“சரி… ஒங்க பெரியப்பா ஊரவிட்டு போனது தெரிஞ்சதும் ஒங்க ஆச்சிதான் போலீசுல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திட்டு வாங்கன்னு சொன்னா. அங்க போனா கம்ப்ளைன்ட வாங்க மாட்டேனுட்டாங்க. எழுபது வயசுக்கு மேலானவங்கள காணாமுன்னு கேஸ் பதிஞ்சா ஆளு கெடைக்கிற வரைக்கும் நிலுவையிலேயே இருக்கும். பல தடவ ஆளுங்க அம்படறதேயில்ல. அந்த மாதிரி பல கேஸுங்க அப்படியே கெடக்குன்னுட்டாங்க”
Tag: கா.சிவா
தோற்றங்கள்
உறவினரோ நண்பரோ வரும்போது அவர்களோடு அம்மா கொண்டிருந்த பிணைப்பு, அவர்களுடனான சந்திப்பு எல்லாம் ஒருகணத்தில் நினைவுக்கு வந்தது. திரைப்படத்தில் நினைவோட்டத்தைக் காட்டும்போது ஒரு வினாடியில எப்படி இத்தனையும் ஞாபகம் வரும் என்று கேலியாக கேட்டிருக்கிறான். ஆனால் இப்போது, திரைப்படத்தில் குறைவாகவும் மெதுவாகவும் காட்டுவதாகத் தோன்றியது. சந்திரனுக்கு நினைவுக்கு வருபவை அனைத்தும் வருபவருக்கும் தோன்றும்போலும். அதனால்தான் இவன் அழும்போது அவருக்கும் கண்ணீர் வருகிறது.
நிறமாலை
இலக்கிய உலகில் பெரும்பாலான கதைகள் ஆண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. அதற்கு மாற்றாக பெண்களின் எண்ணங்கள் செயல்கள் மூலம் மனித வாழ்வை அணுகிப் பார்க்கும் இவரது கோணம் சிறப்பாக உள்ளது. இப்படி இருக்கிறது, நான் காட்டுகிறேன் என ஒதுங்கி நின்று காட்டும் திறனும், யதார்த்தம்தான் என நம்பவைக்கும் காட்சிப்படுத்தலும் மேலும் சுவை கூட்டுகிறது. பல்வேறு வணணங்கள் கொண்ட நிறமாலையைப்போல வெவ்வேறு குணங்கள் கொண்ட பெண்களைக் காட்டும் இந்நாவலை வாசிப்பவர்கள் வாழ்க்கையை பெண்களின் நோக்கிலிருந்தும் பார்க்கத் தொடங்குவார்கள் என நம்பலாம்.
கரவுப் பழி
வானம் நீல நிறத்திலிருந்து கருமையாக மாற ஆரம்பித்த மாலை நேரத்தில் மூன்று பெண்களும் வேணியம்மை கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இரு புறமும் வேலிக்கிலுவைகளும் கழியந்தட்டையும் வளர்ந்து எல்லையமைக்க, நீண்டு சென்ற ஒழுங்கையில் ஊருணியைக் கடந்து நடந்தார்கள். ஊருணிக் கரையிலிருந்த ஆலமரத்தில் சாக்குகளில் கட்டப்பட்டிருந்த ஈன்ற “கரவுப் பழி”
வேராழத்தை காட்டுதல்
தே ஒரு இலையின் வரலாறு நூல் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் வரை வரலாறு என்றாலே மனதில் பெரும் அலுப்பு தோன்றும். அந்தக் காலம் இப்போது மாறிவிட்டது. வரலாற்றை மிகச் சுவாரசியமாக வாசிக்கும் வண்ணம் எழுதப்படும் நூல்கள் சில ஆண்டுகளாக வெளிவருகின்றன. ராமச்சந்திர குகா இதில் முதன்மையானவர். “வேராழத்தை காட்டுதல்”
எண்ணத்தின் விளை
எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. அதக் கட்டிக்கிறவனுக்குத்தானே என் சொத்தெல்லாமே. அது ஒம் மூத்த பையனுக்கு சேரலாம்னு நெனக்கிறேன்” என்று முடித்தபோது கன்னய்யா முகம் மலர்ந்தார். மலர்ச்சியை நீடிக்கவிடாமல் வேறொரு எண்ணம் தோன்றியதால் முகம் கூம்பியது.
மீச்சிறு துளி
சம்பத், எப்போதுமே அவன் செய்யும் வேலைகளை ஈடுபாட்டோடு ரசித்து செய்பவன். ஆனால் தொழில் வெற்றிகரமாக தொடர்வதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நேரம் என்று பொதுவாகச் சொன்னாலும் காலம்தான் இவன் தொழிலை நலிவடையச் செய்தது. சைக்கிளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து தானியங்கி வாகனமாக மாறியது காலத்தின் மாற்றம்தானே. இவனும் காற்றடிப்பது, பஞ்சர் போடுவது என அவற்றின் வேலைகளையும் பார்த்தாலும் பழுது பார்த்தல் இவனால் இயலாததாகிவிட்டது.
பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து
இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போதே ஈர்ப்பது இதன் மொழி. ஒருவித மாயத்திரை விரிக்கும் புகை மூட்டம்போல. இல்லையில்லை, அது போன்ற வெம்மையில்லை. பனிமூட்டம்போல மென் தண்மையுடன் தழுவி மயக்குகிறது.
விட்டு விலகுதல்
வரிசையின் அருகில் சென்ற காக்கி நிற சீருடையணிந்திருந்த அலுவலக ஊழியர் ஒருவர், “சார், அது இங்கேயேதான் கிடக்கும். என்னதான் சத்தம் போட்டாலும் அடிச்சாலும் வெளிய போகாது. என்னவோ இந்த எடம் அதுக்குப் பிடிச்சுப் போச்சு. வெறங்கேயும் போக மாட்டேங்குது. கொரக்கிற மாதிரி இருந்தாக்கூட அடிச்சு இழுத்து வெளியே போடலாம். சும்மா குறுகிக்கிட்டு கெடக்குறத என்ன செய்யறது. அது ஒன்னும் செய்யாது. பயப்படாம நில்லுங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அணில்
ரமாவின் மீது நண்பனின் தங்கை என்பது தவிர பெரிய பற்றெதுவும் சங்கருக்கு இல்லை. திரைப்படங்கள் பல உறவுகளை சிக்கலாக்கி விடுகின்றன. பாதிப்படங்கள் நண்பனின் தங்கையை காதலியாகவும் மீதப் படங்கள் தங்கையாகவும் இரு எல்லைகளாக வகுத்துவிடுகின்றன. இது, இரண்டுமில்லாது இருப்பவர்களை பெரும் சங்கடத்தில் தள்ளுகின்றது. சங்கர் கிருஷ்ணனைக் காணச் செல்லும்போது எப்போதாவது எதிர் கொள்வதையன்றி அவளுடன் எந்த தனிப்பட்ட உரையாடலும் நடந்ததில்லை. நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பே சங்கருக்கு பெரும் துயரை உண்டாக்கியது.
இருமை
சிங்கப்பூரிலிருந்து வந்த அவன் கொண்டு வந்த இரு பெட்டிகளையும் ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றோம். அது இரண்டாயிரமாவது ஆண்டு. வாடகை வண்டிகளெல்லாம் இப்போதளவிற்கு இல்லை. நான் வில்லிவாக்கத்திலிருந்து டி.வி.எஸ் எக்செல் வண்டியில் சென்று நுங்கம்பாக்கத்தில் நிறுத்திவிட்டு இரண்டு ரிடர்ன் சீட்டு வாங்கிக் கொண்டு திரிசூலம் சென்றிருந்தேன்.
கவிதைகள் – கா. சிவா
பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில்…
பருவத் தொடக்கம்
வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
கவிதைகள்
வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.