தமிழ்ப் பெண்கவிதைவெளி

இத்தொகுதியில் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனைய கவிதைகளின் மைய விசயமாக பெண் இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்ணை அவளின் அன்றாட வாழ்வோடு பொருத்தி அவளது பல்வேறு பரிமாணங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்தப் பகிர்வு பாசாங்குகளற்றது. சராசரியான ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய உடல், உள காயங்களிலிருந்து எழுவது

தியேட்டர் இல்லாத ஊரில்

மாத்தையப் படம் ஒளிபரப்பப்படவிருக்கும் அன்றைய இரவை முன்னிட்டு அன்று பின்னேரமே நான் மாமியின் வீட்டுக்குப் புறப்பட்டு விடுவேன். இந்தப் பயணத்தில் என்னுடன் என் மூத்த சகோதரங்களான மர்ழியாவும் மர்வானும் இணைந்துகொள்வார்கள். மர்வான் படம் பார்ப்பதற்காக என்னை விட கடுமையாக முண்டக்கூடியவன். சத்தமில்லாமல் ஒரே நாளில் ஒன்பது படம் ஒரு முறை பார்த்திருந்தான்.
ஆனால் சிலவேளைகளில் இந்த மாத்தையப் படமும் கைகொடுக்காமல் விட்டு விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அப்போதெல்லாம் மனம் ஒரு எரிமலைபோல் வெடித்துக் குமுறும். சிலநேரங்களில் மாத்தையப் படம் ஓட இருக்கும் இரவாகப் பார்த்து கரண்ட் போய் விடும்.

ஒத்திகைக்கான இடம்

சாஹிபின் ஜின் திடீரென்று மூர்க்கத்துடன் அவனுக்குள் திரும்பி வந்தது. இம்முறை தூஷண வார்த்தைகள் பேசியது. சாஹிபை அங்குமிங்கும் தூக்கி எறிந்தது. சாஹிபை சுவற்றோடு மோதியது. தரையில் தலையை வேகமாக முட்டியது. உம்மா கதறிக் கொண்டு சாஹிபைக் கட்டியணைக்கப் பார்த்தாள். அது காற்றுப்போல அவள் கைகளுக்குள் சிக்காமல் தாப்புக் காட்டியது. இது மகாகெட்ட ஜின் என அவள் பயந்து நடுங்கினாள். “என்ட புள்ளய வுட்டுடு…” அவள் கதறிய சத்தத்தால் சனங்கள் மெல்லக் குழுமினர்.  

கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்

கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது.

ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்

This entry is part 48 of 48 in the series நூறு நூல்கள்

இலங்கையில் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர் அது ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே இன முரண்பாட்டையும், போர் அரசியலையும் பற்றியே அதிகம் பேசத் தொடங்கின. அந்தப் பண்பேற்றம், குறித்த “ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்”