வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் அடையும் தட்பவெப்ப இடர்களைப் பற்றி பாகிஸ்தானின் மற்ற பகுதி மக்களுக்குப் புரிதல் இல்லை. மீண்டும் தாக்கும் போலியோவும், காஷ்மீரமும் ஆளுவோரின் மிகப் பெரும் சிந்தனையாக(!) இருக்கிறது.வரும் பத்தாண்டுகளில் நீர்ப் பற்றாக்குறை என்பது நகரங்களில் வாழும் மக்களைப் பாதிக்கும் என்ற உணர்தல் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்.