காரீயம் எளிதில் சுவாசம் அல்லது வாய் மூலமாக உடலினுள் சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து உணவுப் பாதை மற்றும் மூளையில் உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிந்திருக்கின்றனர். சிறிய அளவு காரீயம்கூட இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, IQ, கவனம் ஆகியவற்றின் குறைபாடுகளுக்குக் காரணமாகிவிடும். காரீயம் ஒரு வலிய நரம்பு நச்சு (neurotoxin). சில நேரங்களில் வன்முறையைத் தூண்டிவிடவும்கூடும்.
Tag: குளக்கரை
குளக்கரை
கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் இயற்பியல் ஆய்வு மாணவியாக இருந்த ஜாஸலின் பெல் பர்னல் வான்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள் போன்றவற்றை ‘வானொலி தொலைநோக்கி’யின் உதவி கொண்டு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடையேயான பொறிச்சிதறல் வரிசைகளைக் கவனித்து வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது ஐந்துகி மீ நீளமுள்ள வரைபட பதிவேடுதான். இன்றைய நாட்களைப் போல் கணிணி பயன்பாட்டிலில்லை. ஐந்து கி.மீ நடந்து நடந்து பதிவிட வேண்டும்.ஒலியின் அதிர்வலைகள் சன்னமானவை; மேலும், ஒரு குறிப்பிட்ட திசையில் 1.337 வினாடிகள் மட்டுமே பதிவிடமுடியும்.