மனக் கட்டுப்பாட்டின் மந்திரவாதிகள்

நம் மனதை கட்டுப்படுத்துவதே மிகவும் சிரமம் என்றபோதில்,  வெளிப்புற சக்திகள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி, உங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு எதிராகச் செயல்படச் செய்தால் என்னவாகும்? இது ஒரு திகிலூட்டும் சாத்தியம். இவ்வாறான கற்பனைகள், நமது புனைகதைகளில் அடிக்கடி படம்பிடித்து காண்பிக்கப்படுகிறது. இது ஹாரி பாட்டரில் மூன்று மன்னிக்க முடியாத சாபங்களில் ஒன்றின் இலக்காகும். ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 இல் புனைகதை மொழியான நியூஸ்பீக்கின் நோக்கம் கூட இதுதான். இது பிரேவ் நியூ வேர்ல்ட் மற்றும் தி மஞ்சூரியன் கேண்டிடேட் போன்ற கிளாசிக்களிலும் ஈர்க்கிறது. 1950 களில், கம்யூனிஸ்டுகள் மனதைக் கட்டுப்படுத்தும் நுட்பங்களை உருவாக்கியுள்ளதாக, சிஐஏ மிகவும் கவலைப்பட்டது. அதற்காக, MK-ULTRA எனப்படும் ஒரு ரகசியத் திட்டத்தைத் தொடங்கவும் செய்தது

உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்

தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.