ஓ மாண்புமிகு நீதிபதியே, உயர்த்திப் பிடியுங்கள்
உங்களது நீதித்துறையின் கைச்சுத்தியை;
மகான்கள் இன்று மகான்களாய் இருக்கிறார்கள்
எளியவர்களின் செல்வத்தைக் களவாடிக் கொண்டு.
கொள்ளை, திருட்டு, வஞ்சகம், சுரண்டல் ஆகியன
எவ்வளவுக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ
அவ்வளவு உயருகிறது இப்போது சமூக அந்தஸ்து !