இலக்கை
நெருங்குவது குறுக
தனிமை சூழ்வதும் அதிகரிக்கிறது.
தொடக்கத்தில்
இவ்வளவு தொலைவுக்கா
தயாரானோம் என்று
தெரியவில்லை.
தொலைவின் இது வரை
கடந்து வந்தது
இவ்வளவு தொலைவா
என்று ஆச்சரியமாயுள்ளது.
Tag: கு.அழகர்சாமி
முதுமை
ஒற்றைத் தென்னை:
என் மீது அமர்ந்து செல்லும் பறவைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் பகலில்.
என் மீது மினுங்கும் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன் இரவில்.
கு.அழகர்சாமியின் குறுங்கவிதைகள்
உற்று நோக்குமென்னை
உற்று நோக்கி
கடுகு விழிகளை
உருட்டி
வளைத்த கம்பியாய்
வாலை நிமிர்த்தி
ஓடாது நிலைக்கும்
ஓணானின் எதிர்ப்பில்
தெரிந்தது
ஆறு கவிதைகள்
சட்டெனக் குதிக்கிறது
சிறுகுருவி
சிறுநொடியின் மீது- ஒரு
சிறுகிளை மீதமர்ந்து
சிறிது குலுங்குவது போல்
தெரிகிறது அது
எனக்கு.
நான்கு கவிதைகள்
வியப்பில் உச்சியை அண்ணாந்து நோக்கி
முதலடி எடுத்து வைத்ததுமென்னைச்
சிறுகுழந்தையைத் தூக்குவது போல்
தூக்கிக் கொண்ட மலை, மேல்
செல்லச் செல்ல, மெல்ல மெல்லத் தூக்கி,
கடைசி அடி எடுத்து வைத்ததும்
தன் தோள் மீது உயர்த்தியென்னை இருத்தி
வைத்துக் கொள்வதற்குள் நேரமாகிக் களைத்துப்
போதும் போதுமென்றாகி விட்டது எனக்கு.
பூனை- வித்தியாசமான பார்வைகளில்
இறத்தல்- நீ அதை ஒரு பூனையிடம் செய்யக் கூடாது.
ஏனெனில், ஒரு காலி அடுக்குமாடி வீட்டில்
ஒரு பூனை என்ன செய்ய முடியும்?
சுவர்களின் மேல் ஏறுவதா?
மேசை நாற்காலிகளை உரசுவதா?
இங்கு எதுவும் வித்தியாசமாய்த் தோன்றவில்லை.
ஆனால் எதுவும் ஒரே மாதிரியாயில்லை.
எதுவும் நகர்த்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால் அதிக இடமிருக்கிறது.
இரவு நேரத்தில் விளக்குகளும் ஏற்றப்படவில்லை.
குழந்தைகளின் உலகம்
குழந்தையின் கையில்
பொம்மையாகி
அதைச் சிரிக்க வைக்கும்
ஆசையில்
பொம்மையானேன்.
குழந்தை என்
கையை முறுக்கியது.
காலைத் திருப்பியது.
உடலை வளைத்தது.
தலையைத் திருகியது.
விழிகளைப் பிதுக்கியது.
சிரித்துக் கொண்டே இருந்தேன்.
பொசுக்கென்று தூக்கிப் போட்டது
பொம்மையென்னை
குழந்தை- பொம்மை
அழவில்லையென்று.
காடு
நனைந்தபோது தான்,
நனைந்ததையே மழை
திருப்பித் திருப்பி நனைப்பதில்
நனைந்தது நனையவில்லையாய்
நனையாதாகிறதென்று
காட்டுக்குப் புரிந்தது
எனக்குப் புரிந்தது.
அழகர்சாமி கவிதைகள்
காலி செய்து சாமான்களை
வாகனத்தில் ஏற்றினேன்.
தமக்குள் அனுசரித்து
உட்கார்ந்து கொண்டன
சாமான்கள்.
விடுவதாயில்லை
’வசித்த வீடு’.
கூட்டிப் போகச் சொல்லும்.
சித்தத்திருத்தி
சூதானமாய்க் கூட்டிப் போனேன்
குறுங்கவிதைகள்
உன் நிலவைத் தூக்கிக் கொண்டு
நள்யாமம், என் வானைத் தேடுகிறேன்
என் நிலவு காணாமல்.
பாழ் வெளி
ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
வேறெதற்
கில்லையாயினும்
ஒரு வேளை
பாழ்வெளியே
நான்கு கவிதைகள்- கு.அழகர்சாமி
உண்ண வெறுமையும்
தின்னத் தனிமையும்
கேட்க மவுனமும்
நோக்க அத்துவானமும்
நினைக்க நோய்மையும்
சுகிக்க சூன்யமும்…
சச்சிதானந்தனின் இரு கவிதைகள்
நீ மிகவும் புத்திசாலியானால்
அரைத்தூக்கத்தில் செல்.
எது வேகமாய் இருக்கிறதோ அது வேகமாய்க் களைப்புறும்:
மெல்லச் செல், மெல்ல நிச்சலனம் போல்.
பெருந்தொற்றின் பாடுகள்
காலம்
இரவும் பகலுமாய் ஊரும்
குருட்டு நத்தை.
….
குறைந்தபட்சமாய் வாழ்வதில்
உடற் சுமையைத் தவிர
கூடுதல் சுமையில்லை.
பூனை
சாமர்த்தியமாய்ப்
பதுங்குவதிலும்,
சட்டென்று
பாய்வதிலும்
சன்னமாய் உள்
ஒலிப்பதிலும்,
சுற்றி வளைய வளைய
வருவதிலும்
நினைவுகள்
பூனையிடமிருந்து
வித்தியாசமானவையல்ல-
கு. அழகர்சாமி கவிதைகள்
எறும்புகளின் தோள்கள் மேல்
எங்கோ நெரிசலின்றி சவாரிக்கும்
ஒரு பல்லி தவிர
வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப் பூச்சி தன் கனவில்
என்னைத் தானெனக் கண்டு
மிதக்கிறதா?
கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை
ஹெரால்டு பிண்ட்டர் தனது நோபெல் உரையை இப்படித் தொடங்குகிறார்: ”எது நிஜம் எது நிஜமில்லை என்பவற்றுக்கு இடையில் உறுதியான வித்தியாசங்கள் இல்லை. அதேபோல் எது உண்மை எது பொய்மை என்பவற்றுக்கு இடையேயும் இல்லை. உண்மை, பொய்மை என்ற இரண்டில் ஒன்றாகத்தான், ஒன்று இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது உண்மை பொய்மை என்ற இரண்டாகவும் இருக்கலாம்.”
இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு
மற்ற படுக்கைகளில் மூச்சு விடும் அந்த மனிதர்கள்
அரிதாகவே புரிந்து கொள்ள முடியும்.
திரையினூடே இரா வானில்
நிலவு தேய்வதையும் வளர்வதையும் கவனித்தேன்.
ஒரு புனிதப் பணிக்கு நான் பிறப்பெடுத்தேன்:
மகத்தான மர்மங்களுக்கு
சாட்சியாய் இருக்க.
இப்போது நான்
பிறப்பு இறப்பு, இரண்டையும் கண்டிருக்கிறேன்.
இருண்ட இயல்புக்கு
இவை ஆதாரங்கள்
மர்மங்களல்ல என்றறிகிறேன்.
கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்
தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்
இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்
கேதார்நாத் சிங் கவிதைகள்
தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”
கவிதைகள்- கு.அழகர்சாமி
ஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்
ஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்
ஆணிப்பொன் அம்பலத்தாடு ஆனந்தக்கூத்தா!
மலையின் நினைவுகளில்
எதையும் தேடாதிருக்க, தவம்
தேடி வந்த காற் தடங்கள் புதைந்திருக்கின்றன
கற்பாறைகளுக்குள்.
அவர்கள் விட்டுப் போன மூச்சு
விட்டுப் போகாமல் கலந்து வீசும் மென்காற்றில்
பேரமைதியின் சுகந்தம் மணக்கிறது.
காட்டு முல்லைகளும் கசக்கிய எலுமிச்சைப் புற்களும் மணக்கின்றன.
கவிதைகள்
பாதங்களைத் தவிர வீட்டுடன் அதிகமாகப் பேச
வேறு யார் இருக்கிறார்கள்.
வெகுநாளைக்குப் பிறகு
தூசியைத் துடைக்க வருகிறவன்
கதவுகளைத் திறக்கும் போது
பாதங்களை மட்டுமே பார்க்கிறது வீடு.
கவிதைகள் – பா. கண்மணி, பா.சரவணன், ராமலக்ஷ்மி, கு.அழகர்சாமி
என்
இதழ்பிரியா புன்னகைக்குச்
சிலிர்த்துப் போகும் நீ
நான் பைத்தியமாகி
நாணமின்றி வெடித்துச் சிரிக்கையில்
என்ன செய்வாய்?