ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)

ஈக்கோசிஸ்டம் (Ecosystem ) என்னும் சொல், சூழல்சார் தொகுதியைக் குறிக்கிறது. சூழலியல் (Ecology) என்பது சூழல் தொகுதிகள் பற்றிய கல்வி. ஈக்கோ சிஸ்டங்கள், இயற்கை வாழ்விடம் (Habitat), சூழல் உயிரினக் குழுமம் (Biome ), மற்றும் உயிர்க்கோளம் (Biosphere ) என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஈக்கோ சிஸ்டம் என்னும் சொல்லுக்கு, Oxford Languages தரும் அதிகார பூர்வ வரையறுப்பு: இடைவினைகள் (interactions) மேற்கொள்ளும் உயிரினங்களையும் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் சிதைப்புயிரிகள் ) அவற்றின் பௌதீக (உயிரற்ற) சுற்றுச்சூழலையும் (காற்று, நீர் மற்றும் மண் ) உள்ளடக்கிய ஓரிடத்து உயிரிய சமூகம்.

புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8

This entry is part 8 of 23 in the series புவிச் சூடேற்றம்

புவிச் சூடேற்றத்தால், நிலம் வறண்டு, தாவரங்கள் காய்ந்து, தீ பரவ அதிக சூழல் தோன்றுகிறது. முன்னம், நதிகள் பகுதியில் பார்த்ததை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். வழக்கத்தைவிட முன்னதாக வந்த வசந்த காலம், முன்னமே முடிவதால் நீள்கிற கோடைப் பருவ காலத்தால், நதிகள் நீரின்றி ஆகி, காடுகளை வறண்ட நிலமாக்கிவிடுகின்றன. வறண்ட காடுகள், தீ பரவத் தோதானதாக மாறிவிடுகின்றன.

உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை

This entry is part 14 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

விஞ்ஞானக் கோட்பாடுகள், பொதுவெளிப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் போன்றவை அல்ல. கோட்பாடுகள், திறமை பெற்ற சக விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், அத்துடன், கோட்பாடுகள் ஊர்ஜிதப்படுத்தத் தகுந்த சோதனை முடிவுகளுடன் வெளிவரவேண்டும். அத்துடன், சில விஞ்ஞான அளவுகளை ஒரு நல்ல கோட்பாடு, கறாரான கணக்கீடுகள்கொண்டு ஊகிக்கவும் வேண்டும்.

புதரை அடுக்கும் கலை (இறுதி பாகம்)

“இப்பப் பாரு,” அவர் சொன்னார், “நாம புதரை அடுக்கற கலையைப் பயில்கிறோம். அது ஒரு அடிப்படையான கலை. தவிர்க்கவியலாத கலையும் கூட. உன்னோட ‘அருங்கலைகள்,’ உன்னோட இசை, இலக்கியம் எல்லாத்தயும் பத்தி எனக்குத் தெரியும்- நானும் படிக்கப் போயிருக்கேன் – உன் கிட்ட நான் சொல்றேன், அதெல்லாம் அவசியம் இல்லை, விருப்பப் பாடங்கள். புதரை அடுக்கற கலை இருக்கே, அது விருப்பப் பாடமில்லை.”

“நீங்க ஸிம்ஃபனி இசையைப் பத்திச் சொல்றீங்களா?” ஆஸ்டின் நிறுத்தி இருந்தான், அவனுக்கு ஸிம்ஃபனி இசை என்பது எத்தனை முக்கியம் என்பதைக் குறித்துக் காட்டுவது போல அசைவற்று நின்றான்.

“ஸிம்ஃபனிகளா! பாழாப் போச்சுது, ஆமாம்!” ஆன்டி சொன்னார். “ஸிம்ஃபனிகளை எழுதவும், அதை எல்லாம் நடத்தவும், இசைக்கவும் தெரிஞ்ச ஒரு சமூகத்தை எடுத்துக்க, அதுக்குப் பாங்கா ஒரு சுமை புதரை அடுக்கத் தெரியல்லைன்னா, அவங்களுக்கு ஒரு மண்ணும் கெடைக்கப் போகிறதில்லை.”

புதரை அடுக்கும் கலை

ஆகவே, இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் ஆன்டி உரை மேசையின் பின்னே நின்று டானியைப் பற்றிப் பேசினார்….ஆன்டி அந்த விதிகளைப் பேசினார்: “உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கு உதவி தேவையாக இருக்கையில், போய் உதவுங்கள். அண்டை வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலை செய்கையில், எல்லாரும் முடிக்கும் வரை, யாரும் முடித்து விட்டதாக ஆகாது.” ….
அந்த நாளையின் மற்றும் அவரது நீண்ட வருடங்களின் களைப்பும் அவரை முழுக்காட்டுகையில், அவருடைய பாட்டனார் காட்லெட் தன் ஞானத்தின் வெற்றியையும், அதன் சோகத்தையும் ஒரே வாக்கியத்தில், “கடவுளே ஆமாம், ஒரு மனிதன் ஒரு நாளில் எத்தனை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்.” என்று அவரிடம் சொன்னதை ஒரு மாலையில் சில சமயம் அவர் நினைவு கூர்வார்.