கல்விக் கடனும், 2022 ஆம் ஆண்டின் அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலும்

இச்செலவுகள் இரண்டும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பதால் தேர்தலின் மையப்புள்ளியாகவும் கல்லூரி மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் கட்டணத்தால் கல்லூரிக்கல்வி என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருப்பதும் இந்நிலையை மாற்ற தேசிய, மாநில, கல்லூரி அளவில் பல இலவச நிதிச்சலுகைகள் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தற்போது கடன் வாங்கினால் மட்டுமே கல்வியைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது என்பது தான் நிதர்சனம். இதில் தேசிய, மாநில அரசுகளின் பங்கு என்ன? இந்த நிலையை எப்படி மாற்றப் போகிறார்கள் என்பது தொடர் விவாதமாகவே இருந்து வருகிறது.