “தோண்டிக்கு செல்லும் பெருந்து”
நீக்(ங்)குதல்
தியாகராஜன் அவர் கைபேசியை அணைத்து வைத்திருந்தார். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்றிருந்தது. வேண்டாத அழைப்புகள் நிறைய வருகின்றன என்று எரிச்சல்பட்டு அணைத்து வைக்க ஆரம்பித்தவர் இப்பொழுது வேணும் அழைப்புகளும் தேவையில்லை என்று தோன்ற அது அணைந்தே கிடந்தது. உலகமே அதை அணைத்துக்கொண்டு “நீக்(ங்)குதல்”