சூழல் சீர் கேடுகளுக்கும் நில வீழ்ச்சிகளுக்கும் மறைமுகமானத் தொடர்பு இருக்கிறது. வெப்பமயமாகும் புவியில் வறட்சி என்பது அதிகத் தீவிரத்துடன் அடிக்கடி ஏற்படும் சாத்தியங்களுள்ளது. ஒரு வருடத்தில் எத்தனை அளவு மழை பெய்திருந்தாலும், நீடித்த வறட்சி, சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்டு விடுகிறது. அதிக வறட்சியின் காரணமாக அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படும்; ஏறி வரும் கடலோ, மூழ்கும் நிலத்தில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
Tag: சூழியல்
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே
1970ஆம் ஆண்டிலிருந்து 21 மாதிரி நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளின்படி, ஆக்கிரமிக்கும் இனங்கள் 70% அதிகரித்துள்ளன என்ற கவலைக்குரிய செய்தியை IPBES சொல்கிறது. ஃப்ராங்க் கோர்ஷாம் சொல்கிறார்: “உலக வர்த்தகம் இத்தகைய ஆக்கிரமிக்கும் இனங்களை புதிதாகக் கொண்டு வருகிறது. மாசு மிகுந்த சுற்றுச் சூழலோ, அவைகள் நன்கு செழித்து வளரக் களம் அமைக்கிறது.’ அவர் மேலும் சொல்கிறார்: “செல்லப் பிராணிகளான பூனைகள் செய்யும் அழிப்பும் அதிகம்; பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் இருக்கும் இவை, பறவைகள், ஊர்வன போன்றவற்றிற்குப் பெரும் யமனாக உருவெடுத்துள்ளன.”
பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக, டில்லி அரசாங்கம் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் நிலையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம் குளிர்காலத்தில், சுற்றியுள்ள வயல்கள் எரிக்கும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.