ஒரு கடிதம்

ஆனால் உன் அப்பா எனக்கு எந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையாலும் நடத்தையாலும் கொடுமையாலும் என்னைச் சித்திரவதை செய்கிறார்.

ஊர்மி

ரிசீவரைக் கீழே வைத்தேன். யார் இந்த ஆள்? ஊர்மிக்கும் இவனுக்கும் என்ன உறவு? நான் தெரிந்து கொண்டது, ஷியாமல் என்பவரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைத்தான். ஆனால் ஊர்மி ஏன் ஷியாமலைச் சந்திக்கச் சென்றாள்?

ரூபா

உங்களுக்கு என்மீது எரிச்சலாக இருக்கும். ஒரு மனிதன் உங்கள் அனுதியைப் பெறாமலே தனது கதையைக் கொட்ட ஆரம்பித்தால் அப்படி இருப்பது இயல்புதான். ஆனால் என்ன பிரச்சினை என்பது உங்களுக்குத் தெரியுமா?

க. ரகுநாதன் கவிதைகள்

ஈரப் பசும் ஒளிசூடி
சூல்களின் மகரந்தம்
மெல்லிய கால்களில் ஏறிட
பள்ளத்தாக்கின் செவியறியாமல்
அகாலத்தைக் கலைத்து
காலத்துள் பறந்தது பட்டாம்பூச்சி.

போர்ஹெஸ்ஸின் செயலாளர்

எங்களது விளையாட்டு எப்போதும் பேசப்படாததாகவும் மௌனம் சாதிப்பதாகவும் எந்தப் புள்ளியிலும் அதை விளையாடுவதாக நாங்கள் ஒத்துக் கொள்ளாததாகவும் இருந்தது. வரும் நாட்களில் எனது கட்டுரைகளில் சிறப்பான மாற்றங்களை அவள் ஏற்படுத்துவாள் என்ற நம்பிக்கையில் நான் அவளைப் போல பொறுமையாகக் காத்திருக்க முடிவு செய்தேன். இருந்தபோதிலும் அவள் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

விழிப்பு (The Awakening) – ஆர்தர் சி. கிளார்க்

“நான் வேண்டுமானால் இன்னுமொரு நூறாண்டுகள் காத்திருக்கிறேன். அதுவரை தொந்தரவு இல்லாத ஓரிடத்தைத் தேர்வு செய்து என்னை உறக்கத்தில் ஆழ்த்தி உறைய வைத்தோ அல்லது ஏதாவது ஒரு வகையில் பாதுகாத்து வைத்திருங்கள். அதை உங்களால் செய்ய முடியும் என்பதை அறிவேன்” என்றார்.