செந்தில் இப்படி ஒரு கேள்வியை கவுண்டமணியிடம் கேட்டால், “ஏண்டா மாங்கா தலையா, உருப்படியான பழமொழிய இப்படியாடா நாசம் பண்ணுவே?” என்று அவர் திரும்பக்கேட்கலாம். அதற்கு செந்தில், “நான் நாசம் பண்ணலைண்ணே. புதுசா வந்திருக்கிற கம்ப்யூட்டர்தான் இப்படி பழமொழியை பாதியாக்கிருச்சாம்”, என்று பதில் சொல்லலாம். கணினி என்றால் ஓரமாய் உட்கார்ந்துகொண்டு “அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?!”