கூட்டு அக்கறைகள் கொண்ட பிரதி

கடற்காற்றாலும் கடல் மொழியாலும் (’வாழ்வு என்பதே கதைக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ரீங்காரம்’) சூழப்பட்ட அத்தீவினரை காப்பவர் ‘கபாங்’(கடவுள்). கடலையே தெய்வம் என்றும் அங்கு முன்னோர்களின் ஆவிகள் அலைகிறார்கள் என்றும் நம்பும் அக்குடிகளின் சட்டதிட்டங்களை விருப்பங்களை வரையறுப்பவர்களாக நிலமுனியும் கடல்முனியும் இருக்கிறார்கள்.