2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம்

2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும் முக்கிய காரணங்களாக சொல்ல வேண்டும். இணையத்தின் வாயிலாக வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. வாசகர்களின் நெருக்கம் அதிகமாக, விவாதங்களும் அதிகரித்தன. எல்லா முக்கிய சிறுகதைகதைகளும், சிறுகதையின் சூட்சமங்கள் எளிதாக வாசிப்பாளர்களிடமும் சென்று சேர்ந்தன. புதுமைப்பித்தன் மீண்டும் மறுவாசிப்பு உள்ளானார்.

200-அம்பை சிறப்பிதழுக்குச் சில மறுவினைகள்

வண்ணநிலவன் சொன்னது போல அம்பை என்கிற பெயரைக் கேட்டவுடன் அந்தச் சிறு வயதில் எனக்கு அது அம்பாசமுத்திரமாகத்தான் தோன்றியது. அதுவும் ‘அம்மா ஒருகொலை செய்தாள்’ படித்த போது ‘என்ன இருந்தாலும் நம்ம ஊருல்லா! அதான் இவ்வளவு அளகா எளுதுதாங்க’ என்று தோன்றியிருக்கிறது. பின்னால் எழுத்தாளர் அம்பை என்கிற லட்சுமியைப் பற்றி அறிய நேர்ந்த போது “ச்சே! நம்ம ஊர் இல்லையாமே’ என்கிற வருத்தம் இல்லாமல் அவரது எழுத்து குறித்த மதிப்பை அந்த சமயத்தில் சற்றே வளர்ந்திருந்த எனது வாசக அனுபவம் தந்தது.

சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை

இக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் …
இன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.

கவிதைகள்- சுசித்ரா மாரன்

வெற்றிலையை
இடித்துக்கொண்டிருக்கும் ..
வாழ்க்கை மென்று
துப்பிய பாட்டிகளின் சரணாலயம்..
திருவையில் அரைத்துக் கொண்டே
இருக்கும் காதலை இல்லாமல் செய்து 
இல்லா காதலுக்கு கரம் சிரம் பொருத்தும்
திரைக்கதை அரசிகள்
பக்கத்துவீட்டுஅத்தைகளின்
நட்சத்திர விடுதி…

தேள்

“உன்னுடைய விஷ ஆராய்ச்சிக்கு நீ இங்குத் தேள்களை வைத்திருக்கிறாய் அல்லவா? எனக்கு ஒரு தேளை தொட்டுப்பார்க்கவேண்டும். அதை என் மீது ஏற விட்டுப்பார்க்க வேண்டும்.”
லூசிஃப் திடுக்கிட்டான். “ஏன்?”
“பயத்தை வெல்ல அதுதான் ஒரே வழி. போர்க்களத்தில் நாங்கள் இதைத்தான் செய்வோம். நிணம், குருதி, சித்ரவதை இதை எந்த ஒரு போர் வீரனும் முதல் நாள் காணும் போது அஞ்சத்தான் செய்வான். அதனால் அவனைப் போருக்கு அனுப்புவதற்கு முன்னாலேயே காயத்துக்கும் வலிக்கும் போரின் நிதர்சனங்களுக்கும் முழுவதுமாகப் பழக்கப்படுத்தி விடுவோம்.”