பாலையின் மீது பனிமூட்டம் போல்
மரங்களின் அமைதியில்லா ஆன்மாக்கள் தொங்குகின்றன.
மரங்களின்மையின் காட்டில்
பறவைகளின்மை கீச்சிடுகிறது.
Tag: கு. அழகர்சாமி
டொமஸ் ட்ரான்ஸ்ட்ராமர்- கவிதைகள்
நம் ஓவியங்கள் காற்று வெளியையும், பனியுக
ஓவியக் கூடங்களின் செவ் விலங்குகளையும் நோக்கும்.
ஒவ்வொன்றும் சுற்றி கவனிக்க ஆரம்பிக்கும்.
நூற்றுக்கணக்கில் யாம் வெளியேகுகிறோம் வெயிலில்.
சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள்
தன் முப்பதாண்டு படைப்பு வாழ்க்கையில் இவர் எழுதிக் குவித்த கவிதைகள் ஏராளம். கணக்கு வழக்கில்லை. 45 தொகுப்புகள், சுமார் 2500 கவிதைகள் என்று ஒரு கணிப்பு.(poemhunter.com). 10000 கவிதைகளுக்கு குறையாமல் தேறும் என்று இன்னொரு கணிப்பு….இவரோடு 38 வருடங்களாகப் பழகிய சமீர் சென்குப்தா( Samir Sengupta) தன் நினைவோடையில், சக்தி சட்டோபாத்யாய் தான் எழுதியவை எவ்வளவு, என்னென்ன என்று கூட கவனிக்காதவரென்றும், இவரைப் போல் தன் படைப்புகளின் மேல் பற்றற்றவராக யாரும் இருக்க முடியாதென்றும் பதிவு செய்கிறார்.
பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள்
நீரில்
நனைந்ததால்
தலை துவட்டும்
என்னைப் பார்த்து
நீரில்
நனையாதாயினும்
வெயிலில்
நனைந்ததாய்த்
தலை துவட்டும்
என்
நிழலின்
விசுவாசத்தில்