பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஒருமுறை உங்க பிள்ளை நன்றாக படிக்கிறாங்க என்று சொன்னதற்கு அங்கேயே அம்மா அழுதுகொண்டிருந்தாள். “மேடம் உங்க பொண்ணு பத்தி நல்லாதானேங்க சொல்லியிருக்கோம்” என்றாலும் அழுதுகொண்டிருந்தாள். புவனா தன் வாயிலிருந்து வார்த்தைகளை வெளிவராமல் “அம்மா, ஏம்மா இப்படி அழுது மானத்த வாங்குற” என்றாள்.