கஞ்சுகம்

அதாகப்பட்டது நீங்கள் வனத்துள் 
மடுப்படுக்க விரும்புகிறீர்கள். பைன்மர முட்கள்
விலங்குகளின் கூர்மையான ரோமத்தைப் போல்.
ஏரி ஒன்று மரங்களின் பொய்த்தோற்ற 
சுரங்கப் பாதையின் முடிவில். 
மீன்கள் துள்ளுகின்றன ஆனந்தமாக
நீரின் அகன்ற மேற்பரப்பில். 
அந்த மலைப்பூனை மற்றும் கரடி.