அழுகை இல்லை.. பத்து பன்னிரண்டு வருடம் முன்னால் விட்டுவிட்டுப் போன கணவனை இப்போது துக்கித்து அழ என்ன இருக்கிறது? அவர் விட்டுவிட்டுப் போன அன்றே அழுகை வரவில்லை அவளுக்கு. அவளே தன் கணவனையிட்டு எரிச்சல் ஆகியிருந்தாள். கணவன் என்று இல்லை. வாழவே பேரலுப்பு வந்திருந்தது அவளுக்கு. யாரையுமே எதையுமே பிடிக்கவில்லை. வலிகளூடே ஒரு வாழ்க்கைப் பயணம்.
Tag: எஸ்.சங்கரநாராயணன்
செகண்ட் இன்னிங்ஸ்
பாஸ்கரனுக்கு கிரிக்கெட் பாட் இருந்தாலும் அவனுக்கு ‘பௌலிங்’ போடப் பிடித்திருந்தது. அது கோமதிக்கு மகிழ்ச்சி யளித்தது. தடதடவென்று ஓடி வந்து வேகமாய்க் கையைச் சுழற்றினால் பந்து புயலைப்போல வந்தது. விளையாட சிரமமாய்த்தான் இருந்தது.எப்படி அவனுக்கு இத்தனை வேகமாய்ப் பந்தை எறிய முடிகிறது என்று கோமதிக்கு ஆச்சர்யம். இமைக்கும் நேரத்தில் பந்து அவனைக் கடந்து சென்றது. அதிலும் ஒன்றிரண்டு பந்துகளை கோமதி தொட்டுவிட்டாலே பந்து கதறிக்கொண்டு வாத மரத்தைத் தாண்டிப் பாய்ந்தது. ஃபோர்.