ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
வேறெதற்
கில்லையாயினும்
ஒரு வேளை
பாழ்வெளியே
ஒரே
பாழ் வெளி
ஒரு மரம்
இருக்கக் கூடாதா?
வேறெதற்
கில்லையாயினும்
ஒரு வேளை
பாழ்வெளியே
பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் “சிவகாமி நேசன் என்னும் இனிமை”
நீ மிகவும் புத்திசாலியானால்
அரைத்தூக்கத்தில் செல்.
எது வேகமாய் இருக்கிறதோ அது வேகமாய்க் களைப்புறும்:
மெல்லச் செல், மெல்ல நிச்சலனம் போல்.
பக்கத்து தோட்டத்தில் இருந்த
பசும் பயிர்களை நாவால் லாவி கடித்த மாட்டை அடித்த இடங்களில்
தடித்த தழும்புகளை தடவி பார்க்கும்
அண்ணன்…
மடிமுட்டி பால் குடித்த கன்று குட்டியின் வயிறு நெறஞ்சுருச்சானு
பார்க்கிறேன் என்ற படி
கன்றுக்குட்டியின்வயிற்றில் காது வைக்கும் குட்டி தம்பி…
அவர்களது கைகளை
என் கைகளில் எடுத்துக்கொள்கிறேன்
அழுத்தமான கைகள்
அன்பில்லை அவற்றில்,
வலிய வரவழைக்கப்பட்ட
ஒரு மென்மையைத் தவிர.
கிராமத்தின் பாழுங்குடிசைகளிலிருந்து
வந்து நிற்கும் அற்பமான ஆண்கள்.
ஒரு வேளை
செவ்வந்தி மலரொன்றைப் பூத்து குலுங்கச் செய்யவே
ஆந்தை ஒன்று வசந்தகாலம் தொட்டு
அலறிக் கொண்டிருந்திருக்க வேண்டும்
ஒருவேளை
செவ்வந்தி மலரொன்றை பூத்துக் குலுங்கச் செய்யவே
கருத்த மேகங்களில் இடி கதறிக் கொண்டிருக்க வேண்டும்
முதலில் அவற்றை சிறிய தொலைவு நடந்து வர மட்டுமே பயன்படுத்துங்கள்
பிறகு மெதுமெதுவாகத் தூரத்தை அதிகரியுங்கள்
..
இறுக்கமான அவற்றின் வார்களைத் தளர்த்துங்கள்
தாங்கள் வளர்கிறோம் என
அவை குதூகலிக்கட்டும்
சாலையில் நடந்த மக்கள்
ஈஷர் ஓவியம் போல்
இங்கும் அங்கும் என
நடந்துகொண்டிருந்தார்கள்
அது எது
எனக்குக் கேட்காத ஒன்று
யாரோ ஒருவர் தனித்து
கேட்டுக்கொண்டிருக்கிறார்
பல்லிய இசைக்குழு.
இடியுடன் கூடிய பெருமழை
அவர்கள் வாக்னரின் வரவேற்பிசையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மரத்தடி இருக்கைகளை விட்டு எழுந்து
ஓயாத விழுதலிசை
வேரூறும் பாறை நிசப்தம்
மனமெங்கும் அருவி.
வார்த்தையற்ற மெளனமும்
காட்சியற்ற சூன்யமும்
முற்றிலும் என்னை நிறைத்திருக்க
நினைவற்ற நிலை அது.
அங்கே காலம் ஒரு பொருட்டல்ல.
யுகம் யுகமாய் நானங்கே
இருந்திருக்கிறேன்.
ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.
லார்கின் படைப்புகளில் இரு நிலையான சரடுகளைக் காண முடிகிறது, அவற்றுக்கு இடையிலான முரணியக்கம், அவரது கவிதைகளுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது: ஹார்டிய “இங்கேயே இப்போதே” என்ற இருப்பும், யேட்ஸ்சிய காலாதீதத்தன்மை என்ற இரண்டும் அவரது முதிர்ந்த கவிதைகளிலும்கூட தொடர்ந்து தென்படுகின்றன.
ராகுவின் பூனை
பாற்கடல் நக்கிக்குடிக்கிறது
பரமாத்மாவின் நீலத்தில்
வண்டு மறைக்கும்
சிறுபூக்களின் பின் – உதிர
சிலிர்க்கும் காடு.
ரமாவின் மீது நண்பனின் தங்கை என்பது தவிர பெரிய பற்றெதுவும் சங்கருக்கு இல்லை. திரைப்படங்கள் பல உறவுகளை சிக்கலாக்கி விடுகின்றன. பாதிப்படங்கள் நண்பனின் தங்கையை காதலியாகவும் மீதப் படங்கள் தங்கையாகவும் இரு எல்லைகளாக வகுத்துவிடுகின்றன. இது, இரண்டுமில்லாது இருப்பவர்களை பெரும் சங்கடத்தில் தள்ளுகின்றது. சங்கர் கிருஷ்ணனைக் காணச் செல்லும்போது எப்போதாவது எதிர் கொள்வதையன்றி அவளுடன் எந்த தனிப்பட்ட உரையாடலும் நடந்ததில்லை. நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பே சங்கருக்கு பெரும் துயரை உண்டாக்கியது.
ஜப்பானிய எடோ காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹைக்கூ பெண் கவிஞர். அப்போது ஹைக்கூ, ஹொக்கு என்று அழைக்கப்பட்டது… அதன் வடிவமும் சற்று வேறாக இருந்தது. தன் ஏழு வயதிலேயே ஹைக்கூ எழுதத் தொடங்கியவர். பதினேழாவது வயதில் தன் ஹக்கூக்களால் ஜப்பான் முழுக்கப் பிரபலமடைந்தார்.
கடிகாரச் சுவர்
படர்ந்த நிழல் முற்றம்
வரும் பறவை.
அடர்ந்த மழை
ஊடே சிட்டுக் குருவி
மறைந்த மின்னல்.
இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:
1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.
விருந்தாளி ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது.யானையை விட சிறியதுஎலியை விடப் பெரியது. முதல் அடி என் சகோதரி மீது அடுத்து என் தந்தைக்கு ஒரு உதைபின் என் தாயை தள்ளிவிட்டது.நான் வெறி கொண்டவனானேன். ரோவரை கிச்சு கிச்சு மூட்டியது.பூனையை பயங்காட்டியது.கழுத்துப் பட்டையை கிழித்தது.தொப்பியை முரட்டுத்தனமாய் நசுக்கியது. தலையில் தேனை மெழுகியது.குளியல் தொட்டியில் கற்களை நிரப்பியது.கோபத்தில் கத்தும்போது காலணியையும் காலுறைகளையும் களவாடியது. அப்படித்தான் “விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி”
வானக்கருப்பையில் முட்டி மோதும்
உயிர்ப்பட்டத்தின் வால்
அசைந்து கொண்டே இருக்கிறது
நதியின் ஆழத்துக்குள்.
பாசிகளும் மீன் குஞ்சுகளும்
கருத்தரிக்கும் காலம்
வானத்தின் குரலிலிருந்து கசிகிறது
உங்களுக்கும் எங்களுக்கும்தொடர்ந்து நடக்கிறதுபேச்சு வார்த்தைஎங்கள் பக்கத்திலிருந்துகோரிக்கைகளாகவும்உங்கள் பக்கத்திலிருந்துஅறிக்கைகளாகவும்.நாம் ஒரே மொழியைதாம்உபயோகிப்பதாக நினைக்கிறோம்.ஆனால் உங்கள் வாக்கியங்கள்ஒன்றன் மேல் ஒன்றாக மடிந்துகாரண காரியங்களாகத் திரிந்துஎங்கள் புரிதலுக்கு அப்பாலானதாகவேஎன்றைக்கும் இருக்கிறது.இன்றைய கணமும்உண்ணும் உணவும்கேள்விக்குறிகளாக நிற்கையில்எங்கோ நிகழ்ந்த நிலநடுக்கமும்பேரழிவைக் கொடுத்த நிலச்சரிவும்எம் சிந்தைக்கு எட்டாமல்கடந்து செல்கிறோம்இரக்கமற்றவர்களாய். உங்களுக்கு உதிக்கும் பகலவனேஎங்களுக்கும் உதிக்கிறான்ஆனால் ஒளிக்காகஏங்கி நிற்கிறோம்.கரும்பு “ஒரு வார்த்தை.. நம் மொழியில்..”
படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.
புராதன வெளியில் வந்திறங்குகின்றனவலசைப் பறவைகள்.வரப்புகளில் தேங்கும் நீரில் சுற்றிலும் புல்வெளியில்அவை தனித்துப் பொருத்தமற்று தோன்றுகின்றன. பறவைகள் ஒன்றை ஒன்றுபார்த்து நிற்கையில்புல்வெளியின் பரப்பில்மார்கழி இரவின் பனிகாலைக் கதிரவனின் வெம்மையில்மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.
அவன் முன்பின் நகரமுடியாத இக்கட்டில் மாட்டியபோது சரியாக அச்சொல்லை எய்ய இவனைத் தூண்டி அவன் குருதியைக் கொப்பளிக்க வைத்தேன் சொல் தைத்துப்பெற்ற தீந்துயரை திரும்ப அளிக்கக் காத்திருந்து பிடுங்கப்பட்ட அதேசொல்லை எறிந்தான் இவனை நோக்கி எளிய வழியில் எதிரிக்கு வெந்நோவை அளிக்க பாவனை செய்கிறான் இவன் வலிக்காதது போல “ஆதி விடம்”
பெரிய பொறாமைக்காரன் நான்
எந்த அளவுக்கெனில் ஒரு பாராட்டுக்காக
அத்தனை கால உங்கள் நட்பையே சந்தேகிக்கும் அளவிற்கு
இதற்காக வெகு காலமாய் தனித்திருக்க செய்த தண்டனையில் பிழையில்லை