உங்கள் நிலங்களில்
நீர்நிலைகள் நிறைந்தேயிருக்கின்றன
சுரந்து பெருகும்
மீனுண்ணும் பறவைகளின்
அழைப்பினிசையால்
உங்கள் முகங்கள் மலர்ந்திருக்கின்றன
Tag: சரவணன் அபி
சரவணன் அபி கவிதைகள்
சலசலத்து விரையும் ஆற்றின் போக்கில்
ஓரிடம் சிக்குண்டு
மேனியுரு மாறும் கல்லின்
போக்கற்ற தீர்வில்
அமைந்திருக்கிறது
நகர்ந்து செல்வதும்
நிலைகொண்டு எதிர்நிற்பதற்குமான
தெளிவு
உரைகல்; கடந்த வழி -கவிதைகள்
பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா
கவிதைகள்: ராமலக்ஷ்மி, ஆதி கேசவன், சரவணன் அபி
காலைப் பனித்துளி அளவிலான
சிறிய வினாக்களுக்கோ
விடாது பெய்யும் அடைமழையாக
சரளமாக அளிக்க இயன்றது
விரிவான விடைகளை