காளான்கள் வளர்கின்றன: டகாஹாமா க்யோஷி: ஹைக்கூ

இந்த ஹைக்கூ, ‘கொரோமோ’ நகரத்தின் (Koromo city) மக்களுக்கான ஒரு பிரியாவிடை அஞ்சலிக் கவிதையாக இயற்றப்பட்டது. அந்த நகரத்தின் மக்கள் க்யோஷி அவர்களுக்கு காளான்களைப் பிரியாவிடைப் பரிசாக அளித்தார்கள். போரின் விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து, க்யோஷி, கொரோமோ-வில், மூன்று வருடங்கள் வாழ்ந்தார். ‘பகல் நட்சத்திரம்’ என்பது சூரியனைக் குறிக்கும் எனவும், காளான் என்பது ‘பூஞ்சை’ (fungus) என்பதும் யாருக்கும் உடனே புரியும்.

டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது

ஜப்பானிய ஹைக்கூவின் ஒரு அம்சம் அதன் விளக்கத்தை அதன் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதாகும். ஹைக்கூ அதன் வாசகர்களை அதன் அர்த்தத்தை பல்வேறு வழிகளில் விளக்க அனுமதிக்கிறது. எனவே, ஜப்பானிய மூலத்திலிருந்து வேறொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஹைக்கூவில் அத்தகைய அம்சத்தைப் கிடைக்கச் செய்வது சற்று கடினம். மிகவும் தர்க்கரீதியான மொழிபெயர்ப்பு அசலின் அழகையும் உணர்வையும் மீட்டவோ மீட்கவோ கூட முடியாமல் தவிக்கும்.