நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தாக்கம் குறைந்துவிட்ட பின்பும், தடுப்பூசி விகிதம் குறைவாக இருந்த அந்த தனித்த பகுதிகளில், செழித்து வரும் கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து மக்களுக்கு நோயையும் மரணத்தையும் தந்து கொண்டிருக்கும்.
Tag: தடுப்பூசிகள்
கொரொனா தடுப்பூசி
ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் மருந்து -70 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் மாடெர்னா நிறுவனத்தின் மருந்து -20 டிகிரி செல்ஷியஸ் உறைநிலையிலும் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும். -20 டிகிரி வேண்டுமானால் நம்ம வீட்டு ஃபிரிஜ் லெவல்தான் என்று சொல்லலாம். ஆனால் -70 டிகிரி செல்ஷியஸ் என்பது அண்டார்டிகா உறைபனியின் வெப்ப நிலையைவிடக் கம்மி. அந்த அளவு தாழ்ந்த வெப்பநிலையை விடாமல் பராமரிக்கும் இயந்திரங்கள் உலகெங்கும் எளிதில் கிடைக்குமா என்பது அவிழ்க்கப்படவேண்டிய பெரிய முடிச்சு.
தடுப்பூசியும் முதியோரும்
எந்த வியாதியானாலும், அதன் தடுப்பூசிக்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் சுண்டெலிகளிடம்தான் நடத்தப்படுகிறது. இச்சுண்டெலிகளின் வயது 12 வாரங்களுக்கு உட்பட்டதுதான். இது மனிதர்களின் வயதில், 20 அல்லது அதற்கும் குறைவானதாகும். வயதான மனிதர்களுக்கு ஈடான 18 மாத சுண்டெலிகளிடம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மிகக் குறைவே. ரீசஸ் குரங்குகளிடம் நடத்தப்படும் ஒரு சில ஆராய்ச்சிகளும் 3 லிருந்து 6 வயதான குரங்குகளையே உபயோகப்படுத்துகின்றன. இது இளம்பிராய வயதினருக்கு ஈடாகும்.