இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள்

இந்து மதத்தின் வேதங்கள், உபனிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பிரதிகள் மும்மைப் பொருள்கோள்கள் (interpretation) கொண்டவையாகும். அவையாவன: 1. நேர்ப் பொருள். இது சாமான்யர்களான பக்தர்களாலும், பாமரர்களாலும் கொள்ளப்படுவது. 2. குறியீட்டுப் பொருள். இது பண்டிதர்களால் கொள்ளப்படுவது. 3. தந்த்ரா பொருள்.

கல்நின்று முன்நின்றவர்

உணர்வு தன் சிறகுகளை ஒன்றிணைத்து உறங்கும் பட்டாம்பூச்சியென உரைந்து சிறகடிப்புகளில் தன்னை மீட்டு மீண்டும் அடங்கியது. மனம், எதிலோ முட்டிக்கொண்ட விசையுடன் அதை ஊதி நகர்த்திற்று. கணந்தோறும் உணர்வின் சிறகடிப்பு. உணர்வு, எழுந்து பறந்து அதன் வண்ணங்களை உதிர்த்து வெற்றுச் சிறகுகளுடன் வேறொரு புல்லில் அமர்ந்த கணமே உதிர்ந்த வண்ணங்களை மனம் ஊதி உணர்விடம் மீண்டும் சேர்த்தது. அது ஒரு முடிவிலி. சலிப்பின்றி ஆடப்படும் ஆட்டம். அதன் கோடிக்கணக்கான கண்ணிகளின் இடுக்குகளில் சிலவற்றிலே விரல் அகஸ்மாத்தாக சிக்கிக்கொள்கிறது.

பதிலி செய்தலும் நிஜமும்

மதங்கள் கடவுளிடம் சரணடையச் சொல்வதன் காரணமே இந்த சமத்துவத்துக்கான பெருவிழைவுதான். அப்படிப்பட்ட பேரறிவு, பெருங்கருணை, பேருரு, பேராளுமையிடம்தான் அனைவரையும் ஏற்று, அனைவருடனும் ஒரே சமயம் பகிர்ந்து, அனைவருக்கும் குரல் கொடுக்க வாய்ப்பு கொடுத்து, அனைவரும் உண்டு, அனைவரையும் உண்டு, அனைவரும் ஜீரணித்து, அனைவரையும் ஜீரணித்து ஒன்றாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய பேராளுமைக்கு கால, இட நெருக்கடிகள் ஏதும் இல்லை. முப்பரிமாணம் கூட இல்லை, எப்பரிமாணமும் அதை அடைக்க முடியாத பேராளுமை என்று கடவுளை உருவகித்த காரணமும் அதுவே ஆக இருக்க முடியும்.

வரலாறு குறித்து ஹேகல்

This entry is part 6 of 6 in the series உலக தத்துவம்

ஹேகல் இவ்வளர்ச்சியை மேலும் பல விவரங்களுடன் நான்கு வகையாக வகுத்துக்காட்டுகிறார். கிழக்கத்திய உலகில் அரசனே விடுதலையுடையவன் என்று அறிந்திருந்தனர். விடுதலையின் ஆன்மா ஒரே ஒரு மனிதனில் தோற்றம் பெற்றிருப்பதால், அம்மனிதனின் விடுதலையானது பிறப்பெனும் ஒர் எதர்ச்சை நிகழ்வால் நிர்ணயிக்கபட்டதால், அவ்வகை விடுதலையானது முற்றிலும் தற்செயலானது. மேலும், மக்கள் தங்களுக்குள் இருக்கும் அகவய விடுதலையை அறியாதிருந்தனர். அதனால் ஹேகல் இதை ஆன்மாவின் வளர்ச்சியின் பிள்ளைபருவம் எனக் கருதினார்.

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியுடனான தன் அனுபவங்களை விவரிக்கிறார் ஏகாந்தன்